FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, June 23, 2019

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக பிறந்ததால் விரக்தி 2 வயது மகனை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை: போரூரில் சோகம்

22.06.2019, பூந்தமல்லி: போரூர் அருகே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மகனை கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. போரூர் அடுத்த தெள்ளியார் அகரம் தெருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (37), பெயின்டர். இவரது மனைவி அஸ்வினி (28). இவர்களது மகன்கள் பிரதீப் (4), சக்திவேல் (2). மூத்த மகன் பிரதீப்புக்கு, வாய்பேச இயலாது, காதும் கேட்காது. அதனால், சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பேச்சு தெரபி பயிற்சி அளித்து வந்தனர். இதற்காக பெற்றோர் ரூ.3 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இளைய மகனான சக்திவேலை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவனுக்கும் வாய்பேச இயலவில்லை, காதும் கேட்கவில்லை என்பது தெரிந்தது. அவற்றை நிவர்த்தி செய்ய முடியாது என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனது 2 மகன்களும் வாய்பேச இயலவில்லை, காதும் கேட்கவில்லையே என்ற மன உளைச்சலில் அஸ்வினி இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மூத்த மகன் பிரதீப்பை, பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வரும்படி கணவரிடம் அஸ்வினி கூறியுள்ளார். அதன்படி அவரும், மகனை அழைத்து சென்று பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, வீட்டுக்கு திரும்பினார். அங்கு, அஸ்வினி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார். மற்றொரு அறைக்குச் சென்று பார்த்தபோது கட்டிலில் இளைய மகன் சக்திவேலும் இறந்து கிடந்தான்.

தகவலறிந்து போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தாய், மகன் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அஸ்வினிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment