FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, August 14, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

13.08.2018
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளன.

திருப்புத்துார் ட்ரூபா, நேஷனல் அகாடமி ஆப் இன்டஸ்டீரியல் நிறுவனங்கள் சார்பில் தையல் பயிற்சி அளிக்கப்படும். நிறுவனத்திற்கு 60 வீதம் 120 பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 5 ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். காதுகேளாத, வாய்பேசாத நபர்கள், இரு கைகள் நல்ல நிலையில் ஒரு கால் மட்டும் பாதிக்கப்பட்டோர், மிதமான மனவளர்ச்சி குறையுடையோராக இருப்போர் விண்ணப்பிக்கலாம்.

திருப்புத்துார் நேஷனல் அகாடமி ஆப் இன்டஸ்டீரியல் நிறுவனம் சார்பில் குளிர்சாதன பெட்டி மற்றும் குளிர்சாதனம் பழுது நீக்க பயிற்சி, விருந்தோம்பல் உதவியாளர் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பயிற்சிக்கும் 20 பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 8 ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்றோர் விண்ணப்பிக்கலாம். காதுகேளாத, வாய்பேசாதோர், இரு கைகள் நல்ல நிலையில் கால்கள் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பூவந்தி ராஸ் அகாடமி சார்பில் உதவி செவிலியர் பயிற்சி அளிக்கப்படும். நாற்பது பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 10 ம் வகுப்பு தேர்ச்சியுற்றோர் விண்ணப்பிக்கலாம். இரு கைகள் நல்ல நிலையில் ஒரு கால் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.விரும்புவோர் ஆக., 25 க்குள் ஸ்மார்ட் சிவகங்கா செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு 04575 242025 ல் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் லதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment