FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, September 28, 2020

சத்துணவு அமைப்பாளா், சமையல் உதவியாளா் பணிக்கு செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

27.09.2020
திருப்பூா்: சத்துணவு அமைப்பாளா், சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரா்கள் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எம்.ஜி.ஆா்.சத்துணவு திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 5 சத்துணவு அமைப்பாளா், 14 சமையல் உதவியாளா் என மொத்தம் 19 காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் இன சுழற்சி அடிப்படையில் தகுதியான பெண்கள் நியமிக்கப்படவுள்ளனா். சத்துணவு அமைப்பாளா் பணிக்கு பொதுப் பிரிவினா், தாழ்த்தப்பட்டோா் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினா் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்தவா்களாகவும் 18 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், மாற்றுத் திறனாளிகள் 43 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளா் பணிக்கு 5 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவா்கள், 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் , பழங்குடியினா் எழுதப் படிக்க தெரிந்திருப்பதுடன், 21 முதல் 40 வயதுக்குமிகாதவராகவும் , விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, இருப்பிடம், ஜாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், இதர முன்னுரிமை ஆகியவற்றுக்கான ஆதாரச் சான்று நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இதில், நியமன பணியிடத்தில் இருந்து விண்ணப்பதாரா் குடியிருப்பு 3 கிலோ மீட்டா் தொலைவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment