FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, June 23, 2019

பிறவிலேயே காதுகேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ‘‘காக்ளியர் இம்ப்ளாண்ட்’’ அறுவை சிகிச்சை


விழுப்புரம், ஜூன் 22–
பிறவிலேயே காது கேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதி நவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்எம்ஓ கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . காது , மூக்கு, தொண்டைபிரிவு துறை தலைவர் இளஞ்செழியன் வரவேற்றார் . பிறவிலேயே காது கேட்காமல், பேச்சுத்திறன் குறைபாடு இல்லாமல் இருக்கும் குழந்தைளுக்கு கேட்கும், பேசும் திறன் மேம்படுத்தும், அதிநவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சையை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி கட்டளையின் இயக்குனர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் , மெட்ராஸ் மருத்துவ கல்லுாரி இஎன்டி பிரிவு இயக்குனர் முத்துகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆப்ரேஷன் தியேட்டரில் நடந்த அறுவை சிகிச்சையை வீடியோ கான்பிரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து, அறுவை சிகிச்சை பற்றிய டாக்டரின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய ரூ. 7 லட்சம் வரை செலவாகும். தற்போது அரசு மருத்துவ காப்பீடு மூலம் இலவசமாக செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட இணை இயக்குனர் சுகந்தி, துணை இயக்குனர் பாலுச்சாமி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுாரி இஎன்டி பிரிவு துறை தலைவர் இந்திரா, டாக்டர்கள் வெற்றிவேல், சவுந்திரராஜன், துறை டாக்டர்கள் ரவிக்குமார், விஜயபாபு, ஸ்ரீராம், நிஷாத், சையது அபுதாஹீர் , நிர்வாக அலுவலர்கள் கவிஞர் சிங்காரம் , ஆனந்த ஜோதி மற்றும் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி புரியும் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment