FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, October 20, 2020

ஹத்ராஸ் சோகம் மறையும் முன்பு குஜராத்தில் அதிர்ச்சி : 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார கொலை

18.10.2020
பனஸ்காந்தா,:குஜராத்தின் பனஸ்காந்தா அடுத்த டீசாவில் என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி (பேசும் திறனற்ற, காதுகேளாத மாற்றுத்திறனாளி) 2 தினங்களுக்கு முன்பு மாயமானார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் டான்டிவாடா போலீசார் சிறுமியின் சடலத்தை அதேபகுதியில் மீட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘12 வயது சிறுமி முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். தற்போது, ​​இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட குற்றவாளி சிறுமியின் உறவினர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை சம்பவ நாளில் தன்னுடன் பைக்கில் அழைத்துச் சென்றார். இந்த நபர் முதலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார், தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர். இதுகுறித்து எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், ‘குஜராத்தில் பாரத மாதாவின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் விஷயத்தில் பிரதமர் மோடி ஏதாவது பேச வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறினோம். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இப்போது குஜராத்தின் டான்டிவாடாவில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வளர்ச்சி? இங்கே சட்டம்ஒழுங்கு கெட்டுள்ளது’ என்றார்.


No comments:

Post a Comment