FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, January 16, 2018

மேற்கு மண்டலத்தில் ஆடியோ வெர்பல் மையம்:கோவை அரசு மருத்துவமனையில் விரைவில் துவக்கம்

16.01.2018
கோவை;மேற்கு மண்டலத்தில், முதல் முறையாக, 'ஆடியோ வெர்பல்' பயிற்சி மையம், கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட உள்ளது.பிறவியில் அல்லது இடையிலோ செவித்திறன் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் வாய் பேச முடியாது. இப்பிரச்னைக்கு 'காக்லியர் இம்ப்ளான்டேஷன்' எனும், நவீன அறுவை சிகிச்சை மூலம் தீர்வு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சையில், காந்தம் போன்ற கருவி உட்செவியில், பொருத்தப்படும். தொடர்ந்து, மூன்று வாரங்களுக்குப் பின் காதுமடலில் வெளிப்புறக்கருவி பொருத்தப்படும். இக்கருவி ஒலியை கேட்க உதவும்.கருவி பொருத்தப்பட்ட ஓராண்டுக்கு பின், தீவிர ஒலி வழி பயிற்சி மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஆடியோ வெர்பல் தெரபி மையங்கள்(ஏ.வி.டி.,) உதவிகரமாக இருக்கின்றன. பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இந்த மையங்கள், மேற்கு மண்டலத்தில், வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லை. மேற்கு மண்டலத்தில், முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் இம்மையம் விரைவில் துவங்கப்பட உள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், 2013ம் ஆண்டு முதல் இதுவரை, 185 குழந்தைகளுக்கு காக்லியர் இம்ப்ளான்டேஷன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையிலேயே இதை விட, குறைந்த அறுவைசிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, இந்த ஏ.வி.டி., மையத்தை கோவையில் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,''காக்லியர் இம்ப்ளான்டேஷன் அறுவை சிகிச்சைக்கு பின் ஏ.வி.டி., மையங்களின் பணி முக்கியமானது.இதன் மூலமே குழந்தைகள் கேட்கும் சக்தி உணர்ந்து, ஒலியின் வடிவங்களை அறிந்து கொள்வர். இதற்காகவே இச்சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் பங்களிப்பில் குழந்தைகளுக்கு பயிற்சிக்கு வழங்கப்பட்டு வந்தது.இனி சிகிச்சை பெறுவோருக்கு பயிற்சிக்கு வெளி இடங்கள் செல்ல தேவையில்லை, விரைவில் மையம் செயல்பாட்டுக்கு வர உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment