FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, August 12, 2018

காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவிகளின் 94 மெழுகுவத்தி அஞ்சலி!


09.08.2018, சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் மாணவிகள், 94 மெழுகுவத்திகளை ஏற்றி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, 94 வயதில் மரணமடைந்தார். அவரின் உடல், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாகக் கருணாநிதியின் உடலுக்கு ராஜாஜி அரங்கில் ஏராளமானவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதன்காரணமாகத் தமிழகம் முழுவதும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

வழக்கம்போல இன்று கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் செயல்படத் தொடங்கின. சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான லிட்டில் பிளவர் காதுகேளாதோர் கான்வென்ட்டில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸ்லின் தலைமையில் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மெழுகுவத்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் வயதைக் குறிக்கும் வகையில் 94 மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டன. அதாவது, 94 என்று எழுதப்பட்டு அதில் 94 மெழுகுவத்திகள் ஏற்றி ஆசிரியைகளும் மாணவ, மாணவிகளும் மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கருணாநிதி மரணம் குறித்து வெளியான செய்திகளைச் சேகரித்த மாணவிகள் அதற்கு முன்புதான் மெழுகுவத்திகளை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment