FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, September 28, 2020

சத்துணவு அமைப்பாளா், சமையல் உதவியாளா் பணிக்கு செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

27.09.2020
திருப்பூா்: சத்துணவு அமைப்பாளா், சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரா்கள் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எம்.ஜி.ஆா்.சத்துணவு திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 5 சத்துணவு அமைப்பாளா், 14 சமையல் உதவியாளா் என மொத்தம் 19 காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் இன சுழற்சி அடிப்படையில் தகுதியான பெண்கள் நியமிக்கப்படவுள்ளனா். சத்துணவு அமைப்பாளா் பணிக்கு பொதுப் பிரிவினா், தாழ்த்தப்பட்டோா் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினா் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்தவா்களாகவும் 18 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், மாற்றுத் திறனாளிகள் 43 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளா் பணிக்கு 5 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவா்கள், 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் , பழங்குடியினா் எழுதப் படிக்க தெரிந்திருப்பதுடன், 21 முதல் 40 வயதுக்குமிகாதவராகவும் , விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, இருப்பிடம், ஜாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், இதர முன்னுரிமை ஆகியவற்றுக்கான ஆதாரச் சான்று நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இதில், நியமன பணியிடத்தில் இருந்து விண்ணப்பதாரா் குடியிருப்பு 3 கிலோ மீட்டா் தொலைவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment