FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, November 24, 2014

இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

24.11.2014 திருச்சி, : திருச்சி மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்பாண்டு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 45 வய துக்கு உட்பட்டவராக வும், அரசு மற்றும் தனி யார் நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். கை, கால் குறைபாடு டைய, காது கேளாத மற் றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மட் டுமே மோட் டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அடை யாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் பின் புறம், திருச்சி என்ற முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ் வாறு கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Friday, November 21, 2014

குறைபாடு இருந்தாலும் குழந்தைகளே

திருச்சி, கே.கே. நகரில் கடந்த 13 ஆண்டுகளாகப் பள்ளி நடத்தி வருகிறார் கீதா. இது ஊருக்கு ஊர் நடப்பதுதானே என்று யோசிக்கலாம். ஆனால் கீதாவின் பள்ளியில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளும், ஆட்டிசம் என்னும் குறைபாடு கொண்ட குழந்தைகளும் படிக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே சிறப்பாகப் பயிற்சியளித்து, அவர்களும் மற்றக் குழந்தைகள் போலப் பொதுப்பள்ளியில் படிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கி வருவதில்தான் தனித்து நிற்கிறார் கீதா.

அப்பா, அம்மா, பள்ளி, கல்லூரி என மிக இயல்பான வாழ்க்கைதான் கீதாவுக்கும். ஆனால் கல்லூரியில் காலடி எடுத்துவைத்த போதுதான் இவரது பயணம், சமூகத்துக்கான பாதையில் மாறியது. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கீதாவின் ஆசை. மகளை வெளியூருக்கு அனுப்பப் பெற்றவர்கள் யோசித்ததால், உள்ளூரிலேயே படிக்க வேண்டிய கட்டாயம். சேவை சார்ந்தே படிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக எம்.ஆர்.எஸ்சி எனப்படும் மூளைத்திறனில் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கும் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். அந்த வகைக் குறைபாடுகள் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத 90களில், படிப்புக்காகவும் பயிற்சிக்காகவும் ஹாலந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்றார். படிப்பும், பயிற்சியும் முடிந்ததும் கிராமப்புறப் பள்ளியொன்றில் சேர்ந்தார். பிறகு அவர் படித்த கல்லூரியிலேயே பேராசிரியர் பணி கிடைத்தபோது, சேவையின் வாசல் விரிந்தது.

“நான் படித்த ஹோலிகிராஸ் கல்லூரியிலேயே பணியாற்றும் வாய்ப்பு ஒரு வகை மகிழ்ச்சி என்றால், காது கேளாத குழந்தைகளுடன் பணியாற்றுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. பத்து ஆண்டுகள் நீடித்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு, செவித்திறனில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியைத் தொடங்கத் தீர்மானித்தேன். நான் வேலைக்குச் செல்வதற்கு முட்டுக்கட்டை போடாத என் புகுந்த வீடு, என் இந்த எண்ணத்துக்கும் துணை நின்றது. குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதற்காகவே சிறப்பு பி.எட். முடித்தேன். குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவது சவால் நிறைந்தது. அந்தச் சவாலை உறுதியுடன் சந்திப்பதற்காக என்னை தகுதிப்படுத்திக் கொண்டேன். இங்குப் பணிபுரியும் ஆசிரியர்களும் பயிற்சி பெற்றவர்கள்தான்” என்று பள்ளி தொடங்கிய நாட்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் கீதா.

பெற்றோர்களுக்கும் பங்கு உண்டு

“பொதுப் பள்ளிகளைப் போல முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை இங்கே நியமிக்க முடியாது. படிக்கிற மாணவர்கள், சிறப்புக் குழந்தைகள் என்பதால் அவர்களுக்கான கற்றலும் சிறப்பாகத்தானே இருக்க வேண்டும். அதனால் கற்றல் முறைக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் பாடங்கள் கற்றுத் தரப்படும்.

ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கும் பள்ளி துவங்கியிருக்கிறோம். இவர்களுக்கு ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி போன்றவற்றைத் தொடர்ச்சியாகத் தருகிறோம். இதற்காகவே எங்கள் பள்ளியில் எப்போதும் இரண்டு பயிற்சியாளர்கள் இருப்பார்கள்” என்று சொல்லும் கீதா, குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதில் பெற்றோர்களுக்கும் பங்கு இருக்கிறது என்கிறார்.

மனநிலை மாறவேண்டும்

“காதுகேளாத குழந்தைகளை முடிந்த வரை சீக்கிரமாகவே சிறப்புப் பள்ளியில் சேர்ப்பது நல்லது. அப்போதுதான் அவர்களுடைய குறைபாட்டின் அளவு கண்டறியப்பட்டு அதற்கேற்பக் காது கருவிகள் பொருத்தப்படும். பொதுவாக மூன்று வயதுக்குள் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு உதட்டசைவை வைத்தே பேசுவதைப் புரிந்துகொள்ளப் பயிற்சியளிப்பது சுலபம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளையும் கூடியவிரைவில் பள்ளியில் சேர்ப்பது, அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது. பொதுவாகத் தங்கள் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடு மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே பலர், குழந்தைகளைச் சிறப்புப் பள்ளியில் சேர்க்கத் தயங்குவர். இன்னும் சிலர் ஊரார் பேச்சுக்குப் பயந்து குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே அழைத்துவரவும் யோசிப்பார்கள். இந்த மனநிலையைத்தான் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்கிறார் கீதா.

குறைபாடுள்ள குழந்தைகளுக்கான இவர்களுடைய பாடத்திட்டம், ‘தனிப்பட்ட கல்வித் திட்டம்’. இதில் ஒவ்வொரு குழந்தையின் திறனுக்கும் ஏற்ப இவர்களே ஒரு இலக்கை நிர்ணயித்துவிடுகிறார்கள். அந்த இலக்கை அடைவதற்காகக் குழந்தையுடன் சேர்த்துப் பெற்றோருக்கும் பயிற்சியளிக்கிறார்கள். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளாக இருந்தால், அவர்களை ஒரு இடத்தில் சரியாக உட்கார வைப்பதில் இருந்து துவங்குகிறது இவர்கள் பயிற்சி. பிறகு கண்ணோடு கண் பார்த்தல், உருவங்களைக் கண்டறிதல், வடிவங்களை இனங்காணுதல் என்று படிப்படியாகச் சொல்லித் தருகிறார்கள். இதை வீட்டிலும் தொடரச் செய்கிறார்கள். அப்படியும் குழந்தையால் இலக்கை அடைய முடியவில்லை என்றால், அதற்கான புறக்காரணிகளைக் கண்டறிந்து மீண்டும் முயற்சிக்கிறார்கள். இந்த அணுகுமுறை நம்பிக்கை தருவதாக இருக்கிறது.தோற்றத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்குத் தீர்வு தேடவும் வழி இருக்கிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தைகளை இனங்கண்டறிவதுதான் சவால் நிறைந்தது. குழந்தைநல மருத்துவர்களும், மனநல மருத்துவர்களும் தான் நடத்தும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியையும், பிரவாக் ஆட்டிசம் குழந்தைகளுக்கான இடைக்காலப் பள்ளியையும் பரிந்துரைப்பதாகச் சொல்கிறார் கீதா.

“நேற்றுதான் கல்லூரி முடித்துவிட்டு, பணியில் சேர்ந்த மாதிரி இருக்கிறது. அதற்குள் 24 ஆண்டுகள் கடந்துவிட்டதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. இந்தப் பள்ளிகள் தவிர, கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, மாலை நேரத்தில் தனியாகப் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். எங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகள், இங்கே தரப்படும் பயிற்சியின் விளைவாகப் பொதுப் பள்ளியில் பயிலும் தகுதியை அடையவேண்டும். அதுதான் எங்கள் இலக்கு. காரணம்

அந்தக் குழந்தைகளும் திறமைசாலிகள்தான். நாம் அவர்களுக்குத் தர வேண்டியது எல்லாம் போதுமான அரவணைப்பும், வழிகாட்டலும்தான்” என்று அனுபவத்தையே வார்த்தைகளாகச் சொல்கிறார் கீதா. சேவைக்காக இவர் வாங்கிய விருதுகளைவிட, தன் பள்ளிக் குழந்தைகளின் முகத்தில் தெரியும் மலர்ச்சிதான் மிகப்பெரிய விருது என்கிறார். குழந்தைகளை மிஞ்சிய தீர்ப்பு இருக்கமுடியுமா என்ன?

Thursday, November 13, 2014

மாற்று திறனாளி பெண்ணிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த கண்டக்டருக்கு ரூ. 27000 அபராதம்

 08.11.2014, விழுப்புரம்:
அரசு பேருந்தில் பயணம் செய்த மாற்றுத்திறனாளியிடம் முழு கட்டணம் வசூலித்த நடத்துனர் மாற்றுத்திறனாளிக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் அருகே ஆசூரை சேர்ந்தவர் ராஜாராம் மகள் ராஜேஸ்வரி (21), மாற்றுத் திறனாளி. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி திருப்பதியில் இருந்து விழுப்புரத்திற்கு தமிழ்நாடு அரசு பேருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த பஸ்சில் வந்துள்ளார். புதுச்சேரி அருகே அரியூரைச் சேர்ந்த சம்பத் நடத்துனராக இருந்துள்ளார். பேருந்தில் ஏறியதும் ராஜேஸ்வரி தனக்கு அரசால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காண்பித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை கொடுத்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த நடத்துனர் இப்பேருந்தில் முழுகட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று கூறி திருப்பதியிலிருந்து விழுப்புரம் செல்ல மொத்த கட்டணத்தொகை ரூ.198ஐ வசூலித்துள்ளார். ஆனால் அரசாணைப்படி மாற்றுத்திறனாயிளிடம் நான்கில் ஒரு பங்காக ரூ.49.50 பைசா வசூலிக்க வேண்டும். ஆரசாணையை மீறி கூடுதலாக ரூ.148.50 வசூலித்துள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி வக்கீல் மூலம் விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அரசு விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தது மட்டுமல்லாமல் சக பயணிகள் முன்னிலையில் இழிவாக பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக அந்த மனுவில் கூறியிருந்தார். மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நேற்று நீதிபதி கணேசன் தீர்ப்பு கூறினார்.

அதில் நடத்துனர் சம்பத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.27 ஆயிரம் ராஜேஸ்வரிக்கு வழங்க வேண்டும். கூடுதலாக வசூலித்த டிக்கெட் கட்டணம் ரூ.148.50 பைசாவையும் இரண்டு மாதத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இதனை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடத்துனர் சம்பத்தின் மாத சம்பளத்தில் பிடித்து ராஜேஸ்வரிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை பேசும் சர்வதேச திரைப்பட விழா

வியாழன், 13 நவம்பர் 2014
அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஒரு அரங்கில் குறைந்தது 300 இருக்கைகள் இருந்தால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் எந்த இருக்கைக்கும் தங்களின் வீல் சேரியில் அமர்ந்து செல்லும் வகையில் வழி செய்திருக்க வேண்டும்.

அமெரிக்கா போல் மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் விழிப்புடன் இயங்கும் நாடு அல்ல நம்முடையது. மாற்றுத் திறனாகளின் துயரத்தை, அவர்களின் நடைமுறை சிரமங்களை சிறிதளவுகூட பொருட்படுத்தாதவர்கள் நாம்.

அவர்களின் துயரத்தை, சிரமங்களை அறிந்து கொள்ள, அவர்களின் வாழ்வை சொல்லும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளின் துயரத்தை விளக்கும் சர்வதேச திரைப்பட விழா வரும் 24 -ஆம் தேதி டெல்லியில் தொடங்கி மூன்று தினங்கள் நடக்க இருக்கிறது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களும், குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மட்டுமின்றி, நவீன தொழில்நுட்பத்தால் அவர்கள் தங்கள் குறைகளை களைந்து எப்படி சாமானியர்களைப் போல் வாழ்கிறார்கள் என்பதை சொல்லும் திரைப்படங்களும் இதில் அடக்கம்.

வாய்ப்பு உள்ளவர்கள் தவறவிடக் கூடாத திரைப்பட விழா.
 

Wednesday, November 12, 2014

Project Officer: Deaf People’s Health & Education Rights - SignHealth

Project Officer: Deaf People’s Health & Education Rights
Location: Kampala but with field engagements in the project districts
Period: 3 years
Background information
SignHealth Uganda (SU) is a NGO formed in 2009, to promote equitable access to social services and opportunities for Deaf young people and their families in Uganda through advocacy, cost effective and sustainable services. Our programme revolves around promotion of access to social services including health and education to deaf children and their families in Uganda with the aim of empowering people with hearing impairments to enjoy equal rights and opportunities.

The project
SignHealth Uganda is seeking to recruit a dynamic, energetic and result-oriented young professional to take up the position of Project officer (Deaf health and Education).
Upon being recruited, the Officer will provide support in coordinating fi eld activities to be implemented under the Deaf People’s Health & Education Rights in Masaka and Arua districts. This role calls for an inspirational and motivated individual with a passion to make a difference in the lives of deaf young people.

Qualifications, Experience and Abilities required:
The suitable candidate will preferably have qualifications including but not limited to:

  • Minimum of a Degree in Social Work, Community Development or related fields.
  • Experience in project planning, management, and evaluation.
  • Additional training on Reproductive health or Special Needs education would be an added advantage.
  • Good writing skills and computer literacy.
  • Good reporting and communication skills.
  • Experience in project cycle management, budget management, monitoring and evaluation tools, and systems.
  • Knowledge of local government structures, working with groups of young deaf people and general disability work.
  • Knowledge of deafness and Sign Language is an added advantage.

How to Apply

Interested individuals should deliver their application letters, CVs with copies of academic papers to the Director at the address below not later than Thursday, 20th November, 2014 at 5:00PM. SignHealth Uganda (SU) Plot 99 Martyrs’ Way Ntinda Tel +256 414 597 952 P.O.BOX 36563, Kampala Uganda Email: www.signhealth.uganda@gmail.com Only short listed candidates will be contacted.

| உதவித்தொகை கிடைக்காததால் மாற்றுத்திறனாளி மாணவன் அவதி; மாவட்ட நிர்வாகம் மனசு வைக்கணும் Dinamalar

| மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம் துவக்கம் Dinamalar

Tuesday, November 4, 2014

SAHI & Apollo Hospitals launch 'Deaf Free Telangana’ programme


Hyderabad:
 The Society to Aid the Hearing Impaired (SAHI), in association with Apollo Hospitals and Apollo Institute of Medical Sciences and Research, is taking up a 'Deaf Free Telangana' project.

The aim of this programme is to create awareness among the common public about the disorders causing deafness and to conduct camps to provide screening test to the public. With this, SAHI and Apollo hospitals are aiming to make Telangana deaf free.

Dr E CVinay Kumar, Head, Dept. of ENT, Apollo Health City and Secretary, SAHI, addressing media at a Press Conference at Apollo Health City, Jubilee Hills, said the first screening camp will be organised on the 19th of October at Chevella town as the first step towards creating a deaf free Telangana.

India has approximately 750,000, i.e., 5 per cent of the total population with hearing problems. About 40,000 of these individuals are hearing impaired from birth, or acquire hearing loss during early childhood. If left untreated in the first 3-5 years of life, these children end up remaining hearing and speech challenged throughout their lives.

SAHI is celebrating its 10th anniversary by initiating this ambitious programme of ‘Deaf Free Telangana’ project by adopting Chevella parliament constituency. The aim is to make Chevella town a completely deaf free zone in the next two years. As part of the project, intensive public awareness programmes, regular camps for children below the age of 15 years, distribution of hearing aids and corrective surgical procedures for the hearing impaired will be undertaken extensively. This programme will be implemented with the help of Apollo Hospitals and Apollo Institute of Medical Sciences and Research. “Every single time you help someone stand up, you are helping humanity rise,” said, Dr. Steve Maraboli.

SAHI was formed in 2004 by a group of ENT surgeons, audiologists, and hospital management. It is an Indian NGO that aims at helping underprivileged children with impaired hearing. SAHI mainly seeks to identify and aid children living in rural areas, with little or no access to modern medical treatment. Since its establishment, SAHI has been addressing this problem by means of conducting camps in remote areas of the state. Children with learning disabilities or hearing loss are given hearing aids by SAHI and those with ear diseases are given free ear surgeries.

மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மார்ச் மாதத்துக்குள் ஏற்படுத்த வேண்டும்

மும்பை,02 November 2014,
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து, அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநிலத்திலும், மத்திய அரசில் உள்ள மாற்றுத் திறனாளிகள் துறைகளின் தலைமை ஆணையர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சாய்வுதள படிக்கட்டுகள், மின்தூக்கிகள், கழிப்பறைகள், சக்கர நாற்காலிகள்

Saturday, November 1, 2014

அங்கன்வாடி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

31.10.2014,  திருப்பூர் :
அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், 14 திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 183 ஊழியர்கள்; 14 குறு அங்கன்வாடி மையங்களில் 196 உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி; மலைவாழ் மக்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விதø வ மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 40 வயது, மாற்றுத்திறனாளிகள் 25 முதல் 38 வயதுக்குள் இருக்கலாம். திருமணமானவராகவும், விண்ணப்பிக்கும் காலி பணியிட பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். முன்னுரிமை கோருவதற்கு, உரிய சான்று இருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், மலைவாழ் மக்களுக்கு 45 வயது, மாற்றுத்திறனாளிகள் 43 வயதுக்குள் இருக்கலாம். இன சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதால், அதே இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, வரும் 14ம் தேதி வரை அளிக்கலாம். தகுதியானோருக்கு மட்டும், நேர்காணல் கடிதம் அனுப்பப்படும், என, தெரிவித்துள்ளார்.

குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

01.11.2014, சென்னை, :
சென்னை கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் பொதுத்தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத்திறன், உளச்சார்பு, நேர நிர்வாகம் உள்ளிட்ட தலைப்புகளில் வகுப்புகள் நவம்பர் 5 முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளன. பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள் கிண்டியிலுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம்.