FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, July 11, 2020

ரூ.35,000 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்த பரிதாப வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி தாய்

10.07.2020
மயிலாடுதுறை; சீர்காழி அருகே, மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், மகளின் திருமணத்திற்காக மண்ணில் புதைத்து வைத்த பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, மாற்றி தரும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த பட்டியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை, 52; மனைவி உஷா, 52. இவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. இவர்களது மகள் திருமணத்திற்காக, உஷா பல ஆண்டுகளாக, பணத்தை சேமித்துள்ளார்.பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளாக, 35 ஆயிரத்து, 500 ரூபாயை சேமித்து, வீட்டிலேயே மண்ணில் புதைத்து வைத்துள்ளார். தற்போது, வீடு சீரமைக்கும் பணியின் போது, வேலையாட்கள் பணத்தை எடுத்து கொடுத்த பின்னரே, குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.உஷா மாற்றுத்திறனாளி என்பதால், பணம் தடை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அறியாமலே இருந்துஉள்ளார். எனவே, 35 ஆயிரம் ரூபாயை மாற்றித்தர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment