FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, July 25, 2014

மாற்று திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்: முதல்வர் அறிவிப்பு

25.07.2014 சென்னை:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகளுக்கும் சத்துணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று, பேரவை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிக்கை:

மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் தற்போது 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அமைக்கப்படும். இதற்கென அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 92 லட்சத்து 10,800 கூடுதல் செலவு ஏற்படும்.

தமிழ்நாட்டில் 14 வயதிற்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான தங்கும் வசதி, உணவு மற்றும் தொழிற் பயிற்சியுடன் கூடிய 31 இல்லங்கள், 21 மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இல்லங்களை தருமபுரி, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஆண்களுக்கும், விருதுநகர், அரியலூர், திருப்பூர், நீலகிரி மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் பெண்களுக்கும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், அரசுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 34,800 செலவு ஏற்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில், விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.650 வீதம் உணவூட்டுச் செலவினம் வழங்கப்படுகிறது. இச்சிறப்புப் பள்ளிகளில், தற்போது மதிய உணவு வழங்கப்படுவதில்லை. எனவே, இந்த பள்ளிகளுக்கும் சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், சுமார் 1,733 மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.38 லட்சத்து 99,250 கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-Tamil Murasu

No comments:

Post a Comment