FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, January 16, 2018

மேற்கு மண்டலத்தில் ஆடியோ வெர்பல் மையம்:கோவை அரசு மருத்துவமனையில் விரைவில் துவக்கம்

16.01.2018
கோவை;மேற்கு மண்டலத்தில், முதல் முறையாக, 'ஆடியோ வெர்பல்' பயிற்சி மையம், கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட உள்ளது.பிறவியில் அல்லது இடையிலோ செவித்திறன் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் வாய் பேச முடியாது. இப்பிரச்னைக்கு 'காக்லியர் இம்ப்ளான்டேஷன்' எனும், நவீன அறுவை சிகிச்சை மூலம் தீர்வு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சையில், காந்தம் போன்ற கருவி உட்செவியில், பொருத்தப்படும். தொடர்ந்து, மூன்று வாரங்களுக்குப் பின் காதுமடலில் வெளிப்புறக்கருவி பொருத்தப்படும். இக்கருவி ஒலியை கேட்க உதவும்.கருவி பொருத்தப்பட்ட ஓராண்டுக்கு பின், தீவிர ஒலி வழி பயிற்சி மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஆடியோ வெர்பல் தெரபி மையங்கள்(ஏ.வி.டி.,) உதவிகரமாக இருக்கின்றன. பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இந்த மையங்கள், மேற்கு மண்டலத்தில், வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லை. மேற்கு மண்டலத்தில், முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் இம்மையம் விரைவில் துவங்கப்பட உள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், 2013ம் ஆண்டு முதல் இதுவரை, 185 குழந்தைகளுக்கு காக்லியர் இம்ப்ளான்டேஷன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையிலேயே இதை விட, குறைந்த அறுவைசிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, இந்த ஏ.வி.டி., மையத்தை கோவையில் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,''காக்லியர் இம்ப்ளான்டேஷன் அறுவை சிகிச்சைக்கு பின் ஏ.வி.டி., மையங்களின் பணி முக்கியமானது.இதன் மூலமே குழந்தைகள் கேட்கும் சக்தி உணர்ந்து, ஒலியின் வடிவங்களை அறிந்து கொள்வர். இதற்காகவே இச்சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் பங்களிப்பில் குழந்தைகளுக்கு பயிற்சிக்கு வழங்கப்பட்டு வந்தது.இனி சிகிச்சை பெறுவோருக்கு பயிற்சிக்கு வெளி இடங்கள் செல்ல தேவையில்லை, விரைவில் மையம் செயல்பாட்டுக்கு வர உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment