FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, August 14, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

13.08.2018
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளன.

திருப்புத்துார் ட்ரூபா, நேஷனல் அகாடமி ஆப் இன்டஸ்டீரியல் நிறுவனங்கள் சார்பில் தையல் பயிற்சி அளிக்கப்படும். நிறுவனத்திற்கு 60 வீதம் 120 பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 5 ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். காதுகேளாத, வாய்பேசாத நபர்கள், இரு கைகள் நல்ல நிலையில் ஒரு கால் மட்டும் பாதிக்கப்பட்டோர், மிதமான மனவளர்ச்சி குறையுடையோராக இருப்போர் விண்ணப்பிக்கலாம்.

திருப்புத்துார் நேஷனல் அகாடமி ஆப் இன்டஸ்டீரியல் நிறுவனம் சார்பில் குளிர்சாதன பெட்டி மற்றும் குளிர்சாதனம் பழுது நீக்க பயிற்சி, விருந்தோம்பல் உதவியாளர் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பயிற்சிக்கும் 20 பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 8 ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்றோர் விண்ணப்பிக்கலாம். காதுகேளாத, வாய்பேசாதோர், இரு கைகள் நல்ல நிலையில் கால்கள் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பூவந்தி ராஸ் அகாடமி சார்பில் உதவி செவிலியர் பயிற்சி அளிக்கப்படும். நாற்பது பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 10 ம் வகுப்பு தேர்ச்சியுற்றோர் விண்ணப்பிக்கலாம். இரு கைகள் நல்ல நிலையில் ஒரு கால் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.விரும்புவோர் ஆக., 25 க்குள் ஸ்மார்ட் சிவகங்கா செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு 04575 242025 ல் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் லதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment