FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, April 5, 2017

தேசிய காது கேளாதோர் விளையாட்டு கேரளா, தமிழக அணிகள் சாம்பியன்

01.04.2017
சென்னை: தேசிய அளவிலான, காது கேளாதோர் விளையாட்டு போட்டிகளில், வாலிபால் பெண்கள் பிரிவில், தமிழக அணியும், ஆண்கள் பிரிவில், கேரள அணியும்

சாம்பியன் பட்டத்தை வென்றன.

தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு சங்க ஆதரவுடன், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், சென்னையில் நடந்தன.

அதில், தமிழகம் உட்பட, நாடு முழுவதும் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், பல்வேறு போட்டி களில் பங்கேற்று, பதக்கம் மற்றும்

சான்றிதழ்களை பெற்று சென்றனர்.

நேரு விளையாட்டு அரங்கில் உள்ள வாலிபால் கோர்ட்டில், வாலிபால்

போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவு போட்டியில், அபாரமாக விளையாடிய தமிழக அணி, மத்திய பிரதேச அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை

வென்றது. அதில், மூன்றாவது இடத்தை, ஆந்திர அணி பிடித்தது.

ஆண்கள் பிரிவில், கேரளா, தெலுங்கானா, ஒடிசா அணிகள், முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றன. இந்த அணிகளுக்கு, பதக்கம் மற்றும்

சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நேரு விளையாட்டு அரங்க, 'பி' மைதானத்தில், ஆண்கள் பிரிவு கால்பந்து போட்டி நடந்தது. அதில், தமிழக அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோல்களை அடித்து, முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றனர். இரண்டாம் இடத்தை,

கேரள அணியும், மூன்றாம் இடத்தை மேகாலயா அணியும் பிடித்தன.

No comments:

Post a Comment