ராம்நகர்: மாற்றுத்திறனாளி சிறுமியை கொன்றவர்களை கைது செய்து, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ராம்நகர் பிடதி அருகே பத்ராபுரா கிராமத்தில் உள்ள ஹக்கிபிக்கி காலனியில் வசித்தவர் குஷி, 14. காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 11ம் தேதி மாலையில் இருந்து மாயமானார். மறுநாள் காலையில் பத்ராபுரா கிராமம் வழியாக செல்லும், ரயில் தண்டவாளத்தின் அருகில் உள்ள, பள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்த காயம் இருந்தது. பலாத்காரம் செய்து, குஷியை மர்மநபர்கள் கொன்றதாக, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
துணை முதல்வர் சிவகுமார் நேற்று முன்தினம், குஷி குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார். முதலில் கொலையாளிகளை கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குஷி இறந்து கிடந்த இடத்தில் இருந்து சில பொருட்களை, தடய அறிவியல் ஆய்வக ஊழியர்கள் எடுத்து சென்று உள்ளனர். அறிக்கை வெளியான பின்னரே, உண்மை தெரியவரும் என, ராம்நகர் மாவட்ட எஸ்.பி., சீனிவாஸ் கவுடா கூறி உள்ளார்.
ராம்நகர் பிடதி அருகே பத்ராபுரா கிராமத்தில் உள்ள ஹக்கிபிக்கி காலனியில் வசித்தவர் குஷி, 14. காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 11ம் தேதி மாலையில் இருந்து மாயமானார். மறுநாள் காலையில் பத்ராபுரா கிராமம் வழியாக செல்லும், ரயில் தண்டவாளத்தின் அருகில் உள்ள, பள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்த காயம் இருந்தது. பலாத்காரம் செய்து, குஷியை மர்மநபர்கள் கொன்றதாக, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
துணை முதல்வர் சிவகுமார் நேற்று முன்தினம், குஷி குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார். முதலில் கொலையாளிகளை கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குஷி இறந்து கிடந்த இடத்தில் இருந்து சில பொருட்களை, தடய அறிவியல் ஆய்வக ஊழியர்கள் எடுத்து சென்று உள்ளனர். அறிக்கை வெளியான பின்னரே, உண்மை தெரியவரும் என, ராம்நகர் மாவட்ட எஸ்.பி., சீனிவாஸ் கவுடா கூறி உள்ளார்.
No comments:
Post a Comment