FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, May 25, 2016

கட்டணமின்றி மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர வாய்ப்பு



25.07.2016, சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டணமின்றி படிக்க விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிர்வாகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்றாண்டு டிப்ளமோ படிப்பதற்கு மத்திய அரசு சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில் முதலாமாண்டு படிக்க விரும்பும் மாணவர்கள், சிவில் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் என்ஜினீயரிங், பிரிண்டிங் டெக்னாலாஜி, மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், இதற்கான தனி விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர், சுய விலாசமிட்ட உறையில் ரூ.10க்கான தபால் தலை ஒட்டி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

இத்தகைய மாணவர்களுக்கு படிப்பு கட்டணம் இலவசம், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை மற்றும் பயணத் தொகை வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தொடர்புக்கு 94862 33740 , 97883 98892, 90923 52973 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment