FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, April 5, 2017

பாரா பேஸ்கட்பால் இந்திய அணி கேப்டனாக திண்டுக்கல் மாணவர் தேர்வு

03.04.2017
பட்டிவீரன்பட்டி: காதுகேளாதோருக்கான இந்திய கூடைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக திண்டுக்கல்லை சேர்ந்த பள்ளி மாணவர் விஷ்ணுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுராம். தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கூடைப்பந்தாட்ட வீரர். பிறவியிலேயே வாய் பேச முடியாத இவருக்கு, செவித்திறன் குறைபாடும் உள்ளது. சென்னையில் காதுகேளாதோருக்கான தேசிய கூடைப்பந்தாட்ட போட்டி மார்ச் 28 - 31 வரை நடந்தது.

மொத்தம் 12 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், புதுச்சேரி அணிக்காக விஷ்ணுராம் விளையாடினார். சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார். வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள சர்வதேச காதுகேளாதோர் கூடைப்பந்தாட்ட போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ரமேஷ்பாபு முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர். தாய் சர்மிளா முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment