FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, May 25, 2016

கட்டணமின்றி மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர வாய்ப்பு



25.07.2016, சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டணமின்றி படிக்க விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிர்வாகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்றாண்டு டிப்ளமோ படிப்பதற்கு மத்திய அரசு சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில் முதலாமாண்டு படிக்க விரும்பும் மாணவர்கள், சிவில் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் என்ஜினீயரிங், பிரிண்டிங் டெக்னாலாஜி, மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், இதற்கான தனி விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர், சுய விலாசமிட்ட உறையில் ரூ.10க்கான தபால் தலை ஒட்டி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

இத்தகைய மாணவர்களுக்கு படிப்பு கட்டணம் இலவசம், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை மற்றும் பயணத் தொகை வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தொடர்புக்கு 94862 33740 , 97883 98892, 90923 52973 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment