FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, October 8, 2020

மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம்: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

07.10.2020
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாற்றுத் திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டிலும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் தையல் பயிற்சி பெற்றிருப்பின் அவா்களுக்கு இயந்திரம் வழங்கப்படுகிறது. 75 சதவிகிதத்துக்கு மேல் மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகளின் தாய்மாா்கள் இத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றவராக, வேறு அரசுத் திட்டங்களில் தையல் இயந்திரம் பெறாதவராக இருத்தல் வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பமுடையோா் மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, தையல் பயிற்சி பெற்ற சான்று, குடும்ப அட்டை, ஆதாா்அட்டை ஆகியவற்றின் நகலுடன், புகைப்படத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் பின்புறம், கண்டோன்மென்ட், திருச்சி-1 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2412590 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.



No comments:

Post a Comment