FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, January 9, 2018

’’சர்வதேசப் போட்டிகளுக்குத் தகுதி!’’ - பேட்மின்டனில் அசத்தும் மதுரை காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவி

08.01.2018
காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவியான ஜெர்லின் அனிகா, மாநில மற்றும் தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். 9-ம் வகுப்புப் பயின்று வரும் ஜெர்லின் அனிகா, பலமுறை பொதுப்பிரிவுகளிலும் கலந்துகொண்டு பரிசுகளை வென்றெடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் ஜெர்னில் அனிகாவை, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அழைத்துப் பாராட்டினார்.

இதுகுறித்து ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெகத்ரட்சகனிடம் பேசினோம். "கடந்தாண்டு ஜூலை மாதம் 18-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை துருக்கியில் நடைபெற்ற வாய்பேச முடியாத, காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடரின் பேட்மின்டன் போட்டியில் ஜெர்லின் கலந்துகொண்டார். அந்தத் தொடரில் உலகளவில் 5-ம் இடத்தை அவர் பிடித்தார். அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில், இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்தார். இதன் காரணமாக வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜூனியர் ஒலிம்பிக்கிலும் ஜெர்லின் அனிகா பங்கேற்க இருக்கிறார். தற்போதைய போட்டிகளில் பங்கேற்பதற்கான உதவிகளை ஃபென்னர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. அரசு இதனை கவனத்தில் கொண்டு போட்டிகளில் பங்கேற்க ஜெர்லினுக்கு உதவ வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment