FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, April 5, 2017

காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியிடம் 'சில்மிஷம்' : வேன் டிரைவர் கைது

03.04.2017  கோவை: 
கோவையில், வாய் பேச முடியாத, ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேன் டிரைவரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில், கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கு, ஐந்து வயதில், காது கேட்காத, வாய் பேச முடியாத மகள் உள்ளார். இந்த சிறுமி, காது கேளாதோர் பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வருகிறாள். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன், பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமிக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனை அழைத்து சென்று சோதனை செய்தபோது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கோவை மாநகர அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சிறுமிக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் உதவியுடன், 'சைகை' மொழியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிறுமியை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் டிரைவர் பாலன், 48, பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment