FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, April 8, 2017

விக்டோரியா மாணவர் விடுதி பாதுகாப்பு குறைபாடுடன் தான் இயங்குகிறது: கல்லூரி முதல்வர் ஒப்புதல்

07.04.2017, சென்னை: 
விக்டோரியா மாணவர் விடுதிபாதுகாப்பு குறைபாடுடன் தான் இயங்குகிறது என் கல்லூரி முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார். சென்னை மாநிலக்கல்லூரியின் விக்டோரியா மாணவர் விடுதியில் மாற்றுத்திறனாளி மாணவர் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்தது தொடர்பாக மாநிலக்கல்லூரி முதல்வர் பிரம்மானந்த பெருமாள் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: விக்டோரியா மாணவர் விடுதி கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற அம்சங்களையும் வசதியின்மை தொடர்பாக தொழில்நுட்ப துறைக்கு, சில ஆண்டுகளுக்கு முன் எடுத்து கூறினோம். அதுதொடர்பாக நினைவூட்டல்களையும் பல முறை அளித்துள்ளோம்.

வெளிமாவட்ட மாணவர்கள் (குறிப்பாக காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள்) நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சில பாதுகாப்பு குறைபாடு விடுதியில் இருப்பதாக கருதினாலும், மாணவர்கள் தொடர்ந்து அங்கு தங்கிக்ெகாள்ள அனுமதிக்கப்படுகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் விடுதி வளாகத்தில் கார் பார்க்கிங் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கிரிக்கெட் மைதான நிர்வாகத்திடம் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.1000 பெறப்பட்டு விக்டோரியா மாணவர் விடுதியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. அந்த பணம் விடுதி மாணவர்களுக்காக செலவிடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment