FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, January 16, 2018

மேற்கு மண்டலத்தில் ஆடியோ வெர்பல் மையம்:கோவை அரசு மருத்துவமனையில் விரைவில் துவக்கம்

16.01.2018
கோவை;மேற்கு மண்டலத்தில், முதல் முறையாக, 'ஆடியோ வெர்பல்' பயிற்சி மையம், கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட உள்ளது.பிறவியில் அல்லது இடையிலோ செவித்திறன் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் வாய் பேச முடியாது. இப்பிரச்னைக்கு 'காக்லியர் இம்ப்ளான்டேஷன்' எனும், நவீன அறுவை சிகிச்சை மூலம் தீர்வு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சையில், காந்தம் போன்ற கருவி உட்செவியில், பொருத்தப்படும். தொடர்ந்து, மூன்று வாரங்களுக்குப் பின் காதுமடலில் வெளிப்புறக்கருவி பொருத்தப்படும். இக்கருவி ஒலியை கேட்க உதவும்.கருவி பொருத்தப்பட்ட ஓராண்டுக்கு பின், தீவிர ஒலி வழி பயிற்சி மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஆடியோ வெர்பல் தெரபி மையங்கள்(ஏ.வி.டி.,) உதவிகரமாக இருக்கின்றன. பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இந்த மையங்கள், மேற்கு மண்டலத்தில், வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லை. மேற்கு மண்டலத்தில், முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் இம்மையம் விரைவில் துவங்கப்பட உள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், 2013ம் ஆண்டு முதல் இதுவரை, 185 குழந்தைகளுக்கு காக்லியர் இம்ப்ளான்டேஷன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையிலேயே இதை விட, குறைந்த அறுவைசிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, இந்த ஏ.வி.டி., மையத்தை கோவையில் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,''காக்லியர் இம்ப்ளான்டேஷன் அறுவை சிகிச்சைக்கு பின் ஏ.வி.டி., மையங்களின் பணி முக்கியமானது.இதன் மூலமே குழந்தைகள் கேட்கும் சக்தி உணர்ந்து, ஒலியின் வடிவங்களை அறிந்து கொள்வர். இதற்காகவே இச்சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் பங்களிப்பில் குழந்தைகளுக்கு பயிற்சிக்கு வழங்கப்பட்டு வந்தது.இனி சிகிச்சை பெறுவோருக்கு பயிற்சிக்கு வெளி இடங்கள் செல்ல தேவையில்லை, விரைவில் மையம் செயல்பாட்டுக்கு வர உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment