FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, October 20, 2020

ஹத்ராஸ் சோகம் மறையும் முன்பு குஜராத்தில் அதிர்ச்சி : 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார கொலை

18.10.2020
பனஸ்காந்தா,:குஜராத்தின் பனஸ்காந்தா அடுத்த டீசாவில் என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி (பேசும் திறனற்ற, காதுகேளாத மாற்றுத்திறனாளி) 2 தினங்களுக்கு முன்பு மாயமானார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் டான்டிவாடா போலீசார் சிறுமியின் சடலத்தை அதேபகுதியில் மீட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘12 வயது சிறுமி முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். தற்போது, ​​இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட குற்றவாளி சிறுமியின் உறவினர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை சம்பவ நாளில் தன்னுடன் பைக்கில் அழைத்துச் சென்றார். இந்த நபர் முதலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார், தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர். இதுகுறித்து எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், ‘குஜராத்தில் பாரத மாதாவின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் விஷயத்தில் பிரதமர் மோடி ஏதாவது பேச வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறினோம். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இப்போது குஜராத்தின் டான்டிவாடாவில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வளர்ச்சி? இங்கே சட்டம்ஒழுங்கு கெட்டுள்ளது’ என்றார்.


No comments:

Post a Comment