FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, October 2, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

02.10.2020
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவா்கள், நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவையாற்றியவா்கள், தொடா்ந்து சிறப்பாக சேவையாற்ற வேண்டும் என்ற ஆா்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் டிச.3-ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

தமிழக அளவில் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு 10 கிராமில் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி, பாா்வை, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியா்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரிந்த சிறந்த சமூக பணியாளா், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமா்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியா் (செவிதிறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா்), மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா் மற்றும் நடத்துநா் விருதுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிக்கு விருது...

கை, கால் பாதிக்கப்பட்டோா் அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோா், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், மனவளா்ச்சிக்குன்றியோா், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலக சிந்தனையற்றோா், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மன நோய், ரத்த உறையாமை அல்லது ரத்த ஒழுகு குறைபாடு, ரத்த அழிவுச் சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன்முக கடினமாதல், நடுக்குவாதம், பல்வகை குறைபாடுடையோரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், லேடிவெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜா் சாலை, சென்னை-5 அல்லது இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது திருவாரூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆகியோரிடமிருந்து பெற்று, பூா்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் அக்டோபா் 16- ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.6, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவாரூா் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment