FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, June 25, 2019

பிறந்தது முதலே காது கேளாத குழந்தைகளுக்கு ஜிெஹச்சில் சூப்பர் சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அசத்தல்

மதுரை, ஜூன் 25: பேச்சு மற்றும் கேட்கும் திறன்களை இழந்து பிறக்கும் குழந்தைகளை 6 வயதிற்குள், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தால் இலவசமாக அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணப்படும் என, மதுரை அரசு மருத்துவமனை ெதரிவித்துள்ளது. இந்திய அளவில் நடந்த ஒரு ஆய்வில், பிறக்கும் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் சிறு சிறு குறைபாடுகள் முதல், சரி செய்ய முடியாத குறைபாடுகள் உள்ளவர்களாக (மாற்றுத் திறனாளிகளாக) பிறக்கின்றனர். இப்படி மாற்றுத் திறனாளிகளாக பிறக்கும் குழந்தைகளில், காதும் கேளாமல், வாயும் பேசமுடியாமல் பிறக்கும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் வைத்தியமே இல்லாத நிலை இருந்தது. பல பெற்றோர் சாபக்கேடு என்று நினைத்து அக்குழந்தையை வீட்டிலேயே சிறை வைத்து விடுவர். 

ஆனால் தற்ேபாது விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. அரிய வகை, அறுவை சிகிச்சையின் போது, சிகிச்சை மேற்கொள்பவரின் இதய ஓட்டத்தை சில மணித்துளிகள் நிறுத்தி, செயற்கை இதய ஓட்டம் மூலம் அறுவை சிகிச்சை முடிந்ததும், மீண்டும் இதயத்தை இயற்கையாக செயல்பட வைக்க முடிகிறது. அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் ஒன்றுதான், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை இழந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நவீன அறுவை சிகிச்சை மூலம் காதுகேட்கும் திறனை செயற்கையாக பெற வைப்பது. மதுரை அரசு மருத்துவமனையில் பிறவியிலேயே முற்றிலும் காது கேளாத, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக `காக்ளியர் இம்ப்ளான்ட்’ (நுண் செவி கருவி) என்ற நவீன காதொலி கருவி இலவசமாக பொருத்தப்படுகிறது. இதுவரை ஏராளமான குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை அறுவை சிசிச்சை துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறுகையில், ``செயற்கை காதொலி கருவி பொருத்தும் சிகிச்சைக்காக, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, குழந்தைகளை கூட்டி வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை செலவாகும், ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் இலவசமாக இக்காதொலி கருவி பொருத்தப்படுகிறது. 6 வயதிற்கு உட்பட்ட பிறவியிலேயே காதுகேளாத குழந்தைகளின் பெற்றோர், அரசின் காப்பீட்டு திட்ட அட்டையுடன் வந்து இந்த சிகிச்சையை இலவசமாக பெறலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment