FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, June 5, 2025

சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை


05.06.2025
சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:

மாற்றுத்திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில், அரசு செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி, ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் தங்கும் விடுதியுடன் செயல்படுகிறது. அங்கு, 1 முதல், 10ம் வகுப்பு வரை, நடப்பாண்டு சேர்க்கை நடக்கிறது. இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். கணினி திறனை மேம்படுத்த சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், செவித்துணைக்கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 2024 - 25ம் கல்வியாண்டில் இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், செவித்திறன் குறைவுடைய குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் கல்வி நலனை மேம்படுத்த இந்த பள்ளியில் சேர்க்கலாம். குறிப்பிட்டு, 0427 - 2442067, 94999-33469 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment