FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, June 25, 2019

வாய் பேச முடியாத & காது கேளாதமாற்று திறனாளி தங்க மங்கை; வாட்டும் வறுமையால் தவிப்பு

21.06.2019

சேலம்: பல்வேறு பதக்கங்களை குவித்த மாற்றுத் திறனாளி பெண், வறுமையால், சர்வதேச போட்டிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, சித்தர்கோவில் பொன்னகரைச் சேர்ந்தவர் சூர்யா, 25; வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத, மாற்றுத் திறனாளி பெண். வறுமை காரணமாக, பி.காம்., படிப்பை, பாதியில் நிறுத்தி விட்டார். இவருக்கு, கடந்த ஆண்டு திருமணமாகி, சேகர், 30, என்ற கணவர் உள்ளார். இருவரும், வெள்ளி கூலி தொழில் செய்து வருகின்றனர். சூர்யா, சிறுவயதிலிருந்தே தடகளம் விளையாட்டில், ஆர்வம் செலுத்தி வந்துள்ளார்.

மாநில, தேசிய அளவில் பல்வேறு தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார். முறையான பயிற்சி மற்றும் பண உதவி செய்தால், சர்வதேச அளவிலான போட்டிக்கு செல்லும் வாய்ப்புள்ளது.கடந்த, 2017ல் திருநெல்வேலியில், மாநில கைப்பந்து போட்டியில் தங்கம், 2017ல், மாநில தடகள போட்டியில், 800 மீ., ஓட்டத்தில் தங்கம், வட்டெறிதலில் வெண்கலம், 2018ல், கோவையில் நடந்த மாநில ஈட்டி எறிதலில் தங்கம், 2019ல் சென்னையில் நடந்த, 23வது தேசிய கைப்பந்து போட்டியில் வெண்கலம், கோலம், அழகி போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

பதக்கங்களை குவித்து சாதனை படைத்தாலும், போட்டி நடக்கும் பகுதிகளுக்கு செல்ல, பணம் இல்லாமல், கூலி வேலைக்கு செல்கிறார். இவருக்கு உதவ முன்வருவோர், 97891 - 81105, 86674 - 63687 என்ற எண்களில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment