FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, April 5, 2017

காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

01.04.2017
நம்பிக்கை தான் வாழ்க்கை, மனதில் உறுதி இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். அதற்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிருபிக்கும் வகையில், வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

பல கல்லுாரிகளில் அலைந்து திரிந்து சீட் கிடைக்காத மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை அரவணைத்து உற்சாகப்படுத்கி வருகிறது இக்கல்லுாரி நிர்வாகம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின், 80 சதவிகிதம் பேர் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் தான் என்பது முற்றிலும் உண்மை.பச்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லத்துரை - யோகமலர் தம்பதிகளின் மகள் ரஞ்சிதா. இவருக்கு காதுகேளாத சூழ்நிலையில், எங்கே நமக்கு கல்லுாரியில் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்ற நேரத்தில், கல்லுாரியில் இவருக்கு சீட் வழங்கியதோடு, சிறப்பு கவனம் செலுத்தி பாடம் சொல்லித்தருகின்றனர்.இது குறித்து மாணவியின் தந்தை செல்லத்துரை நம்மிடம் கூறுகையில், ''எனது இரண்டாவது மகள் ரஞ்சிதா. இவர் 6ம் வகுப்பு படிக்கும் போது திடீரென்று காதுகேட்கவில்லை. மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றனர். கூலி வேலை செய்து பிழைக்கும் எங்களுக்கு அவ்வளவு பணம் செலுத்த இயலாது என்பதால், இறைவன் விட்ட வழியில் மகளை தொடர்ந்து படிக்க வைக்கிறேன். இன்று வரை எந்த வகுப்பிலும் பெயிலாகாமல் படித்து வருகிறாள். எனது மகளுக்கு சீட் வழங்கிய வால்பாறை கல்லுாரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.கல்லுாரி தமிழ்பேராசிரியர்கள் கோவிந்தராஜ், தமிழ்கனி ஆகியோரிடம் கேட்ட போது, ''இக்கல்லுாரியில் பி.ஏ.,தமிழ் முதலாமாண்டு படித்துவரும் மாணவி ரஞ்சிதாவுக்கு காது மட்டும் தான் கேட்காது. ஆனால் நாம் சொல்லித்தரும் பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து, தேர்வை திறம்பட எழுதுகிறாள். மேலும் இந்த மாணவிக்கு மட்டும் தனியாக சிறப்பு பாடம் சொல்லித்தரப்படுகிறது. மாணவி படிப்பில் மட்டுமல்லாது கவிதை எழுதுவதிலும், இசை அமைப்பதிலும், விளையாட்டு போட்டிகளிலும் அதிக அளவில் பங்கு பெற்று சாதனை படைத்துள்ளார்,'' என்றனர். மாணவி ரஞ்சிதாவிடம் கேட்ட போது, ''வால்பாறை கல்லுாரியில் 'சீட்' கிடைத்தது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். எனது ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் என்று கல்லுாரி போராசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் தான் தெரிகின்றனர். நன்றாக கவிதையும் எழுதுவேன். நான் நன்றாக படித்து என்னை போன்ற ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்பது தான் எனது ஆசை,'' என்றார்.இவரது லட்சியம் நிறைவேற நாமும் மனதார வாழ்த்தலாமே!-

No comments:

Post a Comment