FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, July 5, 2020

`9 பேரில் 6 பேர் மாற்றுத்திறனாளிகள்!' -கொரோனா ஊரடங்கால் பரிதவிக்கும் குடும்பம்


`எங்களுக்கு அரசு நிவாரண உதவி எல்லாம் செய்ய வேண்டாம். ஏதாவது ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும். குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன்' என்கிறார் தனலட்சுமி.

புதுக்கோட்டை காந்தி நகரில் வசிக்கும் ராஜூ - வசந்தா தம்பதிக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 பிள்ளைகள். இதில், 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். கடைக்குட்டிப் பெண்ணான தனலட்சுமி மட்டும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பிறந்துவிட்டார்.

பல வருடங்களாகவே செருப்பு தைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ராஜூ தண்டுவட பாதிப்பால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முடங்கிவிட்டார். அதன்பின்பு, வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்த வசந்தாவும் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே முடங்கவே, படிப்பைப் பாதியில் நிறுத்திய கடைக்குட்டி தனலட்சுமி, அம்மா செய்துவந்த வேலையான வீட்டு வேலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அப்பா, அம்மாவுடன், மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளையும் காப்பாற்றி வந்தார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால், தற்போது தனலட்சுமிக்குச் சரிவர வீட்டுவேலை கூட கிடைக்கவில்லை என்பதால், சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அந்தக் குடும்பம். எப்படிக் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்று தெரியாமல் தனலட்சுமி பரிதவித்து வருகிறார்.

தனலட்சுமியிடம் பேசினோம், ``அப்பா, அம்மா வீட்டிலேயே முடங்கினதுக்கு அப்புறம் வேற வழியில்லாமல்தான் வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அக்கா எல்லாரும் ஆரம்பத்துல என்னோட வீட்டு வேலைக்கு வந்து ஒத்தாசையாக இருந்தாங்க. பக்கத்துல வந்து கூப்பிட்டு வேலை சொல்ல வேண்டியிருக்குன்னு சொல்லி, அந்த வீட்டு முதலாளி வேலைக்கு வேண்டாம்னு அவங்கள விரட்டி விட்டுட்டாரு.

அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் காது கேட்காது, வாய் பேச முடியாது. அதோட, ஒருத்தருக்கு குடல்வாழ்வு ஆபரேஷன், ஒரு அண்ணனுக்குக் கண்ணு தெரியாது. அவங்களாலயும் வேலைக்குப் போக முடியாத நிலை. ஓர் இடத்தில வீட்டு வேலை செஞ்சு கிடைக்கிற பணம் எங்க சாப்பாடு செலவுக்குக் கூட பத்தாது. அதற்கப்புறம் ரெண்டு, மூணு இடங்களில் வீட்டு வேலை செஞ்சு காப்பாத்திக்கிட்டு இருந்தேன்.

இப்போ, இந்தக் கொரோனா ஊரடங்கு உத்தரவால், வீட்டு வேலைகளும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இப்போ வேலைக்குப் போயிட்டு வர்றேன். அக்கா, அண்ணன்கள் என எல்லாருக்கும் திருமண வயசு கடந்திருச்சு. எல்லாருக்கும் எப்படியாவது திருமணம் பண்ணி வச்சிடணும்னுதான் ஆசை. ஆனா, முடியலை.

3-வது அக்காவ இரண்டாவது திருமணம் செஞ்சிக்கிறதாகச் சொல்லி வரன் வந்துச்சு, விசாரிச்சா நல்ல இடம்னு தெரிஞ்சது. உடனே, இந்த கஷ்டத்திலயும் வீட்டு வேலை செஞ்சு சேமிச்சு வச்சிருந்த பணத்தை வச்சு நல்லபடியாக திருமணம் பண்ணி வச்சிட்டேன். ஆனா, இப்போ வீட்டுவேலை இல்லாததால, ரொம்ப கஷ்டத்தில ஓடிக்கிட்டு இருக்கு குடும்பம். எங்களுக்கு அரசு நிவாரண உதவி எல்லாம் செய்ய வேண்டாம். கழிவறை கழுவுகிற வேலையாக இருந்தால்கூட அரசு ஏதாவது ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும். குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன்" என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment