FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, April 8, 2017

விக்டோரியா மாணவர் விடுதி பாதுகாப்பு குறைபாடுடன் தான் இயங்குகிறது: கல்லூரி முதல்வர் ஒப்புதல்

07.04.2017, சென்னை: 
விக்டோரியா மாணவர் விடுதிபாதுகாப்பு குறைபாடுடன் தான் இயங்குகிறது என் கல்லூரி முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார். சென்னை மாநிலக்கல்லூரியின் விக்டோரியா மாணவர் விடுதியில் மாற்றுத்திறனாளி மாணவர் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்தது தொடர்பாக மாநிலக்கல்லூரி முதல்வர் பிரம்மானந்த பெருமாள் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: விக்டோரியா மாணவர் விடுதி கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற அம்சங்களையும் வசதியின்மை தொடர்பாக தொழில்நுட்ப துறைக்கு, சில ஆண்டுகளுக்கு முன் எடுத்து கூறினோம். அதுதொடர்பாக நினைவூட்டல்களையும் பல முறை அளித்துள்ளோம்.

வெளிமாவட்ட மாணவர்கள் (குறிப்பாக காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள்) நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சில பாதுகாப்பு குறைபாடு விடுதியில் இருப்பதாக கருதினாலும், மாணவர்கள் தொடர்ந்து அங்கு தங்கிக்ெகாள்ள அனுமதிக்கப்படுகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் விடுதி வளாகத்தில் கார் பார்க்கிங் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கிரிக்கெட் மைதான நிர்வாகத்திடம் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.1000 பெறப்பட்டு விக்டோரியா மாணவர் விடுதியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. அந்த பணம் விடுதி மாணவர்களுக்காக செலவிடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment