FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, July 5, 2020

2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வாய்பேச முடியாத, காதுகேட்காத நபரை, குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளது ஒரு டிக் டாக் வீடியோ


Ludhiana:
2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வாய்பேச முடியாத, காதுகேட்காத நபரை, குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளது ஒரு டிக் டாக் வீடியோ. தெலங்கானாவில் நடந்திருக்கும் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தெலங்கானா மாநிலம் பத்ராத்தி கோதகுடம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோதம் வெங்கடேஸ்வரலு. இவர் கடந்த 2018 ஏப்ரல் மாதம் காணாமல் போனார்.

இதுபற்றி போலீசிடம் வெங்கடேஸ்வரலுவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். ஆனால் எவ்வளவு தேடியும், அவர் கிடைக்கவில்லை.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், வெங்கடேஸ்வரலுவுக்கு காது கேட்காது; பேசவும் முடியாது. இதனால் அவருக்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்தில் குடும்பத்தினர் இருந்தனர். நீண்ட நாட்கள் ஆனதால் அவர் உயிரிழந்திருக்க கூடும் என்று கருதி அவருக்கு இறுதிச் சடங்குகளையும் குடும்பத்தினர் செய்து முடித்தனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது. இதனை போலீஸ் கான்ஸ்டபிள் அஜய் சிங் விடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார்.

வெங்கேடஸ்வரலுவின் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த வியாழன் அன்று இந்த வீடியோவை பார்த்து, இது அவர்தானா என்பதை உறுதி செய்ய, வெங்கடேஸ்வரலுவின் மகள் கனகதுர்காவிடம் காண்பித்துள்ளார். இதில், 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது தந்தைதான் என்பதை துர்கா உறுதி செய்தார்.

இதையடுத்து பஞ்சாபுக்கு விரைந்த வெங்கடேஸ்வரலுவின் மகன் பெட்டிராஜு, லூதியானா போலீஸ் இணை கமிஷனரை பார்த்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதன்பின்னர் போலீஸ் உதவியுடன் வெங்கேடஸ்வரலு கண்டுபிடிக்கப்பட்டார். தந்தையும், மகனும் சந்தித்துக்கொண்டபோது கண்ணீர் விட்டு அழுது பாசத்தை பகிர்ந்து கொண்டனர். தற்போது குடும்பத்தினருடன் வெங்கடேஸ்வரலு இணைந்துள்ளார்.

இறந்துவிட்டார் என்று எண்ணி இறுதிச் சடங்கு முடித்த நிலையில், வெங்கடேஸ்வரலு ஊர் திரும்பிய சம்பவம் தெலங்கானாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment