FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, August 21, 2018

தென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது?

21.08.2018
தென் கொரியாவின் தலைநகரம் சோலில் காதுகோளாத ஓட்டுநர்கள் வாடகை கார் சேவையை முதல் முதலாக தொடங்கியுள்ளனர்.

காது கேட்கின்ற திறனில் குறைபாடு உள்ள கார் ஓட்டுநர்களை வாடகைக்கு அமர்த்த உள்ளூரில் இருக்கின்ற தயக்கத்தை குறைப்பதற்கு உதவிய புதிய மென்பொருள் இந்த முயற்சியை சாத்தியமாக்கியுள்ளது.

இந்த வாரத்தில் காது கேளாத இருவர் வாடகை கார் மூலம் பயணிகளுக்கு சேவையாற்ற தொடங்கியுள்ளதாக கொரியன் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நிறுவனமான கோயக்டஸ் உருவாக்கிய மென்பொருள் மூலம் இந்த ஓட்டுநர்கள் உதவி பெறுகின்றனர்.

இந்த மென்பொருள் செயல்படுவது பற்றி விளக்கும்போது, இரண்டு மாத்திரை கணினிகள் வாடகை காரின் முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ளன. இவை 'கோயோஹான் டேக்ஸி' அல்லது 'சைலன்ட் டேக்ஸி' மென்பொருளோடு (App) இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாத்திரை கணினிகள் வாடகை காரின் 
முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ளன.
பேசுவதை எழுத்து முறையில் மாற்றுகின்ற வசதியை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. பயணியர் சென்றடையும் முனையம் மற்றும் இறக்கிவிட விரும்பும் இடம், கட்டணம் செலுத்தும் முறை ஆகிய வசதிகளை கொண்டுள்ளதால் பயணிகளுக்கு இது மிகவும் எளிதாக அமைந்துவிடுகிறது.
கணினி பொறியிலாளர் பட்டம் வென்ற சொங் மின்-பியோவின் தலைமையில் சோல் நகரிலுள்ள மாணவர்கள் குழு ஒன்றால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

காது கோளாதவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்க விரும்பியதாக சொங், கொரிய டைம்ஸிடம் கூறியுள்ளார்.

நோட்டையும், பேனாவையும் எடுத்து, குறித்து கொள்ள முயலும் அந்த தருணத்திலேயே கொரியர்கள் அந்த வாடகை காரை விட்டு அகன்று விடுவார்கள் என்பதால் இந்த மென்பொருளை (ஆப்) கண்டுபிடித்த்தாக அவர் குறிப்பிடுகிறார்.

காது கோளாதவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை
வழங்க விரும்பியதாக சொங் தெரிவிக்கிறார்.
2015ம் ஆண்டு மே மாதம் வாடகை கார் சேவை நிறுவனமான உபேர் காது கேளாதோர் விழிப்புணர்வை உருவாக்க எடுத்த முயற்சியால் தூண்டுதல் பெற்றதாக சொங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வசதியால் காது கோளாதோர் அதிகம் பேர் இந்த தொழிலை செய்ய முன்வருவர் என்று கோயக்டஸ் நிறுவனம் நம்புகிறது.

தென் கொரியாவில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் காது கோளாதோர் என்று சுகாதார மற்றம் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment