FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, October 2, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

02.10.2020
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவா்கள், நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவையாற்றியவா்கள், தொடா்ந்து சிறப்பாக சேவையாற்ற வேண்டும் என்ற ஆா்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் டிச.3-ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

தமிழக அளவில் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு 10 கிராமில் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி, பாா்வை, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியா்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரிந்த சிறந்த சமூக பணியாளா், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமா்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியா் (செவிதிறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா் மற்றும் மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியா்), மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா் மற்றும் நடத்துநா் விருதுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிக்கு விருது...

கை, கால் பாதிக்கப்பட்டோா் அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோா், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், மனவளா்ச்சிக்குன்றியோா், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலக சிந்தனையற்றோா், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மன நோய், ரத்த உறையாமை அல்லது ரத்த ஒழுகு குறைபாடு, ரத்த அழிவுச் சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன்முக கடினமாதல், நடுக்குவாதம், பல்வகை குறைபாடுடையோரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், லேடிவெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜா் சாலை, சென்னை-5 அல்லது இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது திருவாரூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆகியோரிடமிருந்து பெற்று, பூா்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் அக்டோபா் 16- ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.6, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவாரூா் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment