FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, May 25, 2016

கட்டணமின்றி மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர வாய்ப்பு



25.07.2016, சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டணமின்றி படிக்க விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிர்வாகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்றாண்டு டிப்ளமோ படிப்பதற்கு மத்திய அரசு சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில் முதலாமாண்டு படிக்க விரும்பும் மாணவர்கள், சிவில் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் என்ஜினீயரிங், பிரிண்டிங் டெக்னாலாஜி, மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், இதற்கான தனி விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர், சுய விலாசமிட்ட உறையில் ரூ.10க்கான தபால் தலை ஒட்டி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

இத்தகைய மாணவர்களுக்கு படிப்பு கட்டணம் இலவசம், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை மற்றும் பயணத் தொகை வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தொடர்புக்கு 94862 33740 , 97883 98892, 90923 52973 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment