FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, July 5, 2020

மானூர் அருகே லாரி- மொபட் மோதல்; வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பரிதாப சாவு

30.06.2020
மானூர்,
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 43). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும் இவர் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். இந்த நிலையில் நேற்று மதியம் தனது மொபட்டில் அருகில் உள்ள ரெட்டியார்பட்டிக்கு சென்று விட்டு உக்கிரன்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக கழுகுமலையை சேர்ந்த கணேசன் (60) என்பவர் ஓட்டி வந்த லாரியும், அவரது மொபட்டும் மோதிக் கொண்டன. இதில் கிறிஸ்டோபர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிறிஸ்டோபரின் சகோதரி மெர்லின் (40), மானூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்து போன கிறிஸ்டோபருக்கு அபிதா (40) என்ற மனைவியும், மேபல் (6) என்ற மகனும் உள்ளனர். இதில் அபிதாவும் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment