FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, August 14, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

13.08.2018
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளன.

திருப்புத்துார் ட்ரூபா, நேஷனல் அகாடமி ஆப் இன்டஸ்டீரியல் நிறுவனங்கள் சார்பில் தையல் பயிற்சி அளிக்கப்படும். நிறுவனத்திற்கு 60 வீதம் 120 பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 5 ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். காதுகேளாத, வாய்பேசாத நபர்கள், இரு கைகள் நல்ல நிலையில் ஒரு கால் மட்டும் பாதிக்கப்பட்டோர், மிதமான மனவளர்ச்சி குறையுடையோராக இருப்போர் விண்ணப்பிக்கலாம்.

திருப்புத்துார் நேஷனல் அகாடமி ஆப் இன்டஸ்டீரியல் நிறுவனம் சார்பில் குளிர்சாதன பெட்டி மற்றும் குளிர்சாதனம் பழுது நீக்க பயிற்சி, விருந்தோம்பல் உதவியாளர் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பயிற்சிக்கும் 20 பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 8 ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்றோர் விண்ணப்பிக்கலாம். காதுகேளாத, வாய்பேசாதோர், இரு கைகள் நல்ல நிலையில் கால்கள் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பூவந்தி ராஸ் அகாடமி சார்பில் உதவி செவிலியர் பயிற்சி அளிக்கப்படும். நாற்பது பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 10 ம் வகுப்பு தேர்ச்சியுற்றோர் விண்ணப்பிக்கலாம். இரு கைகள் நல்ல நிலையில் ஒரு கால் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.விரும்புவோர் ஆக., 25 க்குள் ஸ்மார்ட் சிவகங்கா செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு 04575 242025 ல் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் லதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment