FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, May 16, 2025

மாற்றுத்திறனாளி சிறுமி கொலை ஐந்து தனிப்படைகள் அமைப்பு



16.5.2025
ராம்நகர்: மாற்றுத்திறனாளி சிறுமியை கொன்றவர்களை கைது செய்து, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ராம்நகர் பிடதி அருகே பத்ராபுரா கிராமத்தில் உள்ள ஹக்கிபிக்கி காலனியில் வசித்தவர் குஷி, 14. காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 11ம் தேதி மாலையில் இருந்து மாயமானார். மறுநாள் காலையில் பத்ராபுரா கிராமம் வழியாக செல்லும், ரயில் தண்டவாளத்தின் அருகில் உள்ள, பள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்த காயம் இருந்தது. பலாத்காரம் செய்து, குஷியை மர்மநபர்கள் கொன்றதாக, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

துணை முதல்வர் சிவகுமார் நேற்று முன்தினம், குஷி குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார். முதலில் கொலையாளிகளை கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குஷி இறந்து கிடந்த இடத்தில் இருந்து சில பொருட்களை, தடய அறிவியல் ஆய்வக ஊழியர்கள் எடுத்து சென்று உள்ளனர். அறிக்கை வெளியான பின்னரே, உண்மை தெரியவரும் என, ராம்நகர் மாவட்ட எஸ்.பி., சீனிவாஸ் கவுடா கூறி உள்ளார்.


No comments:

Post a Comment