FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, April 5, 2017

பாரா பேஸ்கட்பால் இந்திய அணி கேப்டனாக திண்டுக்கல் மாணவர் தேர்வு

03.04.2017
பட்டிவீரன்பட்டி: காதுகேளாதோருக்கான இந்திய கூடைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக திண்டுக்கல்லை சேர்ந்த பள்ளி மாணவர் விஷ்ணுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுராம். தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கூடைப்பந்தாட்ட வீரர். பிறவியிலேயே வாய் பேச முடியாத இவருக்கு, செவித்திறன் குறைபாடும் உள்ளது. சென்னையில் காதுகேளாதோருக்கான தேசிய கூடைப்பந்தாட்ட போட்டி மார்ச் 28 - 31 வரை நடந்தது.

மொத்தம் 12 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், புதுச்சேரி அணிக்காக விஷ்ணுராம் விளையாடினார். சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார். வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள சர்வதேச காதுகேளாதோர் கூடைப்பந்தாட்ட போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ரமேஷ்பாபு முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர். தாய் சர்மிளா முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment