FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, April 5, 2017

தேசிய காது கேளாதோர் விளையாட்டு கேரளா, தமிழக அணிகள் சாம்பியன்

01.04.2017
சென்னை: தேசிய அளவிலான, காது கேளாதோர் விளையாட்டு போட்டிகளில், வாலிபால் பெண்கள் பிரிவில், தமிழக அணியும், ஆண்கள் பிரிவில், கேரள அணியும்

சாம்பியன் பட்டத்தை வென்றன.

தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு சங்க ஆதரவுடன், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், சென்னையில் நடந்தன.

அதில், தமிழகம் உட்பட, நாடு முழுவதும் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், பல்வேறு போட்டி களில் பங்கேற்று, பதக்கம் மற்றும்

சான்றிதழ்களை பெற்று சென்றனர்.

நேரு விளையாட்டு அரங்கில் உள்ள வாலிபால் கோர்ட்டில், வாலிபால்

போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவு போட்டியில், அபாரமாக விளையாடிய தமிழக அணி, மத்திய பிரதேச அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை

வென்றது. அதில், மூன்றாவது இடத்தை, ஆந்திர அணி பிடித்தது.

ஆண்கள் பிரிவில், கேரளா, தெலுங்கானா, ஒடிசா அணிகள், முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றன. இந்த அணிகளுக்கு, பதக்கம் மற்றும்

சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நேரு விளையாட்டு அரங்க, 'பி' மைதானத்தில், ஆண்கள் பிரிவு கால்பந்து போட்டி நடந்தது. அதில், தமிழக அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோல்களை அடித்து, முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றனர். இரண்டாம் இடத்தை,

கேரள அணியும், மூன்றாம் இடத்தை மேகாலயா அணியும் பிடித்தன.

No comments:

Post a Comment