FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, July 5, 2020

`9 பேரில் 6 பேர் மாற்றுத்திறனாளிகள்!' -கொரோனா ஊரடங்கால் பரிதவிக்கும் குடும்பம்


`எங்களுக்கு அரசு நிவாரண உதவி எல்லாம் செய்ய வேண்டாம். ஏதாவது ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும். குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன்' என்கிறார் தனலட்சுமி.

புதுக்கோட்டை காந்தி நகரில் வசிக்கும் ராஜூ - வசந்தா தம்பதிக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 பிள்ளைகள். இதில், 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். கடைக்குட்டிப் பெண்ணான தனலட்சுமி மட்டும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பிறந்துவிட்டார்.

பல வருடங்களாகவே செருப்பு தைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ராஜூ தண்டுவட பாதிப்பால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முடங்கிவிட்டார். அதன்பின்பு, வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்த வசந்தாவும் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே முடங்கவே, படிப்பைப் பாதியில் நிறுத்திய கடைக்குட்டி தனலட்சுமி, அம்மா செய்துவந்த வேலையான வீட்டு வேலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அப்பா, அம்மாவுடன், மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளையும் காப்பாற்றி வந்தார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால், தற்போது தனலட்சுமிக்குச் சரிவர வீட்டுவேலை கூட கிடைக்கவில்லை என்பதால், சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அந்தக் குடும்பம். எப்படிக் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்று தெரியாமல் தனலட்சுமி பரிதவித்து வருகிறார்.

தனலட்சுமியிடம் பேசினோம், ``அப்பா, அம்மா வீட்டிலேயே முடங்கினதுக்கு அப்புறம் வேற வழியில்லாமல்தான் வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அக்கா எல்லாரும் ஆரம்பத்துல என்னோட வீட்டு வேலைக்கு வந்து ஒத்தாசையாக இருந்தாங்க. பக்கத்துல வந்து கூப்பிட்டு வேலை சொல்ல வேண்டியிருக்குன்னு சொல்லி, அந்த வீட்டு முதலாளி வேலைக்கு வேண்டாம்னு அவங்கள விரட்டி விட்டுட்டாரு.

அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் காது கேட்காது, வாய் பேச முடியாது. அதோட, ஒருத்தருக்கு குடல்வாழ்வு ஆபரேஷன், ஒரு அண்ணனுக்குக் கண்ணு தெரியாது. அவங்களாலயும் வேலைக்குப் போக முடியாத நிலை. ஓர் இடத்தில வீட்டு வேலை செஞ்சு கிடைக்கிற பணம் எங்க சாப்பாடு செலவுக்குக் கூட பத்தாது. அதற்கப்புறம் ரெண்டு, மூணு இடங்களில் வீட்டு வேலை செஞ்சு காப்பாத்திக்கிட்டு இருந்தேன்.

இப்போ, இந்தக் கொரோனா ஊரடங்கு உத்தரவால், வீட்டு வேலைகளும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இப்போ வேலைக்குப் போயிட்டு வர்றேன். அக்கா, அண்ணன்கள் என எல்லாருக்கும் திருமண வயசு கடந்திருச்சு. எல்லாருக்கும் எப்படியாவது திருமணம் பண்ணி வச்சிடணும்னுதான் ஆசை. ஆனா, முடியலை.

3-வது அக்காவ இரண்டாவது திருமணம் செஞ்சிக்கிறதாகச் சொல்லி வரன் வந்துச்சு, விசாரிச்சா நல்ல இடம்னு தெரிஞ்சது. உடனே, இந்த கஷ்டத்திலயும் வீட்டு வேலை செஞ்சு சேமிச்சு வச்சிருந்த பணத்தை வச்சு நல்லபடியாக திருமணம் பண்ணி வச்சிட்டேன். ஆனா, இப்போ வீட்டுவேலை இல்லாததால, ரொம்ப கஷ்டத்தில ஓடிக்கிட்டு இருக்கு குடும்பம். எங்களுக்கு அரசு நிவாரண உதவி எல்லாம் செய்ய வேண்டாம். கழிவறை கழுவுகிற வேலையாக இருந்தால்கூட அரசு ஏதாவது ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும். குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன்" என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment