FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, July 11, 2020

ரூ.35,000 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்த பரிதாப வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி தாய்

10.07.2020
மயிலாடுதுறை; சீர்காழி அருகே, மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், மகளின் திருமணத்திற்காக மண்ணில் புதைத்து வைத்த பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, மாற்றி தரும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த பட்டியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை, 52; மனைவி உஷா, 52. இவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. இவர்களது மகள் திருமணத்திற்காக, உஷா பல ஆண்டுகளாக, பணத்தை சேமித்துள்ளார்.பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளாக, 35 ஆயிரத்து, 500 ரூபாயை சேமித்து, வீட்டிலேயே மண்ணில் புதைத்து வைத்துள்ளார். தற்போது, வீடு சீரமைக்கும் பணியின் போது, வேலையாட்கள் பணத்தை எடுத்து கொடுத்த பின்னரே, குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.உஷா மாற்றுத்திறனாளி என்பதால், பணம் தடை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அறியாமலே இருந்துஉள்ளார். எனவே, 35 ஆயிரம் ரூபாயை மாற்றித்தர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment