FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, June 25, 2019

பிறந்தது முதலே காது கேளாத குழந்தைகளுக்கு ஜிெஹச்சில் சூப்பர் சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அசத்தல்

மதுரை, ஜூன் 25: பேச்சு மற்றும் கேட்கும் திறன்களை இழந்து பிறக்கும் குழந்தைகளை 6 வயதிற்குள், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தால் இலவசமாக அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணப்படும் என, மதுரை அரசு மருத்துவமனை ெதரிவித்துள்ளது. இந்திய அளவில் நடந்த ஒரு ஆய்வில், பிறக்கும் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் சிறு சிறு குறைபாடுகள் முதல், சரி செய்ய முடியாத குறைபாடுகள் உள்ளவர்களாக (மாற்றுத் திறனாளிகளாக) பிறக்கின்றனர். இப்படி மாற்றுத் திறனாளிகளாக பிறக்கும் குழந்தைகளில், காதும் கேளாமல், வாயும் பேசமுடியாமல் பிறக்கும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் வைத்தியமே இல்லாத நிலை இருந்தது. பல பெற்றோர் சாபக்கேடு என்று நினைத்து அக்குழந்தையை வீட்டிலேயே சிறை வைத்து விடுவர். 

ஆனால் தற்ேபாது விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. அரிய வகை, அறுவை சிகிச்சையின் போது, சிகிச்சை மேற்கொள்பவரின் இதய ஓட்டத்தை சில மணித்துளிகள் நிறுத்தி, செயற்கை இதய ஓட்டம் மூலம் அறுவை சிகிச்சை முடிந்ததும், மீண்டும் இதயத்தை இயற்கையாக செயல்பட வைக்க முடிகிறது. அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் ஒன்றுதான், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை இழந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நவீன அறுவை சிகிச்சை மூலம் காதுகேட்கும் திறனை செயற்கையாக பெற வைப்பது. மதுரை அரசு மருத்துவமனையில் பிறவியிலேயே முற்றிலும் காது கேளாத, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக `காக்ளியர் இம்ப்ளான்ட்’ (நுண் செவி கருவி) என்ற நவீன காதொலி கருவி இலவசமாக பொருத்தப்படுகிறது. இதுவரை ஏராளமான குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை அறுவை சிசிச்சை துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறுகையில், ``செயற்கை காதொலி கருவி பொருத்தும் சிகிச்சைக்காக, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, குழந்தைகளை கூட்டி வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை செலவாகும், ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் இலவசமாக இக்காதொலி கருவி பொருத்தப்படுகிறது. 6 வயதிற்கு உட்பட்ட பிறவியிலேயே காதுகேளாத குழந்தைகளின் பெற்றோர், அரசின் காப்பீட்டு திட்ட அட்டையுடன் வந்து இந்த சிகிச்சையை இலவசமாக பெறலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment