FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, January 13, 2018

‘மைம்’ மனிதனின் மனிதநேயம்!

மைம் கலையைச் சிலர் பொழுதுபோக்குக்காகவும் சந்தோஷத்துக்காகவும் செய்கிறார்கள். இன்னும் சிலரோ அந்தக் கலையின் மூலம் விரும்பிய கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக மெனக்கெடுகிறார்கள். இதில், சென்னையைச் சேர்ந்த வீரமணி இரண்டாம் ரகம். காது கேளாத, வாய் பேச முடியாத இந்த இளைஞர், தான் கற்று அறிந்த மைம் கலையின் மூலம் வாகன ஓட்டிகளிடையே சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

போக்குவரத்து நெரிசலுக்கோ சாலை விதிமுறைகளை மீறுவதற்கோ சென்னையில் பஞ்சமில்லை. அதுவும் ‘பீக் ஹவர்ஸ்’ என்றழைக்கப்படும் நெருக்கடி நேரத்தில் இந்த இரண்டும் சகஜமாக சென்னை சாலைகளில் நடக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில் விபத்துகளும் அரங்கேறும். இயந்திரகதியில் இயங்கும் சென்னையில் இவற்றையெல்லாம் சாதாரணமாகக் கடந்து செல்வோரே அநேகர். சிலர் மட்டுமே இதை மாற்ற முனைகிறார்கள்.

சென்னையில் ஒரு சாலை விபத்து ஏற்படுத்திய தாக்கம், மக்கள் மத்தியில் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் யோசனையை வீரமணிக்குத் தந்தது. அதற்காக அவர் தேர்ந்தெடுத்ததுதான் மைம் கலை. உடல்மொழியால் (சைகை) சொல்ல வரும் விஷயத்தைச் சொல்லும் கலை என்பதால், வீரமணிக்கு அது சுலபமாகப் போனது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே சென்னை நகரச் சாலைகளில் விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்திவருகிறார்.

இதெல்லாம் எப்படிச் சாத்தியம் எனக் கேட்டோம். “கண் முன்னே கண நேரத்தில் விபத்தால் ஒருவரின் வாழ்க்கை முடிவது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது. அப்படி ஒரு நாள் சாலையைக் கடப்பதற்காக, சிக்னலில் காத்துக்கொண்டிருந்தபோது, என் கண் முன்னே அகோரமாக ஒரு விபத்து நடந்தது. அது என் மனதை மிகவும் பாதித்தது. இந்த விபத்து என் மனதில் நீண்ட நாட்களாக ஒரு வடுவாகவே இருந்ததால், அதை மாற்ற நம்மால் என்ன செய்ய முடியும் என யோசிக்க ஆரம்பித்தேன். அதற்காகச் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். பலரிடமும் இது பற்றி விசாரித்தபோது, நான் கற்ற மைம் கலை மூலமே விழிப்புணர்வு தரலாம் என்று வழிகாட்டினார்கள்.

பின்னர், ‘தோழன்’ என்ற தன்னார்வத் தொண்டு மைய உதவியோடு சிக்னல்களில் சாலை விழிப்புணர்வைச் செய்யத் தொடங்கினேன்” என்கிறார் வீரமணி.

வாரத்தில் இருமுறை சிக்னலில் நின்றுகொண்டு விழிப்புணர்வு செய்வதை தற்போது வாடிக்கையாக வைத்திருக்கிறார் வீரமணி. சாலையில் சிக்னல்களுக்காகக் காத்திருப்பவர்களிடம், ஹெல்மெட் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும், ஹெட்செட் போட்டுக்கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது எனப் பதாகைகளை மாட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். அப்படிச் சென்றால் என்ன நடக்கும் என்பதை மைம் கலை மூலம் செய்து காண்பிக்கிறார் வீரமணி.

“பொதுவாக, சில விஷயங்களைக் கூறினால், அதை மக்கள் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுவார்கள். மைம் மூலம் செய்யும்போது முகத்தில் வெள்ளை வர்ணம் பூசிக்கொண்டு வாகன ஓட்டிகளைக் கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். அதனால், நான் சொல்ல வரும் கருத்து அவர்கள் மனதில் நிச்சயம் பதிகிறது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் கவனித்திருக்கிறேன். சாலைகளில் மட்டுமல்ல, அம்பத்தூரில் உள்ள என் வீட்டின் பின் பக்கத்தில் உள்ள பூங்காவிலும் மைம் மூலம் அவ்வப்போது சாலை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்” என்கிறார் வீரமணி.

இந்த மாற்றுத் திறனாளியின் தன்னார்வ சேவை, வாகன ஓட்டிகள் மத்தியில் கொஞ்சமாவது மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என நம்புவோம்!

No comments:

Post a Comment