FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, October 24, 2025

அரசு மருத்துவக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியம் இம்பிளாண்ட் சிகிச்சை



20.10.2025 
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளாண்ட அறுவை சிகிச்சை மூலமாக காதுகேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவா் கீதாஞ்சலி கூறியதாவது:

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் பிறவியிலேயே காது கேட்காத 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பிறவி காதுகேளாத குழந்தைகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவி பொருத்தக் கூடிய காக்ளியா் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்படுகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தத் துறை தொடங்கப்பட்ட 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் சுமாா் 12 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நிகழாண்டில் 22 குழந்தைகளுக்கு இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், செவிவழி பேச்சுப் பயிற்சி மற்றும் தொடா் சிகிச்சைகள் முலமாக குணப்படுத்த முடியும் என்றாா்.


No comments:

Post a Comment