FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, October 17, 2025

அரசு பணிகளில் ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கு வேண்டும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்



16.10.2025 
மதுரை: மதுரையில் வெண்கோல் (ஊன்றுகோல்) தினத்தையொட்டி பார்வை மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில உதவித்தலைவர் பாரதி அண்ணா, மாவட்ட தலைவர் மதிபாரதி, துணைச்செயலாளர் குமரவேல் ஆகியோர் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு கொடுத்தனர்.

அதில் தெரிவித்திருப்பதாவது: நுாறு சதவீதம் பார்வை திறனற்றோரை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மொத்த அரசு பணியிடங்களில் ஒரு சதவீதம் பார்வையற்றோர் இருக்கும் வகையில் வங்கி, கல்வி பணிகளில் கூடுதலாக இடம் ஒதுக்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாநில அரசு அறிவித்தபடி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நிரப்பப்படாத பின்னடைவு பணிகளுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு தேர்வு நடத்த வேண்டும். பார்வையற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதோடு லேப்டாப், ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும். பஸ்களில் பஸ்ஸ்டாப் குறித்து ஒலிக்க செய்ய வேண்டும். பாதசாரிகள் சாலைகளை கடக்கும் இடத்தில் ஒலிஅறிவிப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.


No comments:

Post a Comment