FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, July 29, 2014

அமெரிக்காவின் தன்னம்பிக்கைப் பெண்: போரில் காலை இழந்த வீராங்கனை

வாழ்வின் நெருக்கடிகளில் மனம் தளரக் கூடாது, தடைகளை எதிர்த்துத் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என்பன போன்ற வரிகள் பேசுவதைப் போன்று செயலுக்கு எளிதானவை அல்ல. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் துணிச்சலாக எதிர்கொண்டார்.
மெலிஸா ஸ்டாக்வெல். மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் இவர், ஒரு காலை முழுவதுமாக இழந்தவர். அமெரிக்காவின் மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், விளையாட்டு வீராங்கனையும் திகழும் மெலீஸா, ஈராக் போரின் போது அமெரிக்கா சார்பில் போர் முனைக்குச் சென்றவர். லெப்டினன்ட் அதிகாரியாக பாக்தாத் நகரச் சாலையில் ராணுவக் கண்காணிப்பு வாகனங்களை வழிநடத்தியவர்.

2004-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த மெலிசாவின் இடதுகால் துண்டிக்கப்பட்டது.. இந்த வகையில் ஈராக்கில் அமெரிக்காவுக்காக தனது காலை இழந்த முதல் ராணுவ வீராங்கனை இவர்தான். இந்த இழப்பால் அவர்
சோர்ந்துவிடவில்லை. காலை இழந்த மறு கணமே, விளையாட்டுப் போட்டிகளில் எப்படிப் பங்கேற்பது எனச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் இவர். குண்டுவெடிப்பில் சிக்கிய தாம் உயிருடன் இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்கிறபோது, இழந்துவிட்டதை எண்ணிக் கவலை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பது மெலிசாவின் கருத்து.

பாக்தாத்தில் குண்டுவெடிப்பில் குற்றுயிராகக் கிடந்த இவருக்கு 52 நாள்கள் தொடர் அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. தன்னம்பிக்கையுடன் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த பாராலம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற இவருக்கு, ஈராக் போர்முனையில் பணியாற்றிவிட்டு பாராலம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட முதல் நபர் என்ற பெருமை கிடைத்தது. 100 மீட்டர் ப்ரீஸ்டைல், 400 மீட்டர் ப்ரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்ப்ளை போன்ற போட்டிகளில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட மெலீசாவுக்குப் பதக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தொடர் தோல்விகளுக்குப் பிறகும் அவரது விளையாட்டுக் கனவுகள் முற்றுப்பெறவில்லை. பதக்கங்களைப் பெறாவிட்டாலும், சீன பாரலம்பிக் போட்டிகள் தமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத்தந்ததாகக் கூறிய மெலீசா, நீச்சல், சைக்கிள், ஓட்டம் ஆகியவற்றைக் கொண்ட பாரா ட்ரையத்லான் போட்டிகளுக்காகக் கடுமையாகப் பயிற்சி பெற்றார்.

2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் பாரா ட்ரையத்லான் உலகச் சாம்பியன் போட்டிகளில் அமெரிக்க அணிக்காகப் பங்கேற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத்தந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறந்த மாற்றுத்திறனாளி ட்ரையத்லான் வீராங்கனை என்ற பட்டமும் இவருக்கு அளிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டிகளில்தான் ட்ரையத்லான் போட்டிகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. மெலிசாவின் அடுத் இலக்கு, இதில் பதக்கங்களைக் குவிப்பதுதான்.

விளையாட்டு தவிர, மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையிலும் மெலீசாவுக்கு ஆர்வம் உண்டு. 2005-ம் ஆண்டு போரில் உறுப்புகளை இழந்தவர்களுக்கான அமைப்பில் இயக்குநர் குழுமத்தில் பங்கேற்றுள்ளார். இவரது ஆளுமை நிறைந்த பேச்சு, உலகம் முழுவதும் இவருக்கு பெரும்பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாழ்வில் தடைகளைத் தகர்த்து தன்னம்பிக்கை பெறுவதற்கு இவரது வாழ்வும் பேச்சும் உதாரணங்கள் என்று அமெரிக்கர்கள் போற்றுகிறார்கள். ஒரு காலைக் கொண்டு சாதித்திருப்பதை இருகால்கள் மூலம்கூடச் சாதித்திருக்க இயலாமல் போயிருக்கலாம் என்கிறார், இந்தத் தன்னம்பிக்கை நட்சத்திரம்.

No comments:

Post a Comment