FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, August 28, 2018

வாய் பேச முடியாத, காது கேட்காத மகனை கொன்ற தந்தைக்கு 10 ஆண்டு சிறை

24.08.2018
திருப்பத்துார்: மகனை கொன்ற தந்தைக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, தேவலாபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன், 45; கூலித் தொழிலாளி. இவர், மனைவி ஜெயலட்சுமி, 40, மகன் கார்த்தி, 20. இவர், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி.
குடும்பத்தகராறால், கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், 2014, நவ., 2ல் போதையில் வீட்டுக்கு வந்த ஐயப்பன், கார்த்தியிடம் குடிக்க பணம் கேட்டார்.
அவர் மவுனமாக இருந்ததால், ஆத்திரமடைந்த ஐயப்பன், விறகு கட்டையால், அடித்துக் கொன்றார். உம்மராபாத் போலீசார், அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கு, திருப்பத்துார் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, மகனை கொன்ற ஐயப்பனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment