FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, July 6, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்க கோரிக்கை

05.07.2014, மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகையை கூடுதலாக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளதாக அத்துறை அமைச்சர் தாவர்சந்த் கேலாட் கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் விவகாரங்களுக்கான மாநில ஆணையர்கள் கூட்டம் புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இப்போதுள்ள சலுகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதனைப் பரிசீலித்துவருவதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் அறிமுகம் செய்திருந்தது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து அந்த மசோதாவை புதிய நிலைக்குழு பரிசீலனை செய்யும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு நிலைக்குழு அமைக்கப்படும். நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பாக மாநில அரசுகள் தனித் துறை அமைப்பது அவசியமாகும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment