FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, April 5, 2017

தேசிய காது கேளாதோர் விளையாட்டு கேரளா, தமிழக அணிகள் சாம்பியன்

01.04.2017
சென்னை: தேசிய அளவிலான, காது கேளாதோர் விளையாட்டு போட்டிகளில், வாலிபால் பெண்கள் பிரிவில், தமிழக அணியும், ஆண்கள் பிரிவில், கேரள அணியும்

சாம்பியன் பட்டத்தை வென்றன.

தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு சங்க ஆதரவுடன், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், சென்னையில் நடந்தன.

அதில், தமிழகம் உட்பட, நாடு முழுவதும் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், பல்வேறு போட்டி களில் பங்கேற்று, பதக்கம் மற்றும்

சான்றிதழ்களை பெற்று சென்றனர்.

நேரு விளையாட்டு அரங்கில் உள்ள வாலிபால் கோர்ட்டில், வாலிபால்

போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவு போட்டியில், அபாரமாக விளையாடிய தமிழக அணி, மத்திய பிரதேச அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை

வென்றது. அதில், மூன்றாவது இடத்தை, ஆந்திர அணி பிடித்தது.

ஆண்கள் பிரிவில், கேரளா, தெலுங்கானா, ஒடிசா அணிகள், முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றன. இந்த அணிகளுக்கு, பதக்கம் மற்றும்

சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நேரு விளையாட்டு அரங்க, 'பி' மைதானத்தில், ஆண்கள் பிரிவு கால்பந்து போட்டி நடந்தது. அதில், தமிழக அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோல்களை அடித்து, முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றனர். இரண்டாம் இடத்தை,

கேரள அணியும், மூன்றாம் இடத்தை மேகாலயா அணியும் பிடித்தன.

No comments:

Post a Comment