FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, July 5, 2020

`எதிர்பார்க்கல...வேலை கிடைச்சிருச்சு!' -மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு உதவிய அமைச்சர்


``விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை முழுமையாகப் படித்தேன். கடைசி வரியில், தூய்மைப் பணியாளர் வேலை கொடுத்தால்கூட போதும் என்று அந்தப் பெண் கூறியிருந்தார்" -நகராட்சி ஆணையர்.

புதுக்கோட்டை காந்தி நகரில் வசிக்கும் ராஜூ - வசந்தா தம்பதிக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 பிள்ளைகள். இதில், 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். கடைக்குட்டி பெண்ணான தனலட்சுமி மட்டும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பிறந்துவிட்டார்.

பல வருடங்களாகவே செருப்பு தைத்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ராஜூ, தண்டுவட பாதிப்பால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் முடங்கிவிட்டார். அதன்பின்பு, வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிவந்த வசந்தாவும் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே முடங்கவே, படிப்பைப் பாதியில் நிறுத்திய கடைக்குட்டி தனலட்சுமி, அம்மா செய்துவந்த வேலையான வீட்டு வேலையைச் செய்து தனது அப்பா அம்மாவுடன், மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளையும் காப்பாற்றிவந்தார். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் தனலட்சுமிக்கு வீட்டு வேலை கிடைக்கவில்லை.

அதனால், அந்தக் குடும்பம் சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், அரசு நிவாரணம் கொடுக்கவில்லை என்றாலும், கழிவறை கழுவும் வேலையாக இருந்தாலும், ஒரு வேலையை அரசு ஏற்பாடு செய்து கொடுத்தால் குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன் என்று கூறினார். இதுபற்றி ஜூன் 27-ம் தேதி, "9 பேரில் 6 பேர் மாற்றுத்திறனாளிகள்!' -கொரோனா ஊரடங்கால் பரிதவிக்கும் குடும்பம்" என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் விரிவாக செய்தியைப் பதிவு செய்திருந்தோம்.

இதைப் பார்த்த நகராட்சி ஆணையர் சுப்ரமணியன், உடனே அதிகாரிகளை அனுப்பிவைத்து, அந்தக் குடும்பம் குறித்த விவரங்களைத் திரட்டினார். இதுகுறித்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்குக் கொண்டுசென்ற ஆணையர், அவரிடம் அந்தக் குடும்பத்தின் நிலை குறித்துக் கூறியுள்ளார். உடனே, அந்தப் பெண்ணுக்கு தூய்மைப்பணியாளர் வேலையைக் கொடுக்க அமைச்சர் பரிந்துரைசெய்தார். தற்போது, தனலட்சுமி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலையைத் தொடங்கிவிட்டார்.

தனலட்சுமியிடம் பேசினோம், " மூணு இடத்துல வீட்டு வேலை செஞ்சு குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருந்தேன். ஊரடங்கு வந்ததாலதான் வீட்டு வேலைக்கும் போக முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். சாப்பாட்டுக்கும் வழியில்லை. அந்த நேரத்தில், தெரிஞ்ச அண்ணன் ஒருத்தரு, அம்மா உணவகத்தின் மூலம் கொஞ்சநாள் சாப்பாடு கிடைக்க வழி செஞ்சாரு. தூய்மைப் பணியாளர் வேலை கிடைச்சா போதும் என்றுதான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, வேலை கிடைச்சிருச்சு. நல்லா வேலைபார்த்து இந்த வேலையை கெட்டியா பிடிச்சிக்குவேன். என்னுடைய வேலைக்காக விகடன் செஞ்ச இந்த உதவியை எங்க காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

நகராட்சி ஆணையர் சுப்ரமணியனிடம் பேசினோம். " விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை முழுமையாகப் படித்தேன். கடைசி வரியில், தூய்மைப் பணியாளர் வேலை கொடுத்தால்கூட போதும் என்று அந்தப் பெண் கூறியிருந்தார். தனலட்சுமியைப் போன்றவர்கள், கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பார்கள் என்று முடிவுசெய்துதான் அமைச்சருக்குத் தகவல் கொடுத்தேன். அவரும் பார்த்துவிட்டு, உடனே பணி கொடுக்க உத்தரவிட்டார். நகராட்சியில் தற்போது தற்காலிக தூய்மைப்பணியாளர் வேலை கொடுத்துள்ளோம். விரைவில் நிரந்தர தூய்மைப் பணியாளராக்கிவிடுவோம்" என்கிறார் உறுதியான குரலில்.

No comments:

Post a Comment