FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, April 5, 2017

காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

01.04.2017
நம்பிக்கை தான் வாழ்க்கை, மனதில் உறுதி இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். அதற்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிருபிக்கும் வகையில், வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

பல கல்லுாரிகளில் அலைந்து திரிந்து சீட் கிடைக்காத மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை அரவணைத்து உற்சாகப்படுத்கி வருகிறது இக்கல்லுாரி நிர்வாகம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின், 80 சதவிகிதம் பேர் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் தான் என்பது முற்றிலும் உண்மை.பச்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லத்துரை - யோகமலர் தம்பதிகளின் மகள் ரஞ்சிதா. இவருக்கு காதுகேளாத சூழ்நிலையில், எங்கே நமக்கு கல்லுாரியில் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்ற நேரத்தில், கல்லுாரியில் இவருக்கு சீட் வழங்கியதோடு, சிறப்பு கவனம் செலுத்தி பாடம் சொல்லித்தருகின்றனர்.இது குறித்து மாணவியின் தந்தை செல்லத்துரை நம்மிடம் கூறுகையில், ''எனது இரண்டாவது மகள் ரஞ்சிதா. இவர் 6ம் வகுப்பு படிக்கும் போது திடீரென்று காதுகேட்கவில்லை. மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றனர். கூலி வேலை செய்து பிழைக்கும் எங்களுக்கு அவ்வளவு பணம் செலுத்த இயலாது என்பதால், இறைவன் விட்ட வழியில் மகளை தொடர்ந்து படிக்க வைக்கிறேன். இன்று வரை எந்த வகுப்பிலும் பெயிலாகாமல் படித்து வருகிறாள். எனது மகளுக்கு சீட் வழங்கிய வால்பாறை கல்லுாரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.கல்லுாரி தமிழ்பேராசிரியர்கள் கோவிந்தராஜ், தமிழ்கனி ஆகியோரிடம் கேட்ட போது, ''இக்கல்லுாரியில் பி.ஏ.,தமிழ் முதலாமாண்டு படித்துவரும் மாணவி ரஞ்சிதாவுக்கு காது மட்டும் தான் கேட்காது. ஆனால் நாம் சொல்லித்தரும் பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து, தேர்வை திறம்பட எழுதுகிறாள். மேலும் இந்த மாணவிக்கு மட்டும் தனியாக சிறப்பு பாடம் சொல்லித்தரப்படுகிறது. மாணவி படிப்பில் மட்டுமல்லாது கவிதை எழுதுவதிலும், இசை அமைப்பதிலும், விளையாட்டு போட்டிகளிலும் அதிக அளவில் பங்கு பெற்று சாதனை படைத்துள்ளார்,'' என்றனர். மாணவி ரஞ்சிதாவிடம் கேட்ட போது, ''வால்பாறை கல்லுாரியில் 'சீட்' கிடைத்தது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். எனது ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் என்று கல்லுாரி போராசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் தான் தெரிகின்றனர். நன்றாக கவிதையும் எழுதுவேன். நான் நன்றாக படித்து என்னை போன்ற ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்பது தான் எனது ஆசை,'' என்றார்.இவரது லட்சியம் நிறைவேற நாமும் மனதார வாழ்த்தலாமே!-

No comments:

Post a Comment