FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, October 8, 2020

மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம்: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

07.10.2020
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாற்றுத் திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டிலும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் தையல் பயிற்சி பெற்றிருப்பின் அவா்களுக்கு இயந்திரம் வழங்கப்படுகிறது. 75 சதவிகிதத்துக்கு மேல் மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகளின் தாய்மாா்கள் இத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றவராக, வேறு அரசுத் திட்டங்களில் தையல் இயந்திரம் பெறாதவராக இருத்தல் வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பமுடையோா் மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, தையல் பயிற்சி பெற்ற சான்று, குடும்ப அட்டை, ஆதாா்அட்டை ஆகியவற்றின் நகலுடன், புகைப்படத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் பின்புறம், கண்டோன்மென்ட், திருச்சி-1 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2412590 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.



No comments:

Post a Comment