FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, April 8, 2017

விக்டோரியா மாணவர் விடுதி பாதுகாப்பு குறைபாடுடன் தான் இயங்குகிறது: கல்லூரி முதல்வர் ஒப்புதல்

07.04.2017, சென்னை: 
விக்டோரியா மாணவர் விடுதிபாதுகாப்பு குறைபாடுடன் தான் இயங்குகிறது என் கல்லூரி முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார். சென்னை மாநிலக்கல்லூரியின் விக்டோரியா மாணவர் விடுதியில் மாற்றுத்திறனாளி மாணவர் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்தது தொடர்பாக மாநிலக்கல்லூரி முதல்வர் பிரம்மானந்த பெருமாள் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: விக்டோரியா மாணவர் விடுதி கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற அம்சங்களையும் வசதியின்மை தொடர்பாக தொழில்நுட்ப துறைக்கு, சில ஆண்டுகளுக்கு முன் எடுத்து கூறினோம். அதுதொடர்பாக நினைவூட்டல்களையும் பல முறை அளித்துள்ளோம்.

வெளிமாவட்ட மாணவர்கள் (குறிப்பாக காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள்) நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சில பாதுகாப்பு குறைபாடு விடுதியில் இருப்பதாக கருதினாலும், மாணவர்கள் தொடர்ந்து அங்கு தங்கிக்ெகாள்ள அனுமதிக்கப்படுகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் விடுதி வளாகத்தில் கார் பார்க்கிங் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கிரிக்கெட் மைதான நிர்வாகத்திடம் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.1000 பெறப்பட்டு விக்டோரியா மாணவர் விடுதியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. அந்த பணம் விடுதி மாணவர்களுக்காக செலவிடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment