FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, January 9, 2018

’’சர்வதேசப் போட்டிகளுக்குத் தகுதி!’’ - பேட்மின்டனில் அசத்தும் மதுரை காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவி

08.01.2018
காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவியான ஜெர்லின் அனிகா, மாநில மற்றும் தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். 9-ம் வகுப்புப் பயின்று வரும் ஜெர்லின் அனிகா, பலமுறை பொதுப்பிரிவுகளிலும் கலந்துகொண்டு பரிசுகளை வென்றெடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் ஜெர்னில் அனிகாவை, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அழைத்துப் பாராட்டினார்.

இதுகுறித்து ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெகத்ரட்சகனிடம் பேசினோம். "கடந்தாண்டு ஜூலை மாதம் 18-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை துருக்கியில் நடைபெற்ற வாய்பேச முடியாத, காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடரின் பேட்மின்டன் போட்டியில் ஜெர்லின் கலந்துகொண்டார். அந்தத் தொடரில் உலகளவில் 5-ம் இடத்தை அவர் பிடித்தார். அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில், இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்தார். இதன் காரணமாக வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜூனியர் ஒலிம்பிக்கிலும் ஜெர்லின் அனிகா பங்கேற்க இருக்கிறார். தற்போதைய போட்டிகளில் பங்கேற்பதற்கான உதவிகளை ஃபென்னர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. அரசு இதனை கவனத்தில் கொண்டு போட்டிகளில் பங்கேற்க ஜெர்லினுக்கு உதவ வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment