FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, August 26, 2018

புதுச்சேரியில் முதல் முறையாக மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி: ஏராளமானோர் பங்கேற்பு

25.08.2018
புதுச்சேரி, உப்பளம் விளையாட்டு மைதானத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதுவே இவர்களுக்காக புதுச்சேரியில் நிகழ்த்தப்படும் முதல் போட்டியாகும்.

இதில், 16 முதல் 26 வயது உடையவர்களுக்கு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நிகழ்த்தப்பட்டது.

இந்தப் போட்டியில், புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்த 350க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெற்ற வீரர்கள், வருகின்ற டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். மேலும், வெற்றி பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment