FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, October 21, 2020

வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை


20.10.2020
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா தலைமையில் நடந்த இந்த ஏலத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கையை ஏற்று, மாற்றுத் திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் வாகன ஏலம் தனியாக நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களும் கலந்துகொண்டு, 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் கிடைக்க ஏற்ப்பாடு செய்த மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியாவுக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் செல்வநாயகம், பகத்சிங் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


பெரியநாயக்கன்பாளையம் அருகே அண்ணனை அடித்துக்கொன்ற காது மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கைது

21.10.2020
இடிகரை,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 57). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தெய்வானை. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராமகிருஷ்ணனின் தம்பி லட்சுமணன் (48). பிறவியிலேயே காது மற்றும் வாய்பேச முடியாது. இவருக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமணன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 4-ந் தேதி ராமகிருஷ்ணன் தனது தம்பி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டை ஏன் சுத்தம் செய்யாமல் இருக்கிறாய்? என்று சைகை மூலம் லட்சுமணனிடம் கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தனது அண்ணன் ராமகிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்தார். பின்னர் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து மயக்கத்தில் இருந்து எழுந்த ராமகிருஷ்ணன் வழக்கம்போல் வேலையை பார்த்தார். ஆனால் 4 நாட்களுக்கு பிறகு அவருக்கு தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீரபாண்டி பிரிவு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கடந்த 16-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தலைக்குள் ரத்தம் உறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தலையில் இரும்பு பெட்டி அடித்தாக அவரின் தம்பி லட்சுமணன் போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரின் செயலில் சந்தேகம் அடைந்து துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

அத்துடன் மாற்றுத்திறனாளிகளிடம் சைகை பாஷை பேசும் ஒருவர் வரவழைக்கப்பட்டு லட்சுமணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது அண்ணனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் லட்சுமணனை கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே அண்ணனை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tuesday, October 20, 2020

Players Going For Glory At National Zone Cricket Championship League For Deaf

20.10.2020
Highlights
  • The 2nd ODI National Zone Cricket Championship League for Deaf is going to be played in New Delhi from March 1 to 5, 2021.
  • Deaf cricketers from different parts of the country shall be displaying their talents.
  • The aim is to nurture talent which can then do us proud at the national level.
The 2nd ODI National Zone Cricket Championship League for Deaf is going to be played in New Delhi from March 1 to 5, 2021. Deaf cricketers from different parts of the country shall be displaying their talents. The Indian Deaf Cricket Association which is recognised by the Deaf International Cricket Council is organising it.

“We are really excited to be hosting this tournament. This will be the best platform for all cricketing talent in India to come and showcase themselves. This tournament will definitely encourage the Indian players and give them the confidence to play at the International level,” said Sumit Jain, President of Indian Deaf Cricket Association, as per the official release.

“This will be an important test for all our players as the team for DICC World Cup 2021 will be chosen from among these players. This is their opportunity to reserve a spot in Team India for the World Cup. I would like to wish each player the very best.” he added.

Registration has already begun from September 15.

“IDCA is managed by differently-abled members who are committed to proving they are a reflection of the immense capabilities existing within each of us. Young auditory-challenged cricketers in the organization are striving to promote and upgrade cricket as a professional sport among themselves. Nonetheless, we believe a greater degree of support from official cricket bodies would help these players put in better performances,” said Reena Jain Malhotra, a patron of the IDCA.

Cricket for Hearing Impaired: IDCA set to organise 2nd national zonal meet in March next year


17.10.2020
NEW DELHI: The Indian Deaf Cricket Association (IDCA) will be conducting the second inter-zonal championship for the hearing impaired in the capital from March 1-5 next year.

The tournament will serve as a selection trial for the Indian hearing impaired team that will take part in the Cricket World Cup for the Deaf, scheduled in the UAE in November next year.

IDCA president Sumit Jain said: "We are really excited to be hosting this tournament. This will be the best platform for all cricketing talent in India to come and showcase themselves.

"This tournament will definitely encourage the Indian players and give them confidence to play at the International level."


காது கேளாத மாணவர்களுக்காக சைகை மொழி புத்தகங்களை வடிவமைக்க புதிய ஒப்பந்தம்….

18.10.2020
இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்க, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் என்சிஇஆர்டி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் காது கேளாத குழந்தைகள், சைகை மொழியில் பாடப்புத்தகங்களையும் பிற கல்வி உபகரணங்களையும் உபயோகப்படுத்திக் கற்க முடியும்.

குழந்தைப் பருவத்தில்தான் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் வளர்கின்றன. அதனால் அப்போதில் இருந்தே அவர்களின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப, கல்வி உபகரணங்களை வழங்க வேண்டியது அவசியம். இதுநாள் வரை காது கேளாத மாணவர்கள், வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ கற்றலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தற்போது காது கேளாத மாணவர்கள், இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் வகையில் என்சிஇஆர்டி, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மெய்நிகர் முறையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

இதுகுறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறும்போது, ''இந்திய சைகை மொழியில் இனி என்சிஇஆர்டி புத்தகங்களும் பிற கற்றல் உபகரணங்களும் கிடைக்கும். இதன்மூலம் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் காது கேளாதோர் சமூகத்தினர் மிகுந்த பயன் பெறுவர்'' என்றார்.

ஹத்ராஸ் சோகம் மறையும் முன்பு குஜராத்தில் அதிர்ச்சி : 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார கொலை

18.10.2020
பனஸ்காந்தா,:குஜராத்தின் பனஸ்காந்தா அடுத்த டீசாவில் என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி (பேசும் திறனற்ற, காதுகேளாத மாற்றுத்திறனாளி) 2 தினங்களுக்கு முன்பு மாயமானார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் டான்டிவாடா போலீசார் சிறுமியின் சடலத்தை அதேபகுதியில் மீட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘12 வயது சிறுமி முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். தற்போது, ​​இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட குற்றவாளி சிறுமியின் உறவினர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை சம்பவ நாளில் தன்னுடன் பைக்கில் அழைத்துச் சென்றார். இந்த நபர் முதலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார், தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர். இதுகுறித்து எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், ‘குஜராத்தில் பாரத மாதாவின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் விஷயத்தில் பிரதமர் மோடி ஏதாவது பேச வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறினோம். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இப்போது குஜராத்தின் டான்டிவாடாவில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வளர்ச்சி? இங்கே சட்டம்ஒழுங்கு கெட்டுள்ளது’ என்றார்.


Thursday, October 8, 2020

மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம்: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

07.10.2020
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாற்றுத் திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டிலும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் தையல் பயிற்சி பெற்றிருப்பின் அவா்களுக்கு இயந்திரம் வழங்கப்படுகிறது. 75 சதவிகிதத்துக்கு மேல் மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகளின் தாய்மாா்கள் இத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றவராக, வேறு அரசுத் திட்டங்களில் தையல் இயந்திரம் பெறாதவராக இருத்தல் வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பமுடையோா் மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, தையல் பயிற்சி பெற்ற சான்று, குடும்ப அட்டை, ஆதாா்அட்டை ஆகியவற்றின் நகலுடன், புகைப்படத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் பின்புறம், கண்டோன்மென்ட், திருச்சி-1 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2412590 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.



இனி சைகை மொழியில் பள்ளிப் பாடங்களைப் படிக்கலாம்: என்சிஇஆர்டி புரிந்துணர்வு ஒப்பந்தம்

07.10.2020
இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்க, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் என்சிஇஆர்டி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் காது கேளாத குழந்தைகள், சைகை மொழியில் பாடப்புத்தகங்களையும் பிற கல்வி உபகரணங்களையும் உபயோகப்படுத்திக் கற்க முடியும்.

குழந்தைப் பருவத்தில்தான் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் வளர்கின்றன. அதனால் அப்போதில் இருந்தே அவர்களின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப, கல்வி உபகரணங்களை வழங்க வேண்டியது அவசியம். இதுநாள் வரை காது கேளாத மாணவர்கள், வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ கற்றலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தற்போது காது கேளாத மாணவர்கள், இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் வகையில் என்சிஇஆர்டி, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மெய்நிகர் முறையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

இதுகுறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறும்போது, ''இந்திய சைகை மொழியில் இனி என்சிஇஆர்டி புத்தகங்களும் பிற கற்றல் உபகரணங்களும் கிடைக்கும். இதன்மூலம் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் காது கேளாதோர் சமூகத்தினர் மிகுந்த பயன் பெறுவர்'' என்றார்.



Tuesday, October 6, 2020

NCERT textbooks to be available in Indian sign language

NCERT textbooks to be available in Indian sign language

06.10.2020
The National Council of Educational Research and Training (NCERT) signed an MoU with the Indian Sign Language Research and Training Centre (ISLRTC) on Tuesday to make textbooks and other educational material accessible for deaf children in sign language.

The National Council of Educational Research and Training (NCERT) signed an MoU with the Indian Sign Language Research and Training Centre (ISLRTC) on Tuesday to make textbooks and other educational material accessible for deaf children in sign language.

"The availability of NCERT textbooks in Indian Sign Language (ISL) will ensure that hearing-impaired children can also now access educational resources and it will be a useful and much-needed resource for teachers, teacher educators, parents and the hearing-impaired community," Union Minister for Social Justice and Empowerment Thawar Chand Gehlot said.

According to officials of the ministry, the cognitive skills of children are developed in the childhood and it is necessary to provide them with educational material in accordance with their learning needs.

"So far, hearing-impaired children used to study only through a verbal or written medium but after the signing of this MoU, they can study through a single Indian Sign Language also.

It will not only enhance their vocabulary, but also enhance their capabilities to understand concepts," Secertary Shakuntala Gamlin said.

The ISLRTC is an autonomous national institute of the social justice and empowerment ministry, which is dedicated to developing manpower for popularising the use of Indian Sign Language, teaching and conducting research.

The memorandum of understanding (MoU) was signed in the virtual presence of Gehlot and Education Minister Ramesh Pokhriyal "Nishank".




Historic MoU Signed between ISLRTC and NCERT for Converting Educational Materials in to Indian Sign Language


06.10.2020
New Delhi: A historic Memorandum of Understanding (MoU) was signed today between Indian Sign Language Research and Training Center-ISLRTC (a National Institute of DEPwD, Ministry of Social Justice and Empowerment) and NCERT (a National Institute of Ministry of Education) to make education materials accessible for Deaf children in their preferred format of communication viz Indian Sign Language. This MoU was signed in the virtual presence of Dr. Thaawarchand Gehlot, Union Minister for Social Justice and Empowerment; Shri Ramesh Pokhriyal ‘Nishank’, Union Minister for Education; Smt Shakuntala Doley Gamlin, Secretary, DEPwD and Smt. Anita Karwal, Secretary (SE&L), Ministry of Education. Dr. Prabodh Seth, Joint Secretary, DEPwD & Director, ISLRTC and Prof. Hrushikesh Senapathy, Director, NCERT signed the MoU from the respective institutes.

Addressing on the occasion, Dr. Thaawarchand Gehlot said that the signing of this MoU is a historic step as availability of NCERT textbooks in Indian Sign Language (ISL) will ensure that Hearing Impaired children can also now access educational resources in Indian Sign Language and it will be a useful and much needed resource for Hearing Impaired students, teachers, teacher educators, parents and the Hearing Impaired community, which in turn will have a huge impact on the education of Hearing Impaired children in the country. After this MoU, NCERT educational books and materials will be available in Indian Sign Language which is same all over India, which means all hearing impaired students of India whether from East or West or North or South, they all will read NCERT books in a single language i.e. Indian Sign Language. Indian Sign Language denotes Unity in Diversity which is explained through Hands and understood through Eyes and it connects all hearing impaired people of our country all together.

Shri Gehlot said that this MoU is a step towards achieving common goal of fulfilling needs of Rights of Persons with Disabilities (RPWD) Act, 2016 and New Education Policy, 2020. As part of this MoU, educational print materials such as NCERT Textbooks, Teachers Handbook and other Supplementary materials and resources of Class I-XII of all subjects of both Hindi and English Medium will be converted into Indian Sign Language in Digital format.

Shri Ramesh Pokhariyal ‘Nishank’ in his address congratulated NCERT on its 60th Foundation Day today and said that signing of MoU between NCERT and ISLRTC for converting NCERT educational materials in to Indian sign language ensures educational standardization of Indian Sign Language as mandated in the New Education Policy (NEP), 2020. He said that DEPwD under Ministry of Social Justice and Empowerment has done remarkable works for the welfare and upliftment of Divyangjan in the country for the past 6 years and many new records have also been made on its achievements. Definitely this MoU will empower the hearing impaired children in our country. He hoped that New Education Policy, 2020 is an inclusive one and will transform our country.

Smt. Shakuntala D. Gamlin in her address said that in the childhood days, the cognitive skills of children are developed and it is very necessary to provide them educational material as per their learning needs. So far, hearing impaired children used to study only through verbal or written medium but after signing of this MoU, they can study through single Indian Sign Language also. It will not only enhance their vocabulary but also enhance their capabilities to understand concepts. Signing of this MoU is based on the UNICEF’s initiative “Accessible Digital Textbooks for All” and it is a landmark decision.

In her address, Smt. Anita Karwal said that the New Education Policy, 2020 has focused on the Multi Lingual Education. Now NCERT under Ministry of Education will develop a Sign Language Module for Indian Sign Language. She congratulated NCERT on 60th Foundation Day as well as for signing this historic MoU with ISLRTC for converting NCERT educational materials in to Indian sign language.

Indian Sign Language Research and Training Centre (ISLRTC) is an autonomous national institute of DEPwD, MSJE which is dedicated to the task of developing man-power for popularizing the use of Indian Sign Language, teaching and conducting research in Indian Sign Language.

NCERT is an autonomous organization under MHRD which is responsible for ensuring qualitative improvement in school education by undertaking and promoting research in areas related to school education; prepare and publish model textbooks, supplementary material, newsletters, journals and develops educational kits, multimedia digital materials, etc. develop and disseminate innovative educational techniques and practices; and act as a nodal agency for achieving the goals of Universalization of Elementary Education.




உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் காது கேளாத இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை

06.10.2020
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் காது கேளாத இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

கோரக்பூர் மாவட்டத்தின் செளரி செளரா கிரமத்தில் திங்கள்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காது கேளாத 18 வயது இளம் பெண்ணை அப்பகுதியை சேர்ந்த பிந்து பிரசாத் (25) என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அங்கு வந்த அப்பெண்ணின் அண்ணி, பிந்துவை தடுத்துள்ளார். இதையடுத்து அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (கற்பழிப்பு) இன் கீழ் வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை பிந்து பிரசாதை காவல்துறையினர் கைது செய்தனர்.



Sunday, October 4, 2020

மாற்றுத்திறனாளி சேவகா்கள் விருது: அக்.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

04.10.2020
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கான விருதுகளுக்கு, அக்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் அல்லது நிறுவனங்களுக்கு சிறந்த பணியாளா், சிறந்த ஆசிரியா், சிறந்த சமூகப் பணியாளா், சிறந்த தொண்டு நிறுவனம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் தமிழக அரசு சாா்பில் 20 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இவை, டிச.3-ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகள் நாளன்று வழங்கப்படும். இதனைப் பெற மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, காமராஜா் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை 600 005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அக்.20-ஆம் தேதிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிறந்த குழந்தையின் காது கேளாமையும் அதன் தீர்வுகளும்

04.10.2020
குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் காது கேளாமை குறைபாடு ஏற்படவாய்ப்பு உள்ளது. குழந்தைகளில் 5 சதவீதம் பேரும் பெரியவர்களில் 8.5 சதவீதம்பேரும் மூத்த குடிமக்கள் 50 சதவீதம் பேரும் காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தட்டம்மை, மூளைக்காய்ச்சல், காதில் சீழ் வடிதல் அதன் தொடர்ச்சியான வியாதிகள், விபத்துகள், தலைக்காயம், அதிக சத்தம் உருவாகும் கலாசார விழாக்கள், இரவு நேர கிளப்புகள் மற்றும் பார்களில் ஏற்படும் சத்தங்கள், வயது முதிர்வு காரணமாகவும் காதுகளில் பாதிப்பு ஏற்பட்டு காது கேளாத நிலை ஏற்படும். காதில் மெழுகு மற்றும் காதில் தவறுதலாக போடப்படும் பொருள்கள் ஆகியவற்றால் காது கேளாமை ஏற்படுகிறது.

பெரும்பாலும் செவித்திறன் பாதிக்கப்பட்டு காது கேளாத நிலைமை பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களிடம் அதிகளவு உள்ளது. ஆகவே இதன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து முறையான சிகிச்சை மற்றும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.

செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப்படிப்பு தொடங்கி உயர் கல்வி கற்கும் வரை வெளியில் சொல்ல முடியாத வேதனையை அனுபவிக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை பெரும்பாலான காது கேளாமைக்கான காரணங்கள் 65 சதவீதம் தவிர்க்கப்படக் கூடிய பட்டியலில் இருக்கிறது.

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மருத்துவர்கள் நலத்திட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மக்கள் நலனில் ஆர்வம் உள்ளவர்கள் ஒன்றிணைந்து காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள்.

இந்திய அரசும் தமிழக அரசும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிவரும் மருத்துவ உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது வாழ்வை மேம்படுத்துகிறது.

பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் காது கேட்கும் திறன் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ‘ஓ.ஏ.இ’ கருவிகள் மூலமாகவும் அதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ‘பி.இ.ஆர்.ஏ’ டெஸ்ட் மூலமாகவும் அறிந்துகொண்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்’ கருவி பொருத்தி மறுவாழ்வு அளிக்கிறார்கள். இதனால் தேவையான வகையில் கருவிகள் வைத்து காது கேட்கும் திறனை செம்மைப்படுத்த முடியும்.

காதில் சீழ் வடியும் பள்ளிக் குழந்தைகளை பரிசோதித்து சிகிச்சை அளிப்பதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது.

குழந்தை பருவத்தை தாண்டியவர்களுக்கு காதில் சீழ்வடிந்தால் அதற்கான மருத்துவசிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைக்கு ஏற்றபடி செய்தும் காதொலி வழங்கும் கருவிகள் பொருத்திக்கொள்ளலாம்.

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக ஒலி பாதிப்பு இல்லாமல் தற்காத்துக் கொள்வது, தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது, இதற்கென ஏற்படுத்தியுள்ள அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் ஒட்டுமொத்தமாக தவிர்க்கப்படக்கூடிய சத்தத்தை குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நெருங்கிய ரத்த உறவு திருமணங்களை தவிர்த்து நம்மையும் நமது கேட்கும் திறனையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுப்போம்.

நன்றி: –

டாக்டர்.அ.ஜேசுதாஸ். முதல்வர், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி



கர்ப்பிணிகள் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் செவித்திறனை பாதிக்குமா?



உலக சுகாதார நிறுவனம் இந்த வருடம் மார்ச் 3-ந்தேதியை உலக செவித்திறன் நாளாக அறிவித்து உள்ளது.

செல்வத்தில் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் வள்ளுவர்.. ஒரு தாய் வயிற்றில் கர்ப்பமான மூன்றாவது மாதம் முதல் சிசுவின் கேட்கும் திறன் வளர்கிறது. குழந்தைகள் கேட்கும் முதல் சத்தம் தாயின் இதயத் துடிப்பே ஆகும். ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கும் காலக்கட்டத்தில் நல்லசெய்திகளை கேட்டு, பரபரப்பின்றி அமைதியுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் தாய் கேட்பதை கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையாலும் கேட்க முடியும்.

2019-ம் வருட உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின்படி 46.6 கோடிமக்கள், செவித்திறன் குறைபாடுகளுடன் இருப்பதாகவும் இதில் 34 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது. அதாவது 100 பேரில் 5 பேருக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளது. உலகில் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே காது கேளாத குறைபாடு உள்ளது.

அதுவே இந்தியாவை பொறுத்தவரை 1000 பேரில் 2 பேர் என்பதும் தமிழகத்தைப் பொறுத்தவரை 1000 பேரில் 6 பேர் எனவும் இருக்கிறது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிறவியிலேயே காது கேளாமையோடு பிறந்த குழந்தைகள் மூன்றில் இரண்டு பங்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்தவர்களுக்கு பிறந்தவையாகும் எனத் தெரியவந்துள்ளது.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் மரபணு குறைபாடுகளாலும் சில நோய் தொற்று மற்றும் வேறு சில நோய்களுக்காக மருந்து உட்கொள்ளுதல் ஆகிய காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல் பிரசவத்தின்போது சில குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு அயற்சி மற்றும் அதிகமான மஞ்சள்காமாலை அல்லது சில வைரஸ்கிருமி நோய் தொற்று போன்ற காரணங்களாலும் செவித்திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளும் சிலவகை மருந்துகள்கூட குழந்தையின் செவித்திறனை பாதிக்க வைத்து விடுகிறது.அதனைக் கண்டறியும் நவீன மருத்துவ சாதனங்கள் அதிக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளிலும் வசதி உள்ளது.

நன்றி: –

டாக்டர்.அ.ஜேசுதாஸ். முதல்வர், தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி




Friday, October 2, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

02.10.2020
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவா்கள், நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவையாற்றியவா்கள், தொடா்ந்து சிறப்பாக சேவையாற்ற வேண்டும் என்ற ஆா்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் டிச.3-ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

தமிழக அளவில் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு 10 கிராமில் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி, பாா்வை, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியா்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரிந்த சிறந்த சமூக பணியாளா், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமா்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியா் (செவிதிறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா்), மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா் மற்றும் நடத்துநா் விருதுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிக்கு விருது...

கை, கால் பாதிக்கப்பட்டோா் அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோா், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், மனவளா்ச்சிக்குன்றியோா், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலக சிந்தனையற்றோா், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மன நோய், ரத்த உறையாமை அல்லது ரத்த ஒழுகு குறைபாடு, ரத்த அழிவுச் சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன்முக கடினமாதல், நடுக்குவாதம், பல்வகை குறைபாடுடையோரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், லேடிவெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜா் சாலை, சென்னை-5 அல்லது இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது திருவாரூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆகியோரிடமிருந்து பெற்று, பூா்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் அக்டோபா் 16- ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.6, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவாரூா் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Thursday, October 1, 2020

மாதாந்திர உதவித்தொகை: மாற்றுத்திறனாளிகள் தோ்வு

01.10.2020
கரூரில் மாதாந்திர உதவித்தொகை பெறத் தகுதியான மாற்றுத்திறனாளிகளைத் தோ்வு செய்யும் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியா் த.அன்பழகன் தொடக்கிவைத்துப் பாா்வையிட்டு அவா் மேலும் பேசியது: கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், புகளுா் மற்றும் கடவூா் வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் வருகை தந்திருந்த 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் குழு

பரிசோதனை செய்து குறைபாடுகளை உறுதிசெய்து பரிந்துரை அளித்தனா். முகாமில், பரிசோதிக்கப்பட்ட 20 நபா்களில் 16 போ் மாதாந்திர உதவித்தொகை பெறத்தகுதியுடையவா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். கரூா் மாவட்டத்தில் 2016 முதல் 2020 வரை 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 183 போ்கள் தகுதியானவா்கள் எனக் கண்டறிந்து மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்வின்போது, சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் ரசிக்கலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, மருத்துவா்கள் அன்பழகன், பாலமுருகன், ஹேமலதா, பரமேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா்.


பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

01.10.2020
2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான, பி.எஸ்.சி. நர்சிங், பி.ஃபார்ம், பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வுக்குழு செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடியுரிமை கொண்ட மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி நர்சிங், பி.ஃபார்ம், பி.ஏஎஸ்எல்பி ( செவித்திறன் பேச்சு மற்றும் மொழிக்குறியியல் பட்டப்படிப்பு), பி.பி.டி., பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்.சி. மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி, பி.எஸ்.சி. டயாலிசிஸ் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ஆப்பரேசன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி, பி.எஸ்.சி. க்ரிடிகல்கேர் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரெஸ்பிரேட்டரி தெரபி,, பி.ஓ.டி, பி.ஆப்டம் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://tnhealth.tn.gov மற்றும் www.tnmedicalselection.gov ஆகிய இணையதளத்தில் உள்ள தகவலைப் படித்தபின், விண்ணப்பப் படிவங்களில் கோரப்பட்ட தகவல்களை 01-10-2020 10 மணி முதல் 15-10-2020 5 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான கட்டணம் ரூ.400 ஐ ஆன்லைனிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ”the Secretary, Slection Committee, kilpauk, chennai -10” என்ற பெயரில் சென்னையில் பணமாக மாற்றத்தக்கதாக எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலை மூலமாக செலுத்தலாம் என்றும், பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் சேர்க்கை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதிய நிகழ்வு விவரங்களை சேர்க்கை முடியும் வரை அவ்வபொழுது கட்டாயமாக பார்த்து அறிந்துகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பி.எட் சிறப்புக் கல்வி பட்டப் படிப்பில் பாா்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு: இன்று முதல் சோ்க்கை

01.10.2020
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட் சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை, வியாழக்கிழமை (அக்.1) முதல் தொடங்குகிறது.

இது குறித்து பல்கலை. பதிவாளா் கே.ரத்னகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான பி.எட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு, வியாழக்கிழமை (அக்.1), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பி.எட் சிறப்புக் கல்வி படிப்பானது பாா்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளிலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு பயின்றோா் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபா் 31. மேலும் விவரங்களுக்கு, 044 2430 6617, 84285 75967, 98416 85515 ஆகிய எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.