FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, June 25, 2019

பிறந்தது முதலே காது கேளாத குழந்தைகளுக்கு ஜிெஹச்சில் சூப்பர் சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அசத்தல்

மதுரை, ஜூன் 25: பேச்சு மற்றும் கேட்கும் திறன்களை இழந்து பிறக்கும் குழந்தைகளை 6 வயதிற்குள், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தால் இலவசமாக அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணப்படும் என, மதுரை அரசு மருத்துவமனை ெதரிவித்துள்ளது. இந்திய அளவில் நடந்த ஒரு ஆய்வில், பிறக்கும் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் சிறு சிறு குறைபாடுகள் முதல், சரி செய்ய முடியாத குறைபாடுகள் உள்ளவர்களாக (மாற்றுத் திறனாளிகளாக) பிறக்கின்றனர். இப்படி மாற்றுத் திறனாளிகளாக பிறக்கும் குழந்தைகளில், காதும் கேளாமல், வாயும் பேசமுடியாமல் பிறக்கும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் வைத்தியமே இல்லாத நிலை இருந்தது. பல பெற்றோர் சாபக்கேடு என்று நினைத்து அக்குழந்தையை வீட்டிலேயே சிறை வைத்து விடுவர். 

ஆனால் தற்ேபாது விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. அரிய வகை, அறுவை சிகிச்சையின் போது, சிகிச்சை மேற்கொள்பவரின் இதய ஓட்டத்தை சில மணித்துளிகள் நிறுத்தி, செயற்கை இதய ஓட்டம் மூலம் அறுவை சிகிச்சை முடிந்ததும், மீண்டும் இதயத்தை இயற்கையாக செயல்பட வைக்க முடிகிறது. அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் ஒன்றுதான், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை இழந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நவீன அறுவை சிகிச்சை மூலம் காதுகேட்கும் திறனை செயற்கையாக பெற வைப்பது. மதுரை அரசு மருத்துவமனையில் பிறவியிலேயே முற்றிலும் காது கேளாத, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக `காக்ளியர் இம்ப்ளான்ட்’ (நுண் செவி கருவி) என்ற நவீன காதொலி கருவி இலவசமாக பொருத்தப்படுகிறது. இதுவரை ஏராளமான குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை அறுவை சிசிச்சை துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறுகையில், ``செயற்கை காதொலி கருவி பொருத்தும் சிகிச்சைக்காக, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, குழந்தைகளை கூட்டி வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை செலவாகும், ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் இலவசமாக இக்காதொலி கருவி பொருத்தப்படுகிறது. 6 வயதிற்கு உட்பட்ட பிறவியிலேயே காதுகேளாத குழந்தைகளின் பெற்றோர், அரசின் காப்பீட்டு திட்ட அட்டையுடன் வந்து இந்த சிகிச்சையை இலவசமாக பெறலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment