FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, June 25, 2019

வாய் பேச முடியாத & காது கேளாதமாற்று திறனாளி தங்க மங்கை; வாட்டும் வறுமையால் தவிப்பு

21.06.2019

சேலம்: பல்வேறு பதக்கங்களை குவித்த மாற்றுத் திறனாளி பெண், வறுமையால், சர்வதேச போட்டிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, சித்தர்கோவில் பொன்னகரைச் சேர்ந்தவர் சூர்யா, 25; வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத, மாற்றுத் திறனாளி பெண். வறுமை காரணமாக, பி.காம்., படிப்பை, பாதியில் நிறுத்தி விட்டார். இவருக்கு, கடந்த ஆண்டு திருமணமாகி, சேகர், 30, என்ற கணவர் உள்ளார். இருவரும், வெள்ளி கூலி தொழில் செய்து வருகின்றனர். சூர்யா, சிறுவயதிலிருந்தே தடகளம் விளையாட்டில், ஆர்வம் செலுத்தி வந்துள்ளார்.

மாநில, தேசிய அளவில் பல்வேறு தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார். முறையான பயிற்சி மற்றும் பண உதவி செய்தால், சர்வதேச அளவிலான போட்டிக்கு செல்லும் வாய்ப்புள்ளது.கடந்த, 2017ல் திருநெல்வேலியில், மாநில கைப்பந்து போட்டியில் தங்கம், 2017ல், மாநில தடகள போட்டியில், 800 மீ., ஓட்டத்தில் தங்கம், வட்டெறிதலில் வெண்கலம், 2018ல், கோவையில் நடந்த மாநில ஈட்டி எறிதலில் தங்கம், 2019ல் சென்னையில் நடந்த, 23வது தேசிய கைப்பந்து போட்டியில் வெண்கலம், கோலம், அழகி போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

பதக்கங்களை குவித்து சாதனை படைத்தாலும், போட்டி நடக்கும் பகுதிகளுக்கு செல்ல, பணம் இல்லாமல், கூலி வேலைக்கு செல்கிறார். இவருக்கு உதவ முன்வருவோர், 97891 - 81105, 86674 - 63687 என்ற எண்களில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment