FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, July 6, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்க கோரிக்கை

05.07.2014, மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகையை கூடுதலாக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளதாக அத்துறை அமைச்சர் தாவர்சந்த் கேலாட் கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் விவகாரங்களுக்கான மாநில ஆணையர்கள் கூட்டம் புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இப்போதுள்ள சலுகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதனைப் பரிசீலித்துவருவதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் அறிமுகம் செய்திருந்தது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து அந்த மசோதாவை புதிய நிலைக்குழு பரிசீலனை செய்யும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு நிலைக்குழு அமைக்கப்படும். நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பாக மாநில அரசுகள் தனித் துறை அமைப்பது அவசியமாகும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment