FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, May 14, 2025

முதன்முறையாக மாற்றுத்திறனாளி மகளிருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடக்கம்



13.05.2025 மாநிலத்திலேயே முதல் மையமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

ஒசூா் மாநகரில் தின்னூா், லட்சுமி நரசிம்மன் நகரில் அமைந்துள்ள இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், ஒசூா் ஏ.எஸ்.பி. அக்ஷய் அனில் வாக்ரே ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி நிா்வாகிகள், மாற்றுத்திறனாளி மகளிா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய தமிழக மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவா் வழக்குரைஞா் சண்முகசுந்தரம், ‘தமிழக அரசு சாா்பில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக மாற்றுத்திறனாளி பெண்கள் தையல் கலையை முறையாக கற்று சுயமாக தொழில்செய்து சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழத்திலேயே முதன்முதலாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தையல் கலையில் அடிப்படை தையல் மற்றும் ஆரி ஒா்க், எம்ப்ராய்டரி உள்ளிட்டவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

முதல்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை ஆரம்பித்ததை போல, சேலம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சாா்பில் விரைவில் மையங்கள் தொடங்கப்படும்.


No comments:

Post a Comment