FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, April 5, 2017

காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

01.04.2017
நம்பிக்கை தான் வாழ்க்கை, மனதில் உறுதி இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். அதற்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிருபிக்கும் வகையில், வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

பல கல்லுாரிகளில் அலைந்து திரிந்து சீட் கிடைக்காத மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை அரவணைத்து உற்சாகப்படுத்கி வருகிறது இக்கல்லுாரி நிர்வாகம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின், 80 சதவிகிதம் பேர் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் தான் என்பது முற்றிலும் உண்மை.பச்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லத்துரை - யோகமலர் தம்பதிகளின் மகள் ரஞ்சிதா. இவருக்கு காதுகேளாத சூழ்நிலையில், எங்கே நமக்கு கல்லுாரியில் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்ற நேரத்தில், கல்லுாரியில் இவருக்கு சீட் வழங்கியதோடு, சிறப்பு கவனம் செலுத்தி பாடம் சொல்லித்தருகின்றனர்.இது குறித்து மாணவியின் தந்தை செல்லத்துரை நம்மிடம் கூறுகையில், ''எனது இரண்டாவது மகள் ரஞ்சிதா. இவர் 6ம் வகுப்பு படிக்கும் போது திடீரென்று காதுகேட்கவில்லை. மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றனர். கூலி வேலை செய்து பிழைக்கும் எங்களுக்கு அவ்வளவு பணம் செலுத்த இயலாது என்பதால், இறைவன் விட்ட வழியில் மகளை தொடர்ந்து படிக்க வைக்கிறேன். இன்று வரை எந்த வகுப்பிலும் பெயிலாகாமல் படித்து வருகிறாள். எனது மகளுக்கு சீட் வழங்கிய வால்பாறை கல்லுாரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.கல்லுாரி தமிழ்பேராசிரியர்கள் கோவிந்தராஜ், தமிழ்கனி ஆகியோரிடம் கேட்ட போது, ''இக்கல்லுாரியில் பி.ஏ.,தமிழ் முதலாமாண்டு படித்துவரும் மாணவி ரஞ்சிதாவுக்கு காது மட்டும் தான் கேட்காது. ஆனால் நாம் சொல்லித்தரும் பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து, தேர்வை திறம்பட எழுதுகிறாள். மேலும் இந்த மாணவிக்கு மட்டும் தனியாக சிறப்பு பாடம் சொல்லித்தரப்படுகிறது. மாணவி படிப்பில் மட்டுமல்லாது கவிதை எழுதுவதிலும், இசை அமைப்பதிலும், விளையாட்டு போட்டிகளிலும் அதிக அளவில் பங்கு பெற்று சாதனை படைத்துள்ளார்,'' என்றனர். மாணவி ரஞ்சிதாவிடம் கேட்ட போது, ''வால்பாறை கல்லுாரியில் 'சீட்' கிடைத்தது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். எனது ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் என்று கல்லுாரி போராசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் தான் தெரிகின்றனர். நன்றாக கவிதையும் எழுதுவேன். நான் நன்றாக படித்து என்னை போன்ற ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்பது தான் எனது ஆசை,'' என்றார்.இவரது லட்சியம் நிறைவேற நாமும் மனதார வாழ்த்தலாமே!-

No comments:

Post a Comment