FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, May 14, 2025

மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பால் டி.என்.பி.எஸ்.சி., நிபந்தனை ரத்து



12.05.2025 சென்னை : 'குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், கூடுதல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளில், மாற்று எழுத்தர் கோரும் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளி சான்றிதழுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசு தலைமை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது அரசு சுகாதார தலைமை கண்காணிப்பாளரிடம் பெற்ற மருத்துவச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கடந்த மாதம் அறிவித்தது.

இதற்கு, மாற்றுத்திறனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து தேர்வாணையம், மருத்துவ ஆணையத்தில் பெறப்பட்ட சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டாம்; பழைய முறைப்படி மாற்றுத்திறனாளி சான்றிதழை பதிவேற்றம் செய்தால் போதுமானது என்று தெரிவித்து உள்ளது.

இது குறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை:

மாற்று எழுத்தர் கோரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி சான்றிதழை, ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதலாக வேறு எந்த சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment