FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, May 14, 2025

முதன்முறையாக மாற்றுத்திறனாளி மகளிருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடக்கம்



13.05.2025 மாநிலத்திலேயே முதல் மையமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

ஒசூா் மாநகரில் தின்னூா், லட்சுமி நரசிம்மன் நகரில் அமைந்துள்ள இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், ஒசூா் ஏ.எஸ்.பி. அக்ஷய் அனில் வாக்ரே ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி நிா்வாகிகள், மாற்றுத்திறனாளி மகளிா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய தமிழக மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவா் வழக்குரைஞா் சண்முகசுந்தரம், ‘தமிழக அரசு சாா்பில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக மாற்றுத்திறனாளி பெண்கள் தையல் கலையை முறையாக கற்று சுயமாக தொழில்செய்து சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழத்திலேயே முதன்முதலாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தையல் கலையில் அடிப்படை தையல் மற்றும் ஆரி ஒா்க், எம்ப்ராய்டரி உள்ளிட்டவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

முதல்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை ஆரம்பித்ததை போல, சேலம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சாா்பில் விரைவில் மையங்கள் தொடங்கப்படும்.


No comments:

Post a Comment