FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, October 2, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

02.10.2020
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவா்கள், நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவையாற்றியவா்கள், தொடா்ந்து சிறப்பாக சேவையாற்ற வேண்டும் என்ற ஆா்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் டிச.3-ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

தமிழக அளவில் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு 10 கிராமில் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி, பாா்வை, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியா்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரிந்த சிறந்த சமூக பணியாளா், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமா்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியா் (செவிதிறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா்), மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா் மற்றும் நடத்துநா் விருதுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிக்கு விருது...

கை, கால் பாதிக்கப்பட்டோா் அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோா், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், மனவளா்ச்சிக்குன்றியோா், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலக சிந்தனையற்றோா், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மன நோய், ரத்த உறையாமை அல்லது ரத்த ஒழுகு குறைபாடு, ரத்த அழிவுச் சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன்முக கடினமாதல், நடுக்குவாதம், பல்வகை குறைபாடுடையோரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், லேடிவெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜா் சாலை, சென்னை-5 அல்லது இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது திருவாரூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆகியோரிடமிருந்து பெற்று, பூா்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் அக்டோபா் 16- ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.6, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவாரூா் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment