FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, August 26, 2018

புதுச்சேரியில் முதல் முறையாக மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி: ஏராளமானோர் பங்கேற்பு

25.08.2018
புதுச்சேரி, உப்பளம் விளையாட்டு மைதானத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதுவே இவர்களுக்காக புதுச்சேரியில் நிகழ்த்தப்படும் முதல் போட்டியாகும்.

இதில், 16 முதல் 26 வயது உடையவர்களுக்கு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நிகழ்த்தப்பட்டது.

இந்தப் போட்டியில், புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்த 350க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெற்ற வீரர்கள், வருகின்ற டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். மேலும், வெற்றி பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment