FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, October 1, 2020

பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

01.10.2020
2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான, பி.எஸ்.சி. நர்சிங், பி.ஃபார்ம், பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வுக்குழு செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடியுரிமை கொண்ட மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி நர்சிங், பி.ஃபார்ம், பி.ஏஎஸ்எல்பி ( செவித்திறன் பேச்சு மற்றும் மொழிக்குறியியல் பட்டப்படிப்பு), பி.பி.டி., பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்.சி. மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி, பி.எஸ்.சி. டயாலிசிஸ் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ஆப்பரேசன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி, பி.எஸ்.சி. க்ரிடிகல்கேர் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரெஸ்பிரேட்டரி தெரபி,, பி.ஓ.டி, பி.ஆப்டம் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://tnhealth.tn.gov மற்றும் www.tnmedicalselection.gov ஆகிய இணையதளத்தில் உள்ள தகவலைப் படித்தபின், விண்ணப்பப் படிவங்களில் கோரப்பட்ட தகவல்களை 01-10-2020 10 மணி முதல் 15-10-2020 5 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான கட்டணம் ரூ.400 ஐ ஆன்லைனிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ”the Secretary, Slection Committee, kilpauk, chennai -10” என்ற பெயரில் சென்னையில் பணமாக மாற்றத்தக்கதாக எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலை மூலமாக செலுத்தலாம் என்றும், பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் சேர்க்கை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதிய நிகழ்வு விவரங்களை சேர்க்கை முடியும் வரை அவ்வபொழுது கட்டாயமாக பார்த்து அறிந்துகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment