FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, July 31, 2014

மாற்றுத்திறன் மாணவருக்கு கல்வி உதவித்தொகை

 
மாற்றுத் திறனாளிகளாக அடையாளம் காணப்பட்ட பிறகு அவர்களுக்கு மருத்துவம், கல்வி, பொருளாதாரம், தொழில் என நான்கு வகைகளில் அரசு பல்வேறு உதவிகளை வழங்குகிறது. கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கி வரும் கல்வி உதவித்தொகை குறித்து அந்தத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
எந்தெந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது?
பார்வையற்றவர், பேச்சுத் திறன் குறைந்தவர்கள், செவித்திறன் இழந்தவர், மனவளர்ச்சி குன்றியவர், கடும் உடல் ஊனமுற்றோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் கல்வி அளிக்கப்படுகிறது.
இயல்பான பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் சேர்க்கப்படுகிறார்களா?
அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சாதாரண மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கென சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். பள்ளி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாடம் கற்பிக்கலாம் என சக ஆசிரியர்களுடன் சிறப்பு ஆசிரியர்கள் ஆலோசனை பெற வேண்டும். அதுபோல் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு என்ன கல்வி, பயிற்சி அளிக்கப்பட்டது என்று கலந்தாலோசிக்க வேண்டும்.
கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறதா?
ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மற்றும் அதற்குமேல் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற முந்தைய ஆண்டுத் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
9 முதல் 12-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படிப்போருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரமும், முதுநிலை பட்டப்படிப்பு படிப்போருக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
பார்வையற்றோர் படிக்க இயலாத சூழலில் உதவிக்கு வைக்கும் வாசிப்பாளருக்கு அரசு மூலம் ஏதேனும் உதவி வழங்கப்படுகிறதா?
எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் டிப்ளமோ படிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், உதவிக்கு வைத்துக் கொள்ளும் வாசிப்பாளருக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளியின் வாசிப்பாளருக்கு ரூ.5 ஆயிரமும், முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளியின் வாசிப்பாளருக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும். 

No comments:

Post a Comment