FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, August 21, 2018

தென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது?

21.08.2018
தென் கொரியாவின் தலைநகரம் சோலில் காதுகோளாத ஓட்டுநர்கள் வாடகை கார் சேவையை முதல் முதலாக தொடங்கியுள்ளனர்.

காது கேட்கின்ற திறனில் குறைபாடு உள்ள கார் ஓட்டுநர்களை வாடகைக்கு அமர்த்த உள்ளூரில் இருக்கின்ற தயக்கத்தை குறைப்பதற்கு உதவிய புதிய மென்பொருள் இந்த முயற்சியை சாத்தியமாக்கியுள்ளது.

இந்த வாரத்தில் காது கேளாத இருவர் வாடகை கார் மூலம் பயணிகளுக்கு சேவையாற்ற தொடங்கியுள்ளதாக கொரியன் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நிறுவனமான கோயக்டஸ் உருவாக்கிய மென்பொருள் மூலம் இந்த ஓட்டுநர்கள் உதவி பெறுகின்றனர்.

இந்த மென்பொருள் செயல்படுவது பற்றி விளக்கும்போது, இரண்டு மாத்திரை கணினிகள் வாடகை காரின் முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ளன. இவை 'கோயோஹான் டேக்ஸி' அல்லது 'சைலன்ட் டேக்ஸி' மென்பொருளோடு (App) இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாத்திரை கணினிகள் வாடகை காரின் 
முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ளன.
பேசுவதை எழுத்து முறையில் மாற்றுகின்ற வசதியை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. பயணியர் சென்றடையும் முனையம் மற்றும் இறக்கிவிட விரும்பும் இடம், கட்டணம் செலுத்தும் முறை ஆகிய வசதிகளை கொண்டுள்ளதால் பயணிகளுக்கு இது மிகவும் எளிதாக அமைந்துவிடுகிறது.
கணினி பொறியிலாளர் பட்டம் வென்ற சொங் மின்-பியோவின் தலைமையில் சோல் நகரிலுள்ள மாணவர்கள் குழு ஒன்றால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

காது கோளாதவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்க விரும்பியதாக சொங், கொரிய டைம்ஸிடம் கூறியுள்ளார்.

நோட்டையும், பேனாவையும் எடுத்து, குறித்து கொள்ள முயலும் அந்த தருணத்திலேயே கொரியர்கள் அந்த வாடகை காரை விட்டு அகன்று விடுவார்கள் என்பதால் இந்த மென்பொருளை (ஆப்) கண்டுபிடித்த்தாக அவர் குறிப்பிடுகிறார்.

காது கோளாதவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை
வழங்க விரும்பியதாக சொங் தெரிவிக்கிறார்.
2015ம் ஆண்டு மே மாதம் வாடகை கார் சேவை நிறுவனமான உபேர் காது கேளாதோர் விழிப்புணர்வை உருவாக்க எடுத்த முயற்சியால் தூண்டுதல் பெற்றதாக சொங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வசதியால் காது கோளாதோர் அதிகம் பேர் இந்த தொழிலை செய்ய முன்வருவர் என்று கோயக்டஸ் நிறுவனம் நம்புகிறது.

தென் கொரியாவில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் காது கோளாதோர் என்று சுகாதார மற்றம் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment