FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, June 23, 2019

பிறவிலேயே காதுகேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ‘‘காக்ளியர் இம்ப்ளாண்ட்’’ அறுவை சிகிச்சை


விழுப்புரம், ஜூன் 22–
பிறவிலேயே காது கேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதி நவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்எம்ஓ கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . காது , மூக்கு, தொண்டைபிரிவு துறை தலைவர் இளஞ்செழியன் வரவேற்றார் . பிறவிலேயே காது கேட்காமல், பேச்சுத்திறன் குறைபாடு இல்லாமல் இருக்கும் குழந்தைளுக்கு கேட்கும், பேசும் திறன் மேம்படுத்தும், அதிநவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சையை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி கட்டளையின் இயக்குனர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் , மெட்ராஸ் மருத்துவ கல்லுாரி இஎன்டி பிரிவு இயக்குனர் முத்துகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆப்ரேஷன் தியேட்டரில் நடந்த அறுவை சிகிச்சையை வீடியோ கான்பிரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து, அறுவை சிகிச்சை பற்றிய டாக்டரின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய ரூ. 7 லட்சம் வரை செலவாகும். தற்போது அரசு மருத்துவ காப்பீடு மூலம் இலவசமாக செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட இணை இயக்குனர் சுகந்தி, துணை இயக்குனர் பாலுச்சாமி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுாரி இஎன்டி பிரிவு துறை தலைவர் இந்திரா, டாக்டர்கள் வெற்றிவேல், சவுந்திரராஜன், துறை டாக்டர்கள் ரவிக்குமார், விஜயபாபு, ஸ்ரீராம், நிஷாத், சையது அபுதாஹீர் , நிர்வாக அலுவலர்கள் கவிஞர் சிங்காரம் , ஆனந்த ஜோதி மற்றும் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி புரியும் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment