FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, July 5, 2020

`9 பேரில் 6 பேர் மாற்றுத்திறனாளிகள்!' -கொரோனா ஊரடங்கால் பரிதவிக்கும் குடும்பம்


`எங்களுக்கு அரசு நிவாரண உதவி எல்லாம் செய்ய வேண்டாம். ஏதாவது ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும். குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன்' என்கிறார் தனலட்சுமி.

புதுக்கோட்டை காந்தி நகரில் வசிக்கும் ராஜூ - வசந்தா தம்பதிக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 பிள்ளைகள். இதில், 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். கடைக்குட்டிப் பெண்ணான தனலட்சுமி மட்டும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பிறந்துவிட்டார்.

பல வருடங்களாகவே செருப்பு தைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ராஜூ தண்டுவட பாதிப்பால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முடங்கிவிட்டார். அதன்பின்பு, வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்த வசந்தாவும் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே முடங்கவே, படிப்பைப் பாதியில் நிறுத்திய கடைக்குட்டி தனலட்சுமி, அம்மா செய்துவந்த வேலையான வீட்டு வேலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அப்பா, அம்மாவுடன், மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளையும் காப்பாற்றி வந்தார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால், தற்போது தனலட்சுமிக்குச் சரிவர வீட்டுவேலை கூட கிடைக்கவில்லை என்பதால், சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அந்தக் குடும்பம். எப்படிக் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்று தெரியாமல் தனலட்சுமி பரிதவித்து வருகிறார்.

தனலட்சுமியிடம் பேசினோம், ``அப்பா, அம்மா வீட்டிலேயே முடங்கினதுக்கு அப்புறம் வேற வழியில்லாமல்தான் வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அக்கா எல்லாரும் ஆரம்பத்துல என்னோட வீட்டு வேலைக்கு வந்து ஒத்தாசையாக இருந்தாங்க. பக்கத்துல வந்து கூப்பிட்டு வேலை சொல்ல வேண்டியிருக்குன்னு சொல்லி, அந்த வீட்டு முதலாளி வேலைக்கு வேண்டாம்னு அவங்கள விரட்டி விட்டுட்டாரு.

அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் காது கேட்காது, வாய் பேச முடியாது. அதோட, ஒருத்தருக்கு குடல்வாழ்வு ஆபரேஷன், ஒரு அண்ணனுக்குக் கண்ணு தெரியாது. அவங்களாலயும் வேலைக்குப் போக முடியாத நிலை. ஓர் இடத்தில வீட்டு வேலை செஞ்சு கிடைக்கிற பணம் எங்க சாப்பாடு செலவுக்குக் கூட பத்தாது. அதற்கப்புறம் ரெண்டு, மூணு இடங்களில் வீட்டு வேலை செஞ்சு காப்பாத்திக்கிட்டு இருந்தேன்.

இப்போ, இந்தக் கொரோனா ஊரடங்கு உத்தரவால், வீட்டு வேலைகளும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இப்போ வேலைக்குப் போயிட்டு வர்றேன். அக்கா, அண்ணன்கள் என எல்லாருக்கும் திருமண வயசு கடந்திருச்சு. எல்லாருக்கும் எப்படியாவது திருமணம் பண்ணி வச்சிடணும்னுதான் ஆசை. ஆனா, முடியலை.

3-வது அக்காவ இரண்டாவது திருமணம் செஞ்சிக்கிறதாகச் சொல்லி வரன் வந்துச்சு, விசாரிச்சா நல்ல இடம்னு தெரிஞ்சது. உடனே, இந்த கஷ்டத்திலயும் வீட்டு வேலை செஞ்சு சேமிச்சு வச்சிருந்த பணத்தை வச்சு நல்லபடியாக திருமணம் பண்ணி வச்சிட்டேன். ஆனா, இப்போ வீட்டுவேலை இல்லாததால, ரொம்ப கஷ்டத்தில ஓடிக்கிட்டு இருக்கு குடும்பம். எங்களுக்கு அரசு நிவாரண உதவி எல்லாம் செய்ய வேண்டாம். கழிவறை கழுவுகிற வேலையாக இருந்தால்கூட அரசு ஏதாவது ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும். குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன்" என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment