FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, April 5, 2017

பாரா பேஸ்கட்பால் இந்திய அணி கேப்டனாக திண்டுக்கல் மாணவர் தேர்வு

03.04.2017
பட்டிவீரன்பட்டி: காதுகேளாதோருக்கான இந்திய கூடைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக திண்டுக்கல்லை சேர்ந்த பள்ளி மாணவர் விஷ்ணுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுராம். தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கூடைப்பந்தாட்ட வீரர். பிறவியிலேயே வாய் பேச முடியாத இவருக்கு, செவித்திறன் குறைபாடும் உள்ளது. சென்னையில் காதுகேளாதோருக்கான தேசிய கூடைப்பந்தாட்ட போட்டி மார்ச் 28 - 31 வரை நடந்தது.

மொத்தம் 12 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், புதுச்சேரி அணிக்காக விஷ்ணுராம் விளையாடினார். சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார். வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள சர்வதேச காதுகேளாதோர் கூடைப்பந்தாட்ட போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ரமேஷ்பாபு முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர். தாய் சர்மிளா முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment