FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, July 21, 2014

ஆந்திராவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை தாக்கிய ஆசிரியர்


21.07.2014
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை, பள்ளி ஆசிரியர் ஒருவர் மிகவும் கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. மனதை பதைபதைக்கச் செய்யும் இந்த சம்பவம், காக்கிநாடாவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான பார்வையற்றோர் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. மாணவர்களை கடுமையாகவும் சரமாரியாகவும் பிரம்பால் அடிக்கும் நபர், அந்த பள்ளியின் முதல்வரும் ஆசிரியருமான ஸ்ரீநிவாஸ் என்பது தெரியவந்துள்ளது. மாணவர்கள் கெஞ்சியும், மனம் இறங்காத அந்த ஆசிரியர், கதறி அழுத மாணவர்களை தனது ஆத்திரம் தீர அடித்துள்ளார். மாணவர்களை அடிப்பதற்கு பள்ளியின் செயலாளர் கே.வி.ராவ் உதவுவதும் வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. 2 தினங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான காட்சிகள், இன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ், அவருக்கு உதவிய கே.வி.ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வுசெய்த கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கியது தொடர்பான விசாரணை நடத்த வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய அந்த தனியார் பள்ளியின் முதல்வர் ஸ்ரீநிவாசும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனம் இறங்காத அந்த ஆசிரியர், கதறி அழுத மாணவர்களை தனது ஆத்திரம் தீர அடித்துள்ளார். மாணவர்களை அடிப்பதற்கு பள்ளியின் செயலாளர் கே.வி.ராவ் உதவுவதும் வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. 2 தினங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான காட்சிகள், இன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ், அவருக்கு உதவிய கே.வி.ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வுசெய்த கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய அந்த தனியார் பள்ளியின் முதல்வர் ஸ்ரீநிவாசும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment