FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, April 8, 2017

விக்டோரியா மாணவர் விடுதி பாதுகாப்பு குறைபாடுடன் தான் இயங்குகிறது: கல்லூரி முதல்வர் ஒப்புதல்

07.04.2017, சென்னை: 
விக்டோரியா மாணவர் விடுதிபாதுகாப்பு குறைபாடுடன் தான் இயங்குகிறது என் கல்லூரி முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார். சென்னை மாநிலக்கல்லூரியின் விக்டோரியா மாணவர் விடுதியில் மாற்றுத்திறனாளி மாணவர் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்தது தொடர்பாக மாநிலக்கல்லூரி முதல்வர் பிரம்மானந்த பெருமாள் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: விக்டோரியா மாணவர் விடுதி கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற அம்சங்களையும் வசதியின்மை தொடர்பாக தொழில்நுட்ப துறைக்கு, சில ஆண்டுகளுக்கு முன் எடுத்து கூறினோம். அதுதொடர்பாக நினைவூட்டல்களையும் பல முறை அளித்துள்ளோம்.

வெளிமாவட்ட மாணவர்கள் (குறிப்பாக காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள்) நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சில பாதுகாப்பு குறைபாடு விடுதியில் இருப்பதாக கருதினாலும், மாணவர்கள் தொடர்ந்து அங்கு தங்கிக்ெகாள்ள அனுமதிக்கப்படுகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் விடுதி வளாகத்தில் கார் பார்க்கிங் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கிரிக்கெட் மைதான நிர்வாகத்திடம் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.1000 பெறப்பட்டு விக்டோரியா மாணவர் விடுதியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. அந்த பணம் விடுதி மாணவர்களுக்காக செலவிடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment