FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 4, 2018

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

03.01.2018
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி இமாச்சல பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை ரஜ்னீஷ் (எ) விக்கி என்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததில் அப்பெண் கர்ப்பமடைந்தார். இதன்மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹமீர்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ரஜ்னீஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.20,000 நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.30,000 நஷ்ட ஈட்டு தொகை வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து இமாச்சல பிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், “பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் நஷ்டஈடு வழங்க எந்த திட்டமும் அரசிடம் இல்லை. பாதிக்கப்பட்டவர் இறந்தால் அல்லது உடல் உறுப்பு பாதிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வழங்குவதற்கு மட்டுமே மாநில அரசு திட்டத்தில் இடமுண்டு. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.சலமேஸ்வர், எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு முன்பாக இம்மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பாவிட்டாலும், பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி என்பதையும் அவர் ஒரு பெண் குழந்தையின் தாய் என்பதையும் மனதில் கொண்டு உத்தரவை மாற்றியமைக்க விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இமாச்சல பிரதேச அரசு ரூ.15 லட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இந்த தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வைப்பு நிதியாக செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டியை அவரது பெற்றோரிடம் வழங்க வேண்டும். அந்த வட்டித் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனுக்காக செலவழிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment