FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, April 21, 2025

காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

21.04.2025 சிவகங்கை: அரசு பொதுத்தேர்வுகளில் காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைக்க வேண்டும், என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

சிவகங்கையில் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது:

உடல் இயக்க குறைபாடு உடையவர்களுக்கு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அவர்கள் சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆனால் காது கேளாத, வாய் பேசாதவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்ய இயலாது. அவர்களின் நிரந்தர ஊனத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண் வழங்க வேண்டும்.

அறிவுசார் குறைபாடு, முடக்கு வாத பாதிப்பு, கை செயலிழப்பு, புற உலக சிந்தனை, உடல் இயக்க குறைபாடு, பன்முக குறைபாடு, மனநலம் சார்ந்த குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, கண் பார்வை குறைபாடு போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் திடீர் விபத்துகளால் ஏற்படும் கை முறிவு போன்ற தற்காலிக பாதிப்பு உடையவர்களுக்கும் சொல்வதை எழுதுபவர் அதாவது அதே பாட ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு எழுதும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பிறவியிலேயே சில மாணவர்கள் காது கேட்காமல் வாய் பேசாமலும் இருப்பதால் அவர்களுக்குச் சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகள் கிடைக்கப் பெறுவதில்லை. கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வு எழுத மட்டும் ஒதுக்கப்படுகிறது. இதனால் பயனில்லை.
காது கேளாதவருக்கு அறுவை சிகிச்சை செய்து காது கேட்கும் கருவி பொருத்தப்படுகிறது. பெரும்பாலானவருக்கு அவ்வாறு பொருத்தப்படும் கருவி செயலிழந்து விடுவதால் எப்பயனும் கிடைக்க பெறுவதில்லை. மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதின் அபாயம் கருதி பெற்றோர்களும் தயக்கம் காட்டுவதால் நிரந்தர குறைபாடாக காது கேளாமை உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் காது கேட்காத மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற தேவையான குறைந்தபட்சம் 35 சதவீதம் மதிபெண்கள் வழங்கிட வேண்டும் என்றார்.




No comments:

Post a Comment