FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, July 31, 2014

மாற்றுத்திறன் மாணவருக்கு கல்வி உதவித்தொகை

 
மாற்றுத் திறனாளிகளாக அடையாளம் காணப்பட்ட பிறகு அவர்களுக்கு மருத்துவம், கல்வி, பொருளாதாரம், தொழில் என நான்கு வகைகளில் அரசு பல்வேறு உதவிகளை வழங்குகிறது. கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கி வரும் கல்வி உதவித்தொகை குறித்து அந்தத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
எந்தெந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது?
பார்வையற்றவர், பேச்சுத் திறன் குறைந்தவர்கள், செவித்திறன் இழந்தவர், மனவளர்ச்சி குன்றியவர், கடும் உடல் ஊனமுற்றோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் கல்வி அளிக்கப்படுகிறது.
இயல்பான பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் சேர்க்கப்படுகிறார்களா?
அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சாதாரண மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கென சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். பள்ளி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாடம் கற்பிக்கலாம் என சக ஆசிரியர்களுடன் சிறப்பு ஆசிரியர்கள் ஆலோசனை பெற வேண்டும். அதுபோல் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு என்ன கல்வி, பயிற்சி அளிக்கப்பட்டது என்று கலந்தாலோசிக்க வேண்டும்.
கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறதா?
ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மற்றும் அதற்குமேல் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற முந்தைய ஆண்டுத் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
9 முதல் 12-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படிப்போருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரமும், முதுநிலை பட்டப்படிப்பு படிப்போருக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
பார்வையற்றோர் படிக்க இயலாத சூழலில் உதவிக்கு வைக்கும் வாசிப்பாளருக்கு அரசு மூலம் ஏதேனும் உதவி வழங்கப்படுகிறதா?
எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் டிப்ளமோ படிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், உதவிக்கு வைத்துக் கொள்ளும் வாசிப்பாளருக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளியின் வாசிப்பாளருக்கு ரூ.5 ஆயிரமும், முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளியின் வாசிப்பாளருக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும். 

No comments:

Post a Comment