FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, October 11, 2025

மாற்றுத்திறனாளிகள் கார் வாங்கினால் 10% ஜி.எஸ்.டி வரி கிடையாது; பழைய முறையே அமல்படுத்த நிர்மலா சீதாராமனுக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்



09.10.2025 
மாற்றுத்திறனாளிகள் கார் வாங்கினால் 10% ஜிஎஸ்டி வரி கிடையாது பழைய முறையே அமல்படுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி. ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் கார் வாங்கினால் 10% ஜிஎஸ்டி வரி கிடையாது பழைய முறையே அமல்படுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமனுக்கு எம் பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். கார் வாங்குவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 10% ஜிஎஸ்டி வரி சலுகையைத் தொடர வேண்டும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில், மாற்றுத் திறனாளிகள் சிறு ரக கார் வாங்குவதற்கு 10% ஜிஎஸ்டி வரி சலுகை வழங்கப்பட்டு வந்தது. 28% ஜிஎஸ்டி வரி இருந்தபோது அவர்களுக்கு 18% விதிக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி வரிகளில் மாற்றம் செய்யப்பட்டு சிறு ரக கார்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்டதற்குப் பின்பு மாற்று திறனாளிகளுக்கு வரி சலுகை கொடுக்கத் தேவையில்லை என நிதி அமைச்சகம் கூறிவிட்டதாக ஒன்றிய கனரகத் தொழில்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் பெருமைப்பட்டுக்கொள்ளும் நிலையில் அந்த வரிக்குறைப்பு மாற்றுத் திறனாளிகளுக்குக் கிடையாது எனச் சொல்வது எவ்விதத்திலும் நியாயமல்ல. எனவே, ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்குப் பிறகும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10% ஜிஎஸ்டி வரி சலுகையை வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் வரி சலுகையானது வெறுமனே நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையல்ல, அது அவர்களின் கண்ணியத்தைக் காப்பாற்றி மற்றவர்களுக்கு இணையாக அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். எனவே, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் சிறிய ரக கார் வாங்குவதற்கு வழங்கப்பட்டுவந்த 10% ஜிஎஸ்டி வரிச் சலுகையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.



No comments:

Post a Comment