FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, January 9, 2018

’’சர்வதேசப் போட்டிகளுக்குத் தகுதி!’’ - பேட்மின்டனில் அசத்தும் மதுரை காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவி

08.01.2018
காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவியான ஜெர்லின் அனிகா, மாநில மற்றும் தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். 9-ம் வகுப்புப் பயின்று வரும் ஜெர்லின் அனிகா, பலமுறை பொதுப்பிரிவுகளிலும் கலந்துகொண்டு பரிசுகளை வென்றெடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் ஜெர்னில் அனிகாவை, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அழைத்துப் பாராட்டினார்.

இதுகுறித்து ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெகத்ரட்சகனிடம் பேசினோம். "கடந்தாண்டு ஜூலை மாதம் 18-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை துருக்கியில் நடைபெற்ற வாய்பேச முடியாத, காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடரின் பேட்மின்டன் போட்டியில் ஜெர்லின் கலந்துகொண்டார். அந்தத் தொடரில் உலகளவில் 5-ம் இடத்தை அவர் பிடித்தார். அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில், இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்தார். இதன் காரணமாக வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜூனியர் ஒலிம்பிக்கிலும் ஜெர்லின் அனிகா பங்கேற்க இருக்கிறார். தற்போதைய போட்டிகளில் பங்கேற்பதற்கான உதவிகளை ஃபென்னர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. அரசு இதனை கவனத்தில் கொண்டு போட்டிகளில் பங்கேற்க ஜெர்லினுக்கு உதவ வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment