FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 16, 2018

மேற்கு மண்டலத்தில் ஆடியோ வெர்பல் மையம்:கோவை அரசு மருத்துவமனையில் விரைவில் துவக்கம்

16.01.2018
கோவை;மேற்கு மண்டலத்தில், முதல் முறையாக, 'ஆடியோ வெர்பல்' பயிற்சி மையம், கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட உள்ளது.பிறவியில் அல்லது இடையிலோ செவித்திறன் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் வாய் பேச முடியாது. இப்பிரச்னைக்கு 'காக்லியர் இம்ப்ளான்டேஷன்' எனும், நவீன அறுவை சிகிச்சை மூலம் தீர்வு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சையில், காந்தம் போன்ற கருவி உட்செவியில், பொருத்தப்படும். தொடர்ந்து, மூன்று வாரங்களுக்குப் பின் காதுமடலில் வெளிப்புறக்கருவி பொருத்தப்படும். இக்கருவி ஒலியை கேட்க உதவும்.கருவி பொருத்தப்பட்ட ஓராண்டுக்கு பின், தீவிர ஒலி வழி பயிற்சி மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஆடியோ வெர்பல் தெரபி மையங்கள்(ஏ.வி.டி.,) உதவிகரமாக இருக்கின்றன. பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இந்த மையங்கள், மேற்கு மண்டலத்தில், வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லை. மேற்கு மண்டலத்தில், முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் இம்மையம் விரைவில் துவங்கப்பட உள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், 2013ம் ஆண்டு முதல் இதுவரை, 185 குழந்தைகளுக்கு காக்லியர் இம்ப்ளான்டேஷன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையிலேயே இதை விட, குறைந்த அறுவைசிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, இந்த ஏ.வி.டி., மையத்தை கோவையில் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,''காக்லியர் இம்ப்ளான்டேஷன் அறுவை சிகிச்சைக்கு பின் ஏ.வி.டி., மையங்களின் பணி முக்கியமானது.இதன் மூலமே குழந்தைகள் கேட்கும் சக்தி உணர்ந்து, ஒலியின் வடிவங்களை அறிந்து கொள்வர். இதற்காகவே இச்சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் பங்களிப்பில் குழந்தைகளுக்கு பயிற்சிக்கு வழங்கப்பட்டு வந்தது.இனி சிகிச்சை பெறுவோருக்கு பயிற்சிக்கு வெளி இடங்கள் செல்ல தேவையில்லை, விரைவில் மையம் செயல்பாட்டுக்கு வர உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment