FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, June 23, 2019

பிறவிலேயே காதுகேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ‘‘காக்ளியர் இம்ப்ளாண்ட்’’ அறுவை சிகிச்சை


விழுப்புரம், ஜூன் 22–
பிறவிலேயே காது கேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதி நவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்எம்ஓ கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . காது , மூக்கு, தொண்டைபிரிவு துறை தலைவர் இளஞ்செழியன் வரவேற்றார் . பிறவிலேயே காது கேட்காமல், பேச்சுத்திறன் குறைபாடு இல்லாமல் இருக்கும் குழந்தைளுக்கு கேட்கும், பேசும் திறன் மேம்படுத்தும், அதிநவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சையை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி கட்டளையின் இயக்குனர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் , மெட்ராஸ் மருத்துவ கல்லுாரி இஎன்டி பிரிவு இயக்குனர் முத்துகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆப்ரேஷன் தியேட்டரில் நடந்த அறுவை சிகிச்சையை வீடியோ கான்பிரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து, அறுவை சிகிச்சை பற்றிய டாக்டரின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய ரூ. 7 லட்சம் வரை செலவாகும். தற்போது அரசு மருத்துவ காப்பீடு மூலம் இலவசமாக செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட இணை இயக்குனர் சுகந்தி, துணை இயக்குனர் பாலுச்சாமி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுாரி இஎன்டி பிரிவு துறை தலைவர் இந்திரா, டாக்டர்கள் வெற்றிவேல், சவுந்திரராஜன், துறை டாக்டர்கள் ரவிக்குமார், விஜயபாபு, ஸ்ரீராம், நிஷாத், சையது அபுதாஹீர் , நிர்வாக அலுவலர்கள் கவிஞர் சிங்காரம் , ஆனந்த ஜோதி மற்றும் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி புரியும் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment