FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, June 23, 2019

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக பிறந்ததால் விரக்தி 2 வயது மகனை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை: போரூரில் சோகம்

22.06.2019, பூந்தமல்லி: போரூர் அருகே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மகனை கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. போரூர் அடுத்த தெள்ளியார் அகரம் தெருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (37), பெயின்டர். இவரது மனைவி அஸ்வினி (28). இவர்களது மகன்கள் பிரதீப் (4), சக்திவேல் (2). மூத்த மகன் பிரதீப்புக்கு, வாய்பேச இயலாது, காதும் கேட்காது. அதனால், சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பேச்சு தெரபி பயிற்சி அளித்து வந்தனர். இதற்காக பெற்றோர் ரூ.3 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இளைய மகனான சக்திவேலை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவனுக்கும் வாய்பேச இயலவில்லை, காதும் கேட்கவில்லை என்பது தெரிந்தது. அவற்றை நிவர்த்தி செய்ய முடியாது என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனது 2 மகன்களும் வாய்பேச இயலவில்லை, காதும் கேட்கவில்லையே என்ற மன உளைச்சலில் அஸ்வினி இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மூத்த மகன் பிரதீப்பை, பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வரும்படி கணவரிடம் அஸ்வினி கூறியுள்ளார். அதன்படி அவரும், மகனை அழைத்து சென்று பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, வீட்டுக்கு திரும்பினார். அங்கு, அஸ்வினி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார். மற்றொரு அறைக்குச் சென்று பார்த்தபோது கட்டிலில் இளைய மகன் சக்திவேலும் இறந்து கிடந்தான்.

தகவலறிந்து போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தாய், மகன் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அஸ்வினிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment