FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, April 5, 2017

தேசிய காது கேளாதோர் விளையாட்டு கேரளா, தமிழக அணிகள் சாம்பியன்

01.04.2017
சென்னை: தேசிய அளவிலான, காது கேளாதோர் விளையாட்டு போட்டிகளில், வாலிபால் பெண்கள் பிரிவில், தமிழக அணியும், ஆண்கள் பிரிவில், கேரள அணியும்

சாம்பியன் பட்டத்தை வென்றன.

தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு சங்க ஆதரவுடன், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், சென்னையில் நடந்தன.

அதில், தமிழகம் உட்பட, நாடு முழுவதும் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், பல்வேறு போட்டி களில் பங்கேற்று, பதக்கம் மற்றும்

சான்றிதழ்களை பெற்று சென்றனர்.

நேரு விளையாட்டு அரங்கில் உள்ள வாலிபால் கோர்ட்டில், வாலிபால்

போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவு போட்டியில், அபாரமாக விளையாடிய தமிழக அணி, மத்திய பிரதேச அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை

வென்றது. அதில், மூன்றாவது இடத்தை, ஆந்திர அணி பிடித்தது.

ஆண்கள் பிரிவில், கேரளா, தெலுங்கானா, ஒடிசா அணிகள், முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றன. இந்த அணிகளுக்கு, பதக்கம் மற்றும்

சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நேரு விளையாட்டு அரங்க, 'பி' மைதானத்தில், ஆண்கள் பிரிவு கால்பந்து போட்டி நடந்தது. அதில், தமிழக அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோல்களை அடித்து, முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றனர். இரண்டாம் இடத்தை,

கேரள அணியும், மூன்றாம் இடத்தை மேகாலயா அணியும் பிடித்தன.

No comments:

Post a Comment