FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, May 14, 2025

மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பால் டி.என்.பி.எஸ்.சி., நிபந்தனை ரத்து



12.05.2025 சென்னை : 'குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், கூடுதல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளில், மாற்று எழுத்தர் கோரும் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளி சான்றிதழுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசு தலைமை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது அரசு சுகாதார தலைமை கண்காணிப்பாளரிடம் பெற்ற மருத்துவச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கடந்த மாதம் அறிவித்தது.

இதற்கு, மாற்றுத்திறனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து தேர்வாணையம், மருத்துவ ஆணையத்தில் பெறப்பட்ட சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டாம்; பழைய முறைப்படி மாற்றுத்திறனாளி சான்றிதழை பதிவேற்றம் செய்தால் போதுமானது என்று தெரிவித்து உள்ளது.

இது குறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை:

மாற்று எழுத்தர் கோரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி சான்றிதழை, ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதலாக வேறு எந்த சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment