FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, July 5, 2020

`எதிர்பார்க்கல...வேலை கிடைச்சிருச்சு!' -மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு உதவிய அமைச்சர்


``விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை முழுமையாகப் படித்தேன். கடைசி வரியில், தூய்மைப் பணியாளர் வேலை கொடுத்தால்கூட போதும் என்று அந்தப் பெண் கூறியிருந்தார்" -நகராட்சி ஆணையர்.

புதுக்கோட்டை காந்தி நகரில் வசிக்கும் ராஜூ - வசந்தா தம்பதிக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 பிள்ளைகள். இதில், 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். கடைக்குட்டி பெண்ணான தனலட்சுமி மட்டும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பிறந்துவிட்டார்.

பல வருடங்களாகவே செருப்பு தைத்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ராஜூ, தண்டுவட பாதிப்பால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் முடங்கிவிட்டார். அதன்பின்பு, வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிவந்த வசந்தாவும் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே முடங்கவே, படிப்பைப் பாதியில் நிறுத்திய கடைக்குட்டி தனலட்சுமி, அம்மா செய்துவந்த வேலையான வீட்டு வேலையைச் செய்து தனது அப்பா அம்மாவுடன், மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளையும் காப்பாற்றிவந்தார். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் தனலட்சுமிக்கு வீட்டு வேலை கிடைக்கவில்லை.

அதனால், அந்தக் குடும்பம் சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், அரசு நிவாரணம் கொடுக்கவில்லை என்றாலும், கழிவறை கழுவும் வேலையாக இருந்தாலும், ஒரு வேலையை அரசு ஏற்பாடு செய்து கொடுத்தால் குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன் என்று கூறினார். இதுபற்றி ஜூன் 27-ம் தேதி, "9 பேரில் 6 பேர் மாற்றுத்திறனாளிகள்!' -கொரோனா ஊரடங்கால் பரிதவிக்கும் குடும்பம்" என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் விரிவாக செய்தியைப் பதிவு செய்திருந்தோம்.

இதைப் பார்த்த நகராட்சி ஆணையர் சுப்ரமணியன், உடனே அதிகாரிகளை அனுப்பிவைத்து, அந்தக் குடும்பம் குறித்த விவரங்களைத் திரட்டினார். இதுகுறித்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்குக் கொண்டுசென்ற ஆணையர், அவரிடம் அந்தக் குடும்பத்தின் நிலை குறித்துக் கூறியுள்ளார். உடனே, அந்தப் பெண்ணுக்கு தூய்மைப்பணியாளர் வேலையைக் கொடுக்க அமைச்சர் பரிந்துரைசெய்தார். தற்போது, தனலட்சுமி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலையைத் தொடங்கிவிட்டார்.

தனலட்சுமியிடம் பேசினோம், " மூணு இடத்துல வீட்டு வேலை செஞ்சு குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருந்தேன். ஊரடங்கு வந்ததாலதான் வீட்டு வேலைக்கும் போக முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். சாப்பாட்டுக்கும் வழியில்லை. அந்த நேரத்தில், தெரிஞ்ச அண்ணன் ஒருத்தரு, அம்மா உணவகத்தின் மூலம் கொஞ்சநாள் சாப்பாடு கிடைக்க வழி செஞ்சாரு. தூய்மைப் பணியாளர் வேலை கிடைச்சா போதும் என்றுதான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, வேலை கிடைச்சிருச்சு. நல்லா வேலைபார்த்து இந்த வேலையை கெட்டியா பிடிச்சிக்குவேன். என்னுடைய வேலைக்காக விகடன் செஞ்ச இந்த உதவியை எங்க காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

நகராட்சி ஆணையர் சுப்ரமணியனிடம் பேசினோம். " விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை முழுமையாகப் படித்தேன். கடைசி வரியில், தூய்மைப் பணியாளர் வேலை கொடுத்தால்கூட போதும் என்று அந்தப் பெண் கூறியிருந்தார். தனலட்சுமியைப் போன்றவர்கள், கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பார்கள் என்று முடிவுசெய்துதான் அமைச்சருக்குத் தகவல் கொடுத்தேன். அவரும் பார்த்துவிட்டு, உடனே பணி கொடுக்க உத்தரவிட்டார். நகராட்சியில் தற்போது தற்காலிக தூய்மைப்பணியாளர் வேலை கொடுத்துள்ளோம். விரைவில் நிரந்தர தூய்மைப் பணியாளராக்கிவிடுவோம்" என்கிறார் உறுதியான குரலில்.

No comments:

Post a Comment