FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, April 5, 2017

காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியிடம் 'சில்மிஷம்' : வேன் டிரைவர் கைது

03.04.2017  கோவை: 
கோவையில், வாய் பேச முடியாத, ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேன் டிரைவரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில், கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கு, ஐந்து வயதில், காது கேட்காத, வாய் பேச முடியாத மகள் உள்ளார். இந்த சிறுமி, காது கேளாதோர் பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வருகிறாள். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன், பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமிக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனை அழைத்து சென்று சோதனை செய்தபோது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கோவை மாநகர அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சிறுமிக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் உதவியுடன், 'சைகை' மொழியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிறுமியை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் டிரைவர் பாலன், 48, பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment