FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, August 26, 2018

புதுச்சேரியில் முதல் முறையாக மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி: ஏராளமானோர் பங்கேற்பு

25.08.2018
புதுச்சேரி, உப்பளம் விளையாட்டு மைதானத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதுவே இவர்களுக்காக புதுச்சேரியில் நிகழ்த்தப்படும் முதல் போட்டியாகும்.

இதில், 16 முதல் 26 வயது உடையவர்களுக்கு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நிகழ்த்தப்பட்டது.

இந்தப் போட்டியில், புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்த 350க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெற்ற வீரர்கள், வருகின்ற டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். மேலும், வெற்றி பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment