FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, July 29, 2014

அமெரிக்காவின் தன்னம்பிக்கைப் பெண்: போரில் காலை இழந்த வீராங்கனை

வாழ்வின் நெருக்கடிகளில் மனம் தளரக் கூடாது, தடைகளை எதிர்த்துத் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என்பன போன்ற வரிகள் பேசுவதைப் போன்று செயலுக்கு எளிதானவை அல்ல. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் துணிச்சலாக எதிர்கொண்டார்.
மெலிஸா ஸ்டாக்வெல். மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் இவர், ஒரு காலை முழுவதுமாக இழந்தவர். அமெரிக்காவின் மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், விளையாட்டு வீராங்கனையும் திகழும் மெலீஸா, ஈராக் போரின் போது அமெரிக்கா சார்பில் போர் முனைக்குச் சென்றவர். லெப்டினன்ட் அதிகாரியாக பாக்தாத் நகரச் சாலையில் ராணுவக் கண்காணிப்பு வாகனங்களை வழிநடத்தியவர்.

2004-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த மெலிசாவின் இடதுகால் துண்டிக்கப்பட்டது.. இந்த வகையில் ஈராக்கில் அமெரிக்காவுக்காக தனது காலை இழந்த முதல் ராணுவ வீராங்கனை இவர்தான். இந்த இழப்பால் அவர்
சோர்ந்துவிடவில்லை. காலை இழந்த மறு கணமே, விளையாட்டுப் போட்டிகளில் எப்படிப் பங்கேற்பது எனச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் இவர். குண்டுவெடிப்பில் சிக்கிய தாம் உயிருடன் இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்கிறபோது, இழந்துவிட்டதை எண்ணிக் கவலை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பது மெலிசாவின் கருத்து.

பாக்தாத்தில் குண்டுவெடிப்பில் குற்றுயிராகக் கிடந்த இவருக்கு 52 நாள்கள் தொடர் அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. தன்னம்பிக்கையுடன் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த பாராலம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற இவருக்கு, ஈராக் போர்முனையில் பணியாற்றிவிட்டு பாராலம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட முதல் நபர் என்ற பெருமை கிடைத்தது. 100 மீட்டர் ப்ரீஸ்டைல், 400 மீட்டர் ப்ரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்ப்ளை போன்ற போட்டிகளில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட மெலீசாவுக்குப் பதக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தொடர் தோல்விகளுக்குப் பிறகும் அவரது விளையாட்டுக் கனவுகள் முற்றுப்பெறவில்லை. பதக்கங்களைப் பெறாவிட்டாலும், சீன பாரலம்பிக் போட்டிகள் தமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத்தந்ததாகக் கூறிய மெலீசா, நீச்சல், சைக்கிள், ஓட்டம் ஆகியவற்றைக் கொண்ட பாரா ட்ரையத்லான் போட்டிகளுக்காகக் கடுமையாகப் பயிற்சி பெற்றார்.

2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் பாரா ட்ரையத்லான் உலகச் சாம்பியன் போட்டிகளில் அமெரிக்க அணிக்காகப் பங்கேற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத்தந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறந்த மாற்றுத்திறனாளி ட்ரையத்லான் வீராங்கனை என்ற பட்டமும் இவருக்கு அளிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டிகளில்தான் ட்ரையத்லான் போட்டிகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. மெலிசாவின் அடுத் இலக்கு, இதில் பதக்கங்களைக் குவிப்பதுதான்.

விளையாட்டு தவிர, மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையிலும் மெலீசாவுக்கு ஆர்வம் உண்டு. 2005-ம் ஆண்டு போரில் உறுப்புகளை இழந்தவர்களுக்கான அமைப்பில் இயக்குநர் குழுமத்தில் பங்கேற்றுள்ளார். இவரது ஆளுமை நிறைந்த பேச்சு, உலகம் முழுவதும் இவருக்கு பெரும்பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாழ்வில் தடைகளைத் தகர்த்து தன்னம்பிக்கை பெறுவதற்கு இவரது வாழ்வும் பேச்சும் உதாரணங்கள் என்று அமெரிக்கர்கள் போற்றுகிறார்கள். ஒரு காலைக் கொண்டு சாதித்திருப்பதை இருகால்கள் மூலம்கூடச் சாதித்திருக்க இயலாமல் போயிருக்கலாம் என்கிறார், இந்தத் தன்னம்பிக்கை நட்சத்திரம்.

No comments:

Post a Comment