FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, May 25, 2016

கட்டணமின்றி மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர வாய்ப்பு



25.07.2016, சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டணமின்றி படிக்க விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிர்வாகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்றாண்டு டிப்ளமோ படிப்பதற்கு மத்திய அரசு சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில் முதலாமாண்டு படிக்க விரும்பும் மாணவர்கள், சிவில் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் என்ஜினீயரிங், பிரிண்டிங் டெக்னாலாஜி, மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், இதற்கான தனி விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர், சுய விலாசமிட்ட உறையில் ரூ.10க்கான தபால் தலை ஒட்டி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

இத்தகைய மாணவர்களுக்கு படிப்பு கட்டணம் இலவசம், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை மற்றும் பயணத் தொகை வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தொடர்புக்கு 94862 33740 , 97883 98892, 90923 52973 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment