FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, April 5, 2017

காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியிடம் 'சில்மிஷம்' : வேன் டிரைவர் கைது

03.04.2017  கோவை: 
கோவையில், வாய் பேச முடியாத, ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேன் டிரைவரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில், கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கு, ஐந்து வயதில், காது கேட்காத, வாய் பேச முடியாத மகள் உள்ளார். இந்த சிறுமி, காது கேளாதோர் பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வருகிறாள். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன், பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமிக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனை அழைத்து சென்று சோதனை செய்தபோது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கோவை மாநகர அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சிறுமிக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் உதவியுடன், 'சைகை' மொழியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிறுமியை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் டிரைவர் பாலன், 48, பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment