FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, October 20, 2020

ஹத்ராஸ் சோகம் மறையும் முன்பு குஜராத்தில் அதிர்ச்சி : 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார கொலை

18.10.2020
பனஸ்காந்தா,:குஜராத்தின் பனஸ்காந்தா அடுத்த டீசாவில் என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி (பேசும் திறனற்ற, காதுகேளாத மாற்றுத்திறனாளி) 2 தினங்களுக்கு முன்பு மாயமானார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் டான்டிவாடா போலீசார் சிறுமியின் சடலத்தை அதேபகுதியில் மீட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘12 வயது சிறுமி முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். தற்போது, ​​இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட குற்றவாளி சிறுமியின் உறவினர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை சம்பவ நாளில் தன்னுடன் பைக்கில் அழைத்துச் சென்றார். இந்த நபர் முதலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார், தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர். இதுகுறித்து எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், ‘குஜராத்தில் பாரத மாதாவின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் விஷயத்தில் பிரதமர் மோடி ஏதாவது பேச வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறினோம். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இப்போது குஜராத்தின் டான்டிவாடாவில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வளர்ச்சி? இங்கே சட்டம்ஒழுங்கு கெட்டுள்ளது’ என்றார்.


No comments:

Post a Comment