FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, April 21, 2025

காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

21.04.2025 சிவகங்கை: அரசு பொதுத்தேர்வுகளில் காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைக்க வேண்டும், என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

சிவகங்கையில் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது:

உடல் இயக்க குறைபாடு உடையவர்களுக்கு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அவர்கள் சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆனால் காது கேளாத, வாய் பேசாதவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்ய இயலாது. அவர்களின் நிரந்தர ஊனத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண் வழங்க வேண்டும்.

அறிவுசார் குறைபாடு, முடக்கு வாத பாதிப்பு, கை செயலிழப்பு, புற உலக சிந்தனை, உடல் இயக்க குறைபாடு, பன்முக குறைபாடு, மனநலம் சார்ந்த குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, கண் பார்வை குறைபாடு போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் திடீர் விபத்துகளால் ஏற்படும் கை முறிவு போன்ற தற்காலிக பாதிப்பு உடையவர்களுக்கும் சொல்வதை எழுதுபவர் அதாவது அதே பாட ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு எழுதும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பிறவியிலேயே சில மாணவர்கள் காது கேட்காமல் வாய் பேசாமலும் இருப்பதால் அவர்களுக்குச் சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகள் கிடைக்கப் பெறுவதில்லை. கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வு எழுத மட்டும் ஒதுக்கப்படுகிறது. இதனால் பயனில்லை.
காது கேளாதவருக்கு அறுவை சிகிச்சை செய்து காது கேட்கும் கருவி பொருத்தப்படுகிறது. பெரும்பாலானவருக்கு அவ்வாறு பொருத்தப்படும் கருவி செயலிழந்து விடுவதால் எப்பயனும் கிடைக்க பெறுவதில்லை. மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதின் அபாயம் கருதி பெற்றோர்களும் தயக்கம் காட்டுவதால் நிரந்தர குறைபாடாக காது கேளாமை உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் காது கேட்காத மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற தேவையான குறைந்தபட்சம் 35 சதவீதம் மதிபெண்கள் வழங்கிட வேண்டும் என்றார்.




No comments:

Post a Comment