FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, January 2, 2018

காது கேளாத, வாய் பேசாத 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை! அரசு மருத்துவர்கள் சாதனை

27.12.2017
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று ஆடியோ வெர்பெல் தெரப்பி எனும் காக்ளியர் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கான சிறப்புப் பேச்சுப் பயிற்சிக்கான முறை கொண்டுவரப்பட்டது. அரசு மருத்துவமனையிலையே வயதுவரம்பு அரசு காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை மூலம் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி கூறுகையில், “தென் தமிழகத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறவியிலே முற்றிலும் காது கேளாத, வாய் பேசாத 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூபாய் 7 லட்சம் பெறுமான காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2015 ஜனவரி முதல் தற்போதுவரை 61 குழந்தைகளுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை சிறப்பாகச் செய்யப்படுகிறது . இதுவரை 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டு இன்று நல்ல முறையில் காது கேட்கவும் பேசிக் கொண்டும் உள்ளனர்.

தற்போது கொண்டுவந்துள்ள பயிற்சி முறை மூலம் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சாதாரண குழந்தைகளுடன் சேர்ந்து பயில இயலும். காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பேச்சுப் பயிற்சி மதுரை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் ஒரு பிரிவாகச் சிறப்பாகச் செயல்பட உள்ளது. இதன் மூலம் காது கேளாத குழந்தைகளுக்கு அனைத்து சிறப்புப் பரிசோதனைகள், சிறப்பு காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை, சிறப்புப் பேச்சுப் பயிற்சி ஆகிய அனைத்தையும் வழங்கி அரசு மருந்துவமனை ஓர் ஒருங்கிணைந்த காக்ளியர் இம்பிளான்ட் அறுவைசிகிச்சை மையமாக செயல்பட உள்ளது'' எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காது , மூக்கு , தொண்டை பிரிவு மருத்துவர்கள், தினகரன், ராஜகணேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment