FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, September 29, 2020

தூய்மை பணியில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள்

28.09.2020
திருவொற்றியூர்:சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் புது முயற்சியாக, தூய்மை பணியாளர் பிரிவில், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள் உள்ளன. இதில், 1,506 தெருக்களில், 87 ஆயிரத்து, 418 குடியிருப்புகள் உள்ளன; 3.83 லட்சம் பேர் வசிக்கின்றனர். தினமும் சேகரமாகும், 175 டன் குப்பையை, 1,200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.மாநகராட்சியில், புது முயற்சியாக, திருவொற்றியூரில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒன்பது திருநங்கையர் துாய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து, செவித்திறன் குறைபாடு உடைய, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில் ஊழியர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி, நேற்று காலை, திருவொற்றியூர் குப்பை மேடு பகுதியில் நடந்தது.இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர்ஜானி டாம் வர்கீஸ், மண்டல உதவி ஆணையர்தேவேந்திரன் மற்றும் செயற்பொறியாளர் பால் தங்கதுரை பங்கேற்று, தூய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதுகாப்பு உடைகள் வழங்கினர்.பின், மாற்றுத்திறனாளிகளுக்கு, குப்பை தரம் பிரிப்பு, உரம் தயாரிப்பு போன்ற பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

பின், ஜானி டாம் வர்கீஸ் அளித்த பேட்டி:சென்னை மாநகராட்சியில், முதன் முறையாக, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில், பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிய முயற்சிகளை செயல்படுத்துவதில், திருவொற்றியூர் முன்மாதிரியாக திகழ்கிறது.மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி கிடைக்கும் வகையில், 12 பேரும் முன்மாதிரியாக பணியாற்ற வேண்டும் எனக் கூறினார்.


No comments:

Post a Comment