FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, July 21, 2014

ஆந்திராவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை தாக்கிய ஆசிரியர்


21.07.2014
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை, பள்ளி ஆசிரியர் ஒருவர் மிகவும் கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. மனதை பதைபதைக்கச் செய்யும் இந்த சம்பவம், காக்கிநாடாவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான பார்வையற்றோர் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. மாணவர்களை கடுமையாகவும் சரமாரியாகவும் பிரம்பால் அடிக்கும் நபர், அந்த பள்ளியின் முதல்வரும் ஆசிரியருமான ஸ்ரீநிவாஸ் என்பது தெரியவந்துள்ளது. மாணவர்கள் கெஞ்சியும், மனம் இறங்காத அந்த ஆசிரியர், கதறி அழுத மாணவர்களை தனது ஆத்திரம் தீர அடித்துள்ளார். மாணவர்களை அடிப்பதற்கு பள்ளியின் செயலாளர் கே.வி.ராவ் உதவுவதும் வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. 2 தினங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான காட்சிகள், இன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ், அவருக்கு உதவிய கே.வி.ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வுசெய்த கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கியது தொடர்பான விசாரணை நடத்த வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய அந்த தனியார் பள்ளியின் முதல்வர் ஸ்ரீநிவாசும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனம் இறங்காத அந்த ஆசிரியர், கதறி அழுத மாணவர்களை தனது ஆத்திரம் தீர அடித்துள்ளார். மாணவர்களை அடிப்பதற்கு பள்ளியின் செயலாளர் கே.வி.ராவ் உதவுவதும் வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. 2 தினங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான காட்சிகள், இன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ், அவருக்கு உதவிய கே.வி.ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வுசெய்த கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய அந்த தனியார் பள்ளியின் முதல்வர் ஸ்ரீநிவாசும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment