FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, October 29, 2025

வாய் பேசமுடியாத காது கேளாத ரசிகரிடம் அஜித் செய்த செயல்



28.10.2025
நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். திரைத்துறையை பொறுத்தவரை குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அஜித் சமீபத்தில் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் கேரளா, பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கர பகவதி தேவஸ்வம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அஜித், பகவதி அம்மனை டாட்டூவாக நெஞ்சில் போட்டிருந்தர். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து திருப்பூரில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில், துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதனைத் தொடர்ந்து தற்போது திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் தல தல... என கூச்சலிட்டனர். அவர்களை சைகை மூலம் இது கோயில்.. அமைதியாக இருங்கள் என அமைதியாக்கினார். பின்பு அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க செல்போனை அஜித் முகம் முன்பு நீட்ட அவரை பார்த்த அஜித் அவரிடம் ஏதோ கேட்க அதற்கு அந்த ரசிகர் தன்னால் வாய் பேசவும் காது கேளவும் இயலாது என சொன்னதும் அவரின் போனை வாங்கிய அஜித் அவருடன் செல்ஃபி எடுத்து கொடுத்தார். இந்த செயல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.




No comments:

Post a Comment