FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, September 29, 2020

தூய்மை பணியில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள்

28.09.2020
திருவொற்றியூர்:சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் புது முயற்சியாக, தூய்மை பணியாளர் பிரிவில், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள் உள்ளன. இதில், 1,506 தெருக்களில், 87 ஆயிரத்து, 418 குடியிருப்புகள் உள்ளன; 3.83 லட்சம் பேர் வசிக்கின்றனர். தினமும் சேகரமாகும், 175 டன் குப்பையை, 1,200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.மாநகராட்சியில், புது முயற்சியாக, திருவொற்றியூரில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒன்பது திருநங்கையர் துாய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து, செவித்திறன் குறைபாடு உடைய, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில் ஊழியர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி, நேற்று காலை, திருவொற்றியூர் குப்பை மேடு பகுதியில் நடந்தது.இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர்ஜானி டாம் வர்கீஸ், மண்டல உதவி ஆணையர்தேவேந்திரன் மற்றும் செயற்பொறியாளர் பால் தங்கதுரை பங்கேற்று, தூய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதுகாப்பு உடைகள் வழங்கினர்.பின், மாற்றுத்திறனாளிகளுக்கு, குப்பை தரம் பிரிப்பு, உரம் தயாரிப்பு போன்ற பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

பின், ஜானி டாம் வர்கீஸ் அளித்த பேட்டி:சென்னை மாநகராட்சியில், முதன் முறையாக, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில், பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிய முயற்சிகளை செயல்படுத்துவதில், திருவொற்றியூர் முன்மாதிரியாக திகழ்கிறது.மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி கிடைக்கும் வகையில், 12 பேரும் முன்மாதிரியாக பணியாற்ற வேண்டும் எனக் கூறினார்.


No comments:

Post a Comment