FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, February 11, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்குப் பணி நியமன ஆணை



08.02.2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடத்திய முகாமை, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடக்கி வைத்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுஜா சோய் இண்டஸ்ட்ரீஸ், ரெட்டி பவுண்டேசன், பாரத் எண்டர்பிரைசஸ் பெட்ரோல் பங்க், ஹோட்டல் தயாளன், ஏர்சி நடேசன் நிறுவனம், கணேசன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. முகாமில், 150க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில், தேர்வான 30-க்கு மேற்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜி.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment