FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 2, 2018

காது கேளாத, வாய் பேசாத 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை! அரசு மருத்துவர்கள் சாதனை

27.12.2017
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று ஆடியோ வெர்பெல் தெரப்பி எனும் காக்ளியர் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கான சிறப்புப் பேச்சுப் பயிற்சிக்கான முறை கொண்டுவரப்பட்டது. அரசு மருத்துவமனையிலையே வயதுவரம்பு அரசு காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை மூலம் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி கூறுகையில், “தென் தமிழகத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறவியிலே முற்றிலும் காது கேளாத, வாய் பேசாத 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூபாய் 7 லட்சம் பெறுமான காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2015 ஜனவரி முதல் தற்போதுவரை 61 குழந்தைகளுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை சிறப்பாகச் செய்யப்படுகிறது . இதுவரை 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டு இன்று நல்ல முறையில் காது கேட்கவும் பேசிக் கொண்டும் உள்ளனர்.

தற்போது கொண்டுவந்துள்ள பயிற்சி முறை மூலம் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சாதாரண குழந்தைகளுடன் சேர்ந்து பயில இயலும். காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பேச்சுப் பயிற்சி மதுரை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் ஒரு பிரிவாகச் சிறப்பாகச் செயல்பட உள்ளது. இதன் மூலம் காது கேளாத குழந்தைகளுக்கு அனைத்து சிறப்புப் பரிசோதனைகள், சிறப்பு காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை, சிறப்புப் பேச்சுப் பயிற்சி ஆகிய அனைத்தையும் வழங்கி அரசு மருந்துவமனை ஓர் ஒருங்கிணைந்த காக்ளியர் இம்பிளான்ட் அறுவைசிகிச்சை மையமாக செயல்பட உள்ளது'' எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காது , மூக்கு , தொண்டை பிரிவு மருத்துவர்கள், தினகரன், ராஜகணேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment