FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, July 10, 2014

அம்ருதா ப்ரியதர்ஷினி பாலனோ கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி!


கரை தெரிகிறது... பாய்மரம்
அவிழ்க்கப்பட்ட இரண்டு
சிறு கப்பல்கள் அலைகளில் ஏறி, கடலில் மிதந்தபடி செல்கின்றன...
ஏசுநாதர், தன் சீடர்களுடன் கடைசி விருந்தில் அர்த்தம் பொதிந்த அமைதியோடு
அமர்ந்திருக்கிறார்...
விதைகளும் சதைப்பற்றும்
பளிச்சிட மஞ்சள் பூசணி
துண்டு ஒன்று தரையில்
கிடத்தப்பட்டிருக்கிறது...
அத்தனையும் தத்ரூபமான
உயிர்ப்புள்ள ஓவியங்கள்...
பேசும் ஓவியங்கள்.

இவற்றை வரைந்த அம்ருதா ப்ரியதர்ஷினி பாலனோ கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி!

சென்னை, கிண்டியில் உள்ள அம்ருதாவின் வீட்டுக்குப் போனபோது, கண்ணன், ராதையுடன் காதல் வயப்படும் காட்சியை வரைந்து கொண்டிருந்தார். நம்மை மலர்ந்து வரவேற்று, சைகையாலும் எழுதியும் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் அதே முறையில் பதில்களை படபடவென சொல்கிறார் அம்ருதா. ‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். அப்பா பாலன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் டாக்டர். அம்மா பெட்ஸி பாலன் ஹோம் மேக்கர்.

சமூக விஷயங்கள்ல ஆர்வமாக ஈடுபடறவங்க. நான் ரெண்டாவது பொண்ணு. என் கூடப் பிறந்த ரெண்டு பேரும் நார்மலாத்தான் இருக்காங்க. அம்மா, அப்பா முகம் கண்டு சிரிக்க ஆரம்பிச்ச நேரம்... ஒருநாள் வீட்டுல பாத்திரங்கள்
எல்லாம் உருண்டு விழுந்திருக்கு... அவ்வளவு பெரிய சத்தத்துல நான் எந்த அசைவையும் காட்டாம அப்படியே இருந்திருக்கேன். அதைப் பாட்டி பார்த்துட்டாங்க. பயந்து போய், பாட்டியும் அம்மாவும் என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயிருக்காங்க. ‘கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, இனிமே எதுவும் பண்ண முடியாது’ன்னு கையை விரிச்சுட்டாங்களாம்.

அதுக்கப்புறம் மற்ற குழந்தைகளுக்கான வழக்கமான வாழ்க்கை எனக்கு கிடைக்கல. ஆனாலும், என் உலகம் சந்தோஷமானது தான். குறையை நினைச்சு கவலைப்படாம நிறைய விஷயங்களை தேடித் தேடி கத்துக்க ஆரம்பிச்சேன். லிட்டில் ஃபிளவர் பள்ளியில ஆரம்பக் கல்வி சேர்ந்தேன். மற்ற குழந்தைகளைப் போல வழக்கமான பள்ளியில படிக்கணும்னு எனக்கு ஆசை. அதை அம்மாகிட்ட சொன்னேன். அவங்க யோசிக்கவே இல்லை... வித்யோதயா ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க.

சாதாரண குழந்தைங்க மாதிரியே நானும் படிக்க ஆரம்பிச்சேன்...’’ - அம்ருதாவின் கண்கள் படபடக்கின்றன. சின்னஞ்சிறு வயதில் எத்தனையோ சிகிச்சைகள்... காக்ளியர் டிரான்ஸ்பிளான்ட் செய்தும் கூட பலன் இல்லை. டாக்டராக இருந்தும் மகளின் குறையை சரியான நேரத்தில் கவனித்து, தீர்வு காண முடியவில்லையே என்கிற வருத்தம் அப்பாவுக்கு இருந்திருக்கிறது. அந்தக் கவலைகளை தன் அபாரமான செயல்களால் விரட்டியடித்திருக்கிறார் அம்ருதா.

10ம் வகுப்பில் 86 சதவிகித மதிப்பெண்கள், பிளஸ் டூவில் 90 சதவிகிதம். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் விஷுவல் ஆர்ட்ஸ் கோர்ஸ் சேர்ந்தார். அப்போது தான் அம்ருதாவுக்கு ஓவிய ஈர்ப்பு அதிகமாகியிருக்கிறது. சிறு ஓவியங்களை பார்த்துப் பார்த்து வரைய ஆரம்பித்தபோதே நல்ல வரவேற்பு கிடைத்தது. அவ்வளவுதான்... ஓவியம்தான் எதிர்காலம் என்று தீர்மானித்துவிட்டார் அம்ருதா!

ஓவியத் தேடல் தொடரத் தொடர, அம்ருதாவுக்கு புதிய உலகம் வசப்பட ஆரம்பித்தது. பைபிள் கதாபாத்திரங்களை வரைய ஆரம்பித்தார். அது இவருடைய சிறப்புத் தன்மை என்கிற புகழையும் சர்வசாதாரணமாக தட்டிக் கொண்டு போக ஆரம்பித்தார். மொஹல், ராஜஸ்தானி ஓவியங்கள், 16ம் நூற்றாண்டு பாணி, சுடுமண் சிற்பம் போன்றவற்றையும் கற்றுத் தேர்ந்தவர் அம்ருதா. ‘‘ஓவியம் ஒரு பெரிய வரம். அதை நான் அனுபவத்துல உணர்ந்திருக்கேன். அக்ரிலிக் பெயின்டிங்ல ஆரம்பிச்சு போட்டோஷாப், இன்டிசைன், கிராஃபிக்ஸ் உள்பட நிறைய கத்துக்கிட்டேன்.

கல்லூரி அளவில் நிறைய போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசுகள் வாங்கியிருக்கேன். ஆனாலும், என்னோட ஓவியங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணும்னு நினைச்சேன். ரொம்ப யோசிச்சி, பைபிள் பாத்திரங்களை ஓவியங்களா வரையும் முயற்சி யில் இறங்கினேன். வீட்டுக்குப் பக்கத்துலயே சர்ச் இருக்கு. அங்கே இந்த ஓவியங்களைக் காட்டினேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. இன்னும் தீவிரமா அந்த வேலைல ஈடுபட்டேன். உழைச்சதுக்கும் திறமைக்கும் பலன் கிடைச்சது. கார்ப்பரேட் கம்பெனிகள் ஆர்டர்களை மொத்தமா கொடுக்க ஆரம்பிச்சாங்க...’’- சிரிக்கிறார் அம்ருதா.

No comments:

Post a Comment