FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, January 4, 2018

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

03.01.2018
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி இமாச்சல பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை ரஜ்னீஷ் (எ) விக்கி என்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததில் அப்பெண் கர்ப்பமடைந்தார். இதன்மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹமீர்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ரஜ்னீஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.20,000 நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.30,000 நஷ்ட ஈட்டு தொகை வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து இமாச்சல பிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், “பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் நஷ்டஈடு வழங்க எந்த திட்டமும் அரசிடம் இல்லை. பாதிக்கப்பட்டவர் இறந்தால் அல்லது உடல் உறுப்பு பாதிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வழங்குவதற்கு மட்டுமே மாநில அரசு திட்டத்தில் இடமுண்டு. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.சலமேஸ்வர், எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு முன்பாக இம்மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பாவிட்டாலும், பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி என்பதையும் அவர் ஒரு பெண் குழந்தையின் தாய் என்பதையும் மனதில் கொண்டு உத்தரவை மாற்றியமைக்க விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இமாச்சல பிரதேச அரசு ரூ.15 லட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இந்த தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வைப்பு நிதியாக செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டியை அவரது பெற்றோரிடம் வழங்க வேண்டும். அந்த வட்டித் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனுக்காக செலவழிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment