FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, July 29, 2014

அமெரிக்காவின் தன்னம்பிக்கைப் பெண்: போரில் காலை இழந்த வீராங்கனை

வாழ்வின் நெருக்கடிகளில் மனம் தளரக் கூடாது, தடைகளை எதிர்த்துத் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என்பன போன்ற வரிகள் பேசுவதைப் போன்று செயலுக்கு எளிதானவை அல்ல. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் துணிச்சலாக எதிர்கொண்டார்.
மெலிஸா ஸ்டாக்வெல். மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் இவர், ஒரு காலை முழுவதுமாக இழந்தவர். அமெரிக்காவின் மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், விளையாட்டு வீராங்கனையும் திகழும் மெலீஸா, ஈராக் போரின் போது அமெரிக்கா சார்பில் போர் முனைக்குச் சென்றவர். லெப்டினன்ட் அதிகாரியாக பாக்தாத் நகரச் சாலையில் ராணுவக் கண்காணிப்பு வாகனங்களை வழிநடத்தியவர்.

2004-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த மெலிசாவின் இடதுகால் துண்டிக்கப்பட்டது.. இந்த வகையில் ஈராக்கில் அமெரிக்காவுக்காக தனது காலை இழந்த முதல் ராணுவ வீராங்கனை இவர்தான். இந்த இழப்பால் அவர்
சோர்ந்துவிடவில்லை. காலை இழந்த மறு கணமே, விளையாட்டுப் போட்டிகளில் எப்படிப் பங்கேற்பது எனச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் இவர். குண்டுவெடிப்பில் சிக்கிய தாம் உயிருடன் இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்கிறபோது, இழந்துவிட்டதை எண்ணிக் கவலை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பது மெலிசாவின் கருத்து.

பாக்தாத்தில் குண்டுவெடிப்பில் குற்றுயிராகக் கிடந்த இவருக்கு 52 நாள்கள் தொடர் அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. தன்னம்பிக்கையுடன் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த பாராலம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற இவருக்கு, ஈராக் போர்முனையில் பணியாற்றிவிட்டு பாராலம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட முதல் நபர் என்ற பெருமை கிடைத்தது. 100 மீட்டர் ப்ரீஸ்டைல், 400 மீட்டர் ப்ரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்ப்ளை போன்ற போட்டிகளில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட மெலீசாவுக்குப் பதக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தொடர் தோல்விகளுக்குப் பிறகும் அவரது விளையாட்டுக் கனவுகள் முற்றுப்பெறவில்லை. பதக்கங்களைப் பெறாவிட்டாலும், சீன பாரலம்பிக் போட்டிகள் தமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத்தந்ததாகக் கூறிய மெலீசா, நீச்சல், சைக்கிள், ஓட்டம் ஆகியவற்றைக் கொண்ட பாரா ட்ரையத்லான் போட்டிகளுக்காகக் கடுமையாகப் பயிற்சி பெற்றார்.

2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் பாரா ட்ரையத்லான் உலகச் சாம்பியன் போட்டிகளில் அமெரிக்க அணிக்காகப் பங்கேற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத்தந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறந்த மாற்றுத்திறனாளி ட்ரையத்லான் வீராங்கனை என்ற பட்டமும் இவருக்கு அளிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டிகளில்தான் ட்ரையத்லான் போட்டிகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. மெலிசாவின் அடுத் இலக்கு, இதில் பதக்கங்களைக் குவிப்பதுதான்.

விளையாட்டு தவிர, மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையிலும் மெலீசாவுக்கு ஆர்வம் உண்டு. 2005-ம் ஆண்டு போரில் உறுப்புகளை இழந்தவர்களுக்கான அமைப்பில் இயக்குநர் குழுமத்தில் பங்கேற்றுள்ளார். இவரது ஆளுமை நிறைந்த பேச்சு, உலகம் முழுவதும் இவருக்கு பெரும்பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாழ்வில் தடைகளைத் தகர்த்து தன்னம்பிக்கை பெறுவதற்கு இவரது வாழ்வும் பேச்சும் உதாரணங்கள் என்று அமெரிக்கர்கள் போற்றுகிறார்கள். ஒரு காலைக் கொண்டு சாதித்திருப்பதை இருகால்கள் மூலம்கூடச் சாதித்திருக்க இயலாமல் போயிருக்கலாம் என்கிறார், இந்தத் தன்னம்பிக்கை நட்சத்திரம்.

No comments:

Post a Comment