FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, May 19, 2025

மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் தவறான தகவல் என எஸ்.பி., உறுதி

18.05.2025
ராம்நகர்: ''உயிரிழந்த மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை,'' என, ராம்நகர் எஸ்.பி., சீனிவாஸ் கவுடா உறுதி செய்துள்ளார்.

ராம்நகர் பிடதி அருகே பத்ராபுரா கிராமத்தில் உள்ள பழங்குடியினர் காலனியில் வசித்தவர் குஷி, 14. காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 12ம் தேதி பத்ராபுரா கிராமம் வழியாக செல்லும், ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள குழியில் இறந்து கிடந்தார்.

அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. குஷியை யாரோ பலாத்காரம் செய்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இதனால் சிறுமியின் உடலில் இருந்து 32 மாதிரிகள் எடுக்கப்பட்டு தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

துணை முதல்வர் சிவகுமார், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி ஆகியோர், குஷியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் ராம்நகர் மாவட்ட எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று அளித்த பேட்டி:

பத்ராபுரா கிராமத்தில் உயிரிழந்த சிறுமி குஷி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று, அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். தற்போது தடய அறிவியல் ஆய்வக அறிக்கை, எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் பலாத்காரம் எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியின் தலையின் காயத்திற்கான அறிகுறி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரியவரும். சிறுமி இறந்தது பற்றி சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல் பரப்புகின்றனர். அவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம். இந்த வழக்கில் 10 பேரிடம் விசாரித்தோம். யாரையும் கைது செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment