FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, May 14, 2025

முதன்முறையாக மாற்றுத்திறனாளி மகளிருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடக்கம்



13.05.2025 மாநிலத்திலேயே முதல் மையமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

ஒசூா் மாநகரில் தின்னூா், லட்சுமி நரசிம்மன் நகரில் அமைந்துள்ள இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், ஒசூா் ஏ.எஸ்.பி. அக்ஷய் அனில் வாக்ரே ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி நிா்வாகிகள், மாற்றுத்திறனாளி மகளிா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய தமிழக மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவா் வழக்குரைஞா் சண்முகசுந்தரம், ‘தமிழக அரசு சாா்பில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக மாற்றுத்திறனாளி பெண்கள் தையல் கலையை முறையாக கற்று சுயமாக தொழில்செய்து சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழத்திலேயே முதன்முதலாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தையல் கலையில் அடிப்படை தையல் மற்றும் ஆரி ஒா்க், எம்ப்ராய்டரி உள்ளிட்டவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

முதல்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை ஆரம்பித்ததை போல, சேலம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சாா்பில் விரைவில் மையங்கள் தொடங்கப்படும்.


No comments:

Post a Comment