FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, April 5, 2017

காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியிடம் 'சில்மிஷம்' : வேன் டிரைவர் கைது

03.04.2017  கோவை: 
கோவையில், வாய் பேச முடியாத, ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேன் டிரைவரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில், கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கு, ஐந்து வயதில், காது கேட்காத, வாய் பேச முடியாத மகள் உள்ளார். இந்த சிறுமி, காது கேளாதோர் பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வருகிறாள். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன், பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமிக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனை அழைத்து சென்று சோதனை செய்தபோது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கோவை மாநகர அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சிறுமிக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் உதவியுடன், 'சைகை' மொழியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிறுமியை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் டிரைவர் பாலன், 48, பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment