FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, July 21, 2014

ஆந்திராவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை தாக்கிய ஆசிரியர்


21.07.2014
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை, பள்ளி ஆசிரியர் ஒருவர் மிகவும் கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. மனதை பதைபதைக்கச் செய்யும் இந்த சம்பவம், காக்கிநாடாவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான பார்வையற்றோர் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. மாணவர்களை கடுமையாகவும் சரமாரியாகவும் பிரம்பால் அடிக்கும் நபர், அந்த பள்ளியின் முதல்வரும் ஆசிரியருமான ஸ்ரீநிவாஸ் என்பது தெரியவந்துள்ளது. மாணவர்கள் கெஞ்சியும், மனம் இறங்காத அந்த ஆசிரியர், கதறி அழுத மாணவர்களை தனது ஆத்திரம் தீர அடித்துள்ளார். மாணவர்களை அடிப்பதற்கு பள்ளியின் செயலாளர் கே.வி.ராவ் உதவுவதும் வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. 2 தினங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான காட்சிகள், இன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ், அவருக்கு உதவிய கே.வி.ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வுசெய்த கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கியது தொடர்பான விசாரணை நடத்த வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய அந்த தனியார் பள்ளியின் முதல்வர் ஸ்ரீநிவாசும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனம் இறங்காத அந்த ஆசிரியர், கதறி அழுத மாணவர்களை தனது ஆத்திரம் தீர அடித்துள்ளார். மாணவர்களை அடிப்பதற்கு பள்ளியின் செயலாளர் கே.வி.ராவ் உதவுவதும் வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. 2 தினங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான காட்சிகள், இன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ், அவருக்கு உதவிய கே.வி.ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வுசெய்த கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய அந்த தனியார் பள்ளியின் முதல்வர் ஸ்ரீநிவாசும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment