FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, August 28, 2018

வாய் பேச முடியாத, காது கேட்காத மகனை கொன்ற தந்தைக்கு 10 ஆண்டு சிறை

24.08.2018
திருப்பத்துார்: மகனை கொன்ற தந்தைக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, தேவலாபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன், 45; கூலித் தொழிலாளி. இவர், மனைவி ஜெயலட்சுமி, 40, மகன் கார்த்தி, 20. இவர், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி.
குடும்பத்தகராறால், கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், 2014, நவ., 2ல் போதையில் வீட்டுக்கு வந்த ஐயப்பன், கார்த்தியிடம் குடிக்க பணம் கேட்டார்.
அவர் மவுனமாக இருந்ததால், ஆத்திரமடைந்த ஐயப்பன், விறகு கட்டையால், அடித்துக் கொன்றார். உம்மராபாத் போலீசார், அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கு, திருப்பத்துார் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, மகனை கொன்ற ஐயப்பனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment