FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, July 11, 2020

ரூ.35,000 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்த பரிதாப வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி தாய்

10.07.2020
மயிலாடுதுறை; சீர்காழி அருகே, மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், மகளின் திருமணத்திற்காக மண்ணில் புதைத்து வைத்த பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, மாற்றி தரும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த பட்டியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை, 52; மனைவி உஷா, 52. இவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. இவர்களது மகள் திருமணத்திற்காக, உஷா பல ஆண்டுகளாக, பணத்தை சேமித்துள்ளார்.பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளாக, 35 ஆயிரத்து, 500 ரூபாயை சேமித்து, வீட்டிலேயே மண்ணில் புதைத்து வைத்துள்ளார். தற்போது, வீடு சீரமைக்கும் பணியின் போது, வேலையாட்கள் பணத்தை எடுத்து கொடுத்த பின்னரே, குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.உஷா மாற்றுத்திறனாளி என்பதால், பணம் தடை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அறியாமலே இருந்துஉள்ளார். எனவே, 35 ஆயிரம் ரூபாயை மாற்றித்தர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment