FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, August 21, 2018

தென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது?

21.08.2018
தென் கொரியாவின் தலைநகரம் சோலில் காதுகோளாத ஓட்டுநர்கள் வாடகை கார் சேவையை முதல் முதலாக தொடங்கியுள்ளனர்.

காது கேட்கின்ற திறனில் குறைபாடு உள்ள கார் ஓட்டுநர்களை வாடகைக்கு அமர்த்த உள்ளூரில் இருக்கின்ற தயக்கத்தை குறைப்பதற்கு உதவிய புதிய மென்பொருள் இந்த முயற்சியை சாத்தியமாக்கியுள்ளது.

இந்த வாரத்தில் காது கேளாத இருவர் வாடகை கார் மூலம் பயணிகளுக்கு சேவையாற்ற தொடங்கியுள்ளதாக கொரியன் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நிறுவனமான கோயக்டஸ் உருவாக்கிய மென்பொருள் மூலம் இந்த ஓட்டுநர்கள் உதவி பெறுகின்றனர்.

இந்த மென்பொருள் செயல்படுவது பற்றி விளக்கும்போது, இரண்டு மாத்திரை கணினிகள் வாடகை காரின் முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ளன. இவை 'கோயோஹான் டேக்ஸி' அல்லது 'சைலன்ட் டேக்ஸி' மென்பொருளோடு (App) இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாத்திரை கணினிகள் வாடகை காரின் 
முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ளன.
பேசுவதை எழுத்து முறையில் மாற்றுகின்ற வசதியை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. பயணியர் சென்றடையும் முனையம் மற்றும் இறக்கிவிட விரும்பும் இடம், கட்டணம் செலுத்தும் முறை ஆகிய வசதிகளை கொண்டுள்ளதால் பயணிகளுக்கு இது மிகவும் எளிதாக அமைந்துவிடுகிறது.
கணினி பொறியிலாளர் பட்டம் வென்ற சொங் மின்-பியோவின் தலைமையில் சோல் நகரிலுள்ள மாணவர்கள் குழு ஒன்றால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

காது கோளாதவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்க விரும்பியதாக சொங், கொரிய டைம்ஸிடம் கூறியுள்ளார்.

நோட்டையும், பேனாவையும் எடுத்து, குறித்து கொள்ள முயலும் அந்த தருணத்திலேயே கொரியர்கள் அந்த வாடகை காரை விட்டு அகன்று விடுவார்கள் என்பதால் இந்த மென்பொருளை (ஆப்) கண்டுபிடித்த்தாக அவர் குறிப்பிடுகிறார்.

காது கோளாதவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை
வழங்க விரும்பியதாக சொங் தெரிவிக்கிறார்.
2015ம் ஆண்டு மே மாதம் வாடகை கார் சேவை நிறுவனமான உபேர் காது கேளாதோர் விழிப்புணர்வை உருவாக்க எடுத்த முயற்சியால் தூண்டுதல் பெற்றதாக சொங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வசதியால் காது கோளாதோர் அதிகம் பேர் இந்த தொழிலை செய்ய முன்வருவர் என்று கோயக்டஸ் நிறுவனம் நம்புகிறது.

தென் கொரியாவில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் காது கோளாதோர் என்று சுகாதார மற்றம் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment