FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, July 5, 2020

மானூர் அருகே லாரி- மொபட் மோதல்; வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பரிதாப சாவு

30.06.2020
மானூர்,
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 43). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும் இவர் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். இந்த நிலையில் நேற்று மதியம் தனது மொபட்டில் அருகில் உள்ள ரெட்டியார்பட்டிக்கு சென்று விட்டு உக்கிரன்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக கழுகுமலையை சேர்ந்த கணேசன் (60) என்பவர் ஓட்டி வந்த லாரியும், அவரது மொபட்டும் மோதிக் கொண்டன. இதில் கிறிஸ்டோபர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிறிஸ்டோபரின் சகோதரி மெர்லின் (40), மானூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்து போன கிறிஸ்டோபருக்கு அபிதா (40) என்ற மனைவியும், மேபல் (6) என்ற மகனும் உள்ளனர். இதில் அபிதாவும் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment